Untitled Document
October 6, 2024 [GMT]
இன்னொரு அத்திப்பட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கப்பூது கிராமம்! Top News
[Sunday 2024-10-06 04:00]


வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட மிக பழமையானது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும்.

வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட மிக பழமையானது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும்.

  

களப்புபகுதியை வெளிப்புறமாகக் கொண்டு இயற்கை வனப்புகளால் அழகை அள்ளி சொரிகிறது அந்த கப்பூது கிராமம்.

யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி, பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது.

கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் தான் அதிகமாக அங்கு இருக்கின்றனர்.

தாம் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை விட்டுப் போக மனமில்லாமல் செத்தாலும் இந்த மண்ணில் இருந்து சாவோம் என்று இருக்கின்றனர்

இதேவேளை சனத்தொகை குறைவடைந்தாலும் அண்மையில் இடம்பெற்ற இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தேர்வு செய்யும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வாக்களிப்பு நிலையமும் அந்த பகுதியில் இயங்கா நிலையில் இருக்கின்ற பாடசாலையில் தேர்தல் வாக்களிப்பு நிலையமாக இயங்கியிருக்கின்றது

குறித்த பகுதியில் 196 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 101 பேரே வாக்களித்திருக்கின்றனர்

இதேவேளை இந்த 196 வாக்காளர்களில் பலர் தங்கள் பிள்ளைகளின் கல்வி கற்றல் மற்றும் நகரமயமாதல் வளர்சி வாய்ப்புககளை தேடி வெளியிடங்களில் தங்கி இருக்கின்றனர்

இதேவேளை பல பேர் அயல் பிரதேசங்களுக்கு சென்று குடியேறி உள்ளனர் கிராமசேவகர் அலுவலகம் ஒன்று பாடசாலை இருந்த வளாகத்தில் இருக்கின்றது

வாரத்துக்கு ஒரு தடவை எப்போதாவது திறந்திருக்கும் சில நேரம் கடமைகளுக்கு உத்தியோகத்தர் வருவதில்லை, அயற்கிராமங்களிலே கடமைக்கு வருவதாகவும் அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஆதங்கப்பட்டு பேசியிருந்தார்

போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதி மக்கள் இராணுவத்தின் அழுத்ததிற்கு முகம் கொடுத்து வந்தனர். போராட்ட காலப் பகுதியில் பல இளைஞர்கள் யுவதிகள் தொடக்கம் குழந்தைகள் முதியவர் வரை இராணுவத்தினரால் கட்டி வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய மறக்க முடியாது இன்றும் இருக்கிறது.

அந்த நாள்களில் இராணுவத்தினரின் கூடுதலான அழுத்தங்கள் இருந்தாலும் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுக்காமல் விடுதலைப் புலிகளை பாதுகாத்த வரலாறு இந்த கிராமத்துக்கு உண்டு.

விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது ஒரு பிரதேசத்தில் தாக்குதலை மேற்கொண்டு விட்டு இந்த கிராமத்தின் ஊடாகத் தான் சென்று அடுத்த பிரதேசத்துக்குள் நுழைவார்கள்.

யாழில் விடுதலைப் புலிகள் இலகுவாக போர் செய்வதற்கு வாதரவத்தை மற்றும் கப்பூது கிராமங்கள் பயன்பட்டது என்பது இன்றும் பலருக்குத் தெரியாது.

இந்தக் கிராமத்துக்கான வீதியின் இருமருங்குகளும் ஒருவழி தரைப்பாதையே போக்குவரத்து பாதையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பாதையாக செல்லும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும்.

காரணம் ஈழப்போராட்டத்திற்கு இந்த கிராமம் தளபதி விதுசாவை உவந்தளித்த பெருமைக்குரிய மண். பெண் தளபதிகளில் பெயர் சொல்லும் தளபதி விதுசா. பல களமுனைகளைக் கண்ட தளபதி விதுசா. அதனால் தான் என்னவோ இந்த கிராம மக்கள் போராட்டத்திற்கு துணையாக அதிகம் உழைத்தனர்.

இன்றும் இந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஆலய பூசகராக கந்தையா எனப்படும் விதுசாவின் தந்தையே பூசை செய்து வருகிறார். தன்மகளை மண்ணுக்காக தந்துவிட்டு விதுசாவின் தயார் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறார்.

அச்சு அசலாக இன்னொரு விதுசாவை மனக்கண்முன் கொண்டு வந்து ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அவரின் தோற்றம் அமைகிறது. இக்கிராமத்தில் ஒரு பாடசாலை தான் இருந்தது. அந்தப் பாடசாலையும் இயங்காமல் பலவருடங்கள் கடந்து விட்டன.

இதனால் இந்தக் கிராம மக்களில் பலர் அயல் கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பாடசாலை தனது செயற்பாடுகளை இடைநிறுத்தி கொள்வதற்கு முன் இறுதியாக 12 பிள்ளைகள் கல்வி கற்றனர்.

16 கிலோமீற்றர் தாண்டி மண்டான் பகுதியில் இருந்து குழாய் மூலம் இந்தக் கிராமத்துக்கு தண்ணீர் வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது என்றாலும் நெல்லியடிக்குச் சென்று வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் பொலிஸ் முறைப்பாடுகள் செய்வதற்காக கூட 15Km தூரமுள்ள நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் இன்று உள்ளனர்.

ஏதாவது குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக நடவடிக்கை செய்வதற்கான எந்த திட்ட வரைவுகளும் இந்த கிராமத்தில் இல்லை

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்பகுதி மக்கள் வடமராட்சி பகுதியில் குடிபெயர்ந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நிறுத்த சமாதான காலப் பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் பல்கிப் பெருகிக் காணப்பட்டனர்.

அன்று குடியிருப்புக்களாக காணப்பட்ட இக் கிராமத்தின் தற்போதைய சூழல் திரைப்பட நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் வரும் இந்தியாவின் அத்திப்பட்டி கிராமத்தை தான் ஞாபகமூட்டும் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எவருமே கண்டு கொள்ளாத கிராமமாக மாறிவிட்டது.

தமிழர்களை உலகறியச் செய்த விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றிய இந்தக் கிராமத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே தலைகுனிவாகும்.

1987 வடமராட்சிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசன் என்ற பெயர் சூட்டி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிப் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இந்தக் காலப் பகுதியில் யாழ்பாணத்திற்கும்-வடமராட்சிக்குமான பிரதான இணைப்பு வீதியாக இந்த கப்பூது வீதியே காணப்பட்டிருந்தது.

போர் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் இன்று மக்கள் குறைவாக வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தை தெரியாத விடுதலைப் புலிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்.

இருந்தும் வீரதீர வசனங்கள் பேசும் எங்கள் தமிழ் சமூகம் யுத்தத்தின் பின்னராக சாதித்தது என்ன என்றால் சுழியம் (0) மட்டுமே மிச்சம்

இருந்தும் இன்னொரு அத்திப்பட்டியை தடுக்க யாருளர்?

சுவடியாக்கம்-

சின்னராசா கணேஷதாசன்

(ஊடகவியலாளர்)

  
   Bookmark and Share Seithy.com



தேர்தலுக்கு முன் புதுடெல்லிக்கு பயணம்- ஜனாதிபதி அனுர திட்டம்!
[Sunday 2024-10-06 17:00]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு அரசிடம் கோரிக்கை!
[Sunday 2024-10-06 17:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.



அரசியில் செயற்கை சாயம் கலந்த யாழ். பிரபல அரிசி ஆலை உரிமையாளருக்கு அபராதம்!
[Sunday 2024-10-06 17:00]

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



ஆசிரியரின் வீடு, மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் தீக்கிரை!
[Sunday 2024-10-06 17:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.



அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் மஹிந்த!
[Sunday 2024-10-06 17:00]

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.



விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி மரணம்!
[Sunday 2024-10-06 17:00]

வடமராட்சி - கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள்!
[Sunday 2024-10-06 17:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த அரசாங்கத்தினால் 07 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.



உருளைக்கிழங்கு, வெங்காயத்துக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!
[Sunday 2024-10-06 17:00]

கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட இறக்குமதி வரியை அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



இன்றும் கூடிய தமிழரசின் தேர்தல் நியமனக் குழு!
[Sunday 2024-10-06 17:00]

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்றும் கூடியது.



முட்டை விலை அதிகரிப்பு!
[Sunday 2024-10-06 17:00]

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.



காலநீடிப்பு தீர்மானம் புதனன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும்!
[Sunday 2024-10-06 04:00]

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.



குச்சவெளி விவசாயிகளை சொந்த நிலத்தில் பயிரிட விடாமல் தடுக்கும் பிக்கு!
[Sunday 2024-10-06 04:00]

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.



மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டியது மிகவும் அவசியம்!
[Sunday 2024-10-06 04:00]

நாட்டின் பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பினும் நலிவுற்ற நிலையும், நிச்சயமற்ற தன்மைகளும் நிலவுவதனால், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குவேண்டியது மிகவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் வலியுறுத்தியுள்ளார்.



தமிழர் தேசத்தில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!
[Sunday 2024-10-06 04:00]

தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மீண்டும் ரணிலே தலைமை!
[Sunday 2024-10-06 04:00]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.



தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!
[Sunday 2024-10-06 04:00]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும். பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராமண்ய பீட மகாநாயக்க தேரரிடம் குறிப்பிட்டார்.



காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலர்!
[Sunday 2024-10-06 04:00]

காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.



தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக இரண்டு ஆசனங்களை பறிகொடுக்கும் தமிழ் அரசு கட்சி!
[Sunday 2024-10-06 04:00]

தமிழரசுக்கட்சியானது ஒரு தேசியபட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்ப்படுத்தப்போவதாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.



பட்டாசு கொளுத்த தடை!
[Sunday 2024-10-06 04:00]

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தமிழரசில் போட்டியிட பெண்கள் தயக்கம் - வேட்பாளர் பட்டியலை இறுதி முடியாமல் நெருக்கடி! Top News
[Saturday 2024-10-05 17:00]

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா