Untitled Document
September 23, 2024 [GMT]
மீன்பிடிக்கச் சென்றவர் படகில் சடலமாக மீட்பு!
[Monday 2024-09-23 17:00]


கடற்றொழிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். இன்று காலைவரை அவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்டவர்கள், பொன்னாலை கடலில் அவரது சடலம் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர். சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகிறது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் அனுர! Top News
[Monday 2024-09-23 17:00]

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



அனுரகுமாரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
[Monday 2024-09-23 17:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் வாழ்த்து!
[Monday 2024-09-23 17:00]

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்து தெரிவித்துள்ளது.



பிரதமர் தினேஷ் பதவி விலகினார்- அமைச்சரவையும் கலைந்தது!
[Monday 2024-09-23 17:00]

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அமைச்சரவை கலைந்தது.



புலமைப்பரிசில் வினாத்தாளை கசிய விட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கைது!
[Monday 2024-09-23 17:00]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



அனுரவுக்கு மோடி வாழ்த்து!
[Monday 2024-09-23 17:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



இனி தேர்தல்களில் போட்டியில்லை!
[Monday 2024-09-23 17:00]

எந்தவொரு தேர்தலிலும் தான் இனிமேல் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.



பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன!
[Monday 2024-09-23 17:00]

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆவார்.



புதிய பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துயகொந்தா!
[Monday 2024-09-23 17:00]

புதிய பாதுகாப்புச் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொந்தா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். துயகொந்தா விமானப்படையில் 33 வருடங்களுக்கும் மேலாக சேவையில் இருந்து 2021 நவம்பர் 26 அன்று ஓய்வு பெற்றார்.



அனுரவுக்கு பூச்செண்டுடன் சென்று இந்தியத் தூதுவர் வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.



ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்!
[Monday 2024-09-23 06:00]

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார்.



அனுரவுக்கு வாழ்த்து - மக்கள் நலனை முன்னிறுத்தி ஒத்துழைக்கவும் தயார்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைக் கூறும் அதேவேளை, அவரால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முன்னெடுக்கப்படக்கூடிய மக்கள் நலனை மையப்படுத்திய சகல ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்ட சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டில் உள்ள பல பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Monday 2024-09-23 06:00]

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.



அனுரவுக்கு அமெரிக்கா வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



புதிய ஜனாதிபதி - சில தகவல்கள்!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க பற்றிய சில தனிப்பட்ட தகவல்கள்.



அனுரகுமார திஸநாயக்கவுக்கு கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து!
[Monday 2024-09-23 06:00]

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்குக் கனடியத் தமிழர் பேரவை (CTC) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.



ஜனாதிபதி அலுவலகம், இல்லத்தை காலி செய்தார் ரணில்!
[Monday 2024-09-23 06:00]

நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமை​களை அகற்றியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பதவி விலகினார் நவீன்!
[Monday 2024-09-23 06:00]

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க நேற்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.



9 ஆவது ஜனாதிபதியாக அனுர தெரிவு!- அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Sunday 2024-09-22 20:00]

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா