Untitled Document
September 23, 2024 [GMT]
யாழ். மாவட்டத்தில் 25 ஆயிரம் வாக்குகள் நிராகரிப்பு!
[Sunday 2024-09-22 16:00]


யாழ் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

  

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 688 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களான சஜித் பிரேமதாச 1 இலட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும் , பா.அரியநேந்திரன் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளும் , ரணில் விக்ரமசிங்க 84 ஆயிரத்து 558 வாக்குகளும் , அநுரகுமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 086 வாக்குகளையும் பெற்றனர்.

அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



அனுரவுக்கு பூச்செண்டுடன் சென்று இந்தியத் தூதுவர் வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.



ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்!
[Monday 2024-09-23 06:00]

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார்.



அனுரவுக்கு வாழ்த்து - மக்கள் நலனை முன்னிறுத்தி ஒத்துழைக்கவும் தயார்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைக் கூறும் அதேவேளை, அவரால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முன்னெடுக்கப்படக்கூடிய மக்கள் நலனை மையப்படுத்திய சகல ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்ட சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டில் உள்ள பல பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Monday 2024-09-23 06:00]

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.



அனுரவுக்கு அமெரிக்கா வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



புதிய ஜனாதிபதி - சில தகவல்கள்!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க பற்றிய சில தனிப்பட்ட தகவல்கள்.



அனுரகுமார திஸநாயக்கவுக்கு கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்குக் கனடியத் தமிழர் பேரவை (CTC) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.



ஜனாதிபதி அலுவலகம், இல்லத்தை காலி செய்தார் ரணில்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமை​களை அகற்றியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பதவி விலகினார் நவீன்!
[Monday 2024-09-23 06:00]

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க நேற்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.



9 ஆவது ஜனாதிபதியாக அனுர தெரிவு!- அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Sunday 2024-09-22 20:00]

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.



முதல் சுற்று முடிவில் வாக்குகள் விபரம்!
[Sunday 2024-09-22 16:00]

2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.



முதல் முறையாக இரண்டாவது சுற்று ஆரம்பம்!
[Sunday 2024-09-22 16:00]

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததும் பதவியேற்பார் அனுர!
[Sunday 2024-09-22 16:00]

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



வெற்றியின் முதல் படி இது - பாராளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் களமிறங்குவோம்!
[Sunday 2024-09-22 16:00]

அரியநேந்திரனின் பெற்ற வாக்குகள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வெற்றி என்பதோடு பாராளுமன்ற தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் சஜித் வெற்றி- அரியத்திற்கு இரண்டாமிடம்!
[Sunday 2024-09-22 16:00]

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார்.



இரண்டாவது வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு!
[Sunday 2024-09-22 16:00]

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி நிலைமையைப் பொறுத்து அவசியமானால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என இன்று தெரிவித்துள்ளது.



அதிக பெரும்பான்மையுடன் அனுர வெற்றி பெறுவார்!
[Sunday 2024-09-22 16:00]

இரண்டாவது மூன்றாவது விருப்புவாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் பொதுமக்கள் அச்சமடையக்கூடாது என ஜேவிபியின் நாடாளுமன்ற விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருகோணமலை சஜித்திடம்!
[Sunday 2024-09-22 16:00]

திருகோணமலை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 120,588 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 49,886 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 40,496 வாக்குகளையும் அரியநேத்திரன் 18,524 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



நண்பகலுடன் ஊரடங்கு நீக்கம்!
[Sunday 2024-09-22 16:00]

இன்று நண்பகல் 12 மணி வரையுடன் ஊரடங்கு சட்டம்நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா