Untitled Document
October 18, 2024 [GMT]
நீயுமா அனுர?
[Friday 2024-10-18 16:00]

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார்.

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார்.

  

ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா அளித்த நேர்காணலில் கூறியதில் எனக்கு உதிர்த்த எண்ணக்கருவே இது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமில்லை. அரசியல் இருப்பைத் தக்கவைக்க தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதுடன் மேலும் வடக்கின் மக்களது பிரச்சினை தமது தொழில் தமது உற்பத்தி தமது உற்பத்தியை சந்தைப்படுத்துதல் தமக்குத் தேவையான வைத்தியசாலை வசதிகளே அவர்களது தேவைப்பாடாக இருக்கிறது என்றும் வழி மொழிந்துள்ளார்.

“ இதிலும் ரில்வின் சில்வா, தமிழர்களது தாயகம் வட கிழக்கு என்பதை மறுத்து வடக்கு என்பதாகவே ஒப்புவித்துள்ளார். ரில்வின் சில்வா அன்று போல இன்று எதிர்க்கட்சியில் இருந்து எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக கூறும் நபரல்ல. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜே.வி.பி.யின் செயலாளர். தற்போது அக் கூட்டணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக உள்ளார்.

“ அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோசம் முறைமை மாற்றம் தேவை என்பதே. முறைமை மாற்றத்துக்கு நாம் ஒன்றும் எதிரானவர்கள் அல்ல. அதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களிடம் நான் தொடுக்கும் வினாக்களே இவை. 1971ஆம் ஆண்டு ரோஹன விஜயவீர தலைமையில் ‘துப்பாக்கியிலிருந்து அதிகாரம் பிறக்கிறது’ என்ற மாவோ சித்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசியலில் ஆயுதக்கிளர்ச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அது சரி பிழை என்பதல்ல எனது இப்போதைய நிலைப்பாடு.

“அவரது அன்றைய கிளர்ச்சியின் மூல நோக்கம் வர்க்க முரண்பாட்டை அடிப்படையாக வைத்ததே. சிங்கள மேலாதிக்கத்திற்கும் சிங்கள வாழ்வாதாரத்துக்குமான முரண்பாட்டை சமப்படுத்தவே அவர் ஆயுதம் ஏந்தினார். அந்த ஆயுதக் கிளர்ச்சி தோல்வியில் முடிந்த பின்னர் அவரது தலைமையில் ஏற்பட்ட இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியில் முடிந்தது. அது மாத்திரமல்ல. மனித உரிமைகளுக்கு மாறாக அவரது படுகொலையிலும் முடிந்தது. அதன் பரிணாம வளர்ச்சியாக இன்று ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க எழுச்சிபெற்றுள்ளார். அதுவும் எமது பிரச்சினையல்ல. ஆனால், வட கிழக்கு வாழ் தமிழ்த் தேசியம் நாடும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கும்.

“தெற்கில் ரோஹன விஜயவீர தலைமையில் ஆயுதம் ஏந்தியமைக்கும் இடையிலான வித்தியாசத்தை ரில்வின் சில்வா புரிந்து கொள்ளவில்லையா வட - கிழக்கு தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது. தமக்கு விவசாயம் நிலம் இல்லை. தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வசதியில்லை. தமக்கு வைத்தியசாலை வசதியில்லை, என்பதற்காகவா? இல்லை இந்த நாட்டில் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக, வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதற்காகவா என்பதை ஏனைய சிங்களத் தலைவர்களைப்போலவே இடது சாரியான ரில்வின் சில்வாவும் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. இடதுசாரி சிந்தனைகளுக்கு நாம் எப்போதும் எதிரானவர்களல்ல.

“இடதுசாரிகள் எப்போதும் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலும் வைக்கக்கூடாது என்பதே எமது கொள்கை. ஆட்சிக்காக சிங்களம் மட்டுமென்ற பண்டாரநாயக்காவும் அன்று மாற்றத்தை நோக்கிய தலைவராகவே சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். அது போலவே மாற்றத்தை நோக்கிய தேசிய மக்கள் சக்தியும் போலி இடதுசாரித்துவம் பேசுகின்றதா? ஒரு நாட்டில் வாழும் மக்கள் தாம் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படும் போது ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படும் போது ஆட்சியாளர்களின் சட்டம் தமக்கு எதிராக இயற்றப்படும் போது தமது உரிமையினை வலியுறுத்த, தமது மொழியினைப் பாதுகாக்க, தமது மண்ணினைப் பாதுகாக்க, தமது பண்பாட்டைப் பாதுகாக்க, தமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டியது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும்.

“மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரது சுயநிர்ணய உரிமை கருத்தின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய எண்ணக்கரு எம் தமிழர்கள் மத்தியில் முளைத்தது. இதுவே எமது ஆயுதப்போராட்டமாகவும் பரிணமித்தது. உங்களது ஆயுதப் போராட்டம் அதிகார வெறி கொண்டவர்களால் தோற்கடிக்கப்பட்டது போலவே எமது மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டமும் தோற்கடிக்கப்பட்டது. ஒருவகையில் நம் இரு தரப்பும் தத்தமது கொள்கையில் சமமானவர்களே. ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா?

“கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவியில் இருக்கும் போது வடக்கு - கிழக்கு தமிழர் பிரச்சினை தொடர்பாக தாம் எக்கருத்தையும் கூறமாட்டார்கள். அமைச்சர்கள் மூலம், தமது கருத்தை வெளிப்படுத்துவார்கள். அத்தகைய தொடர்ச்சியா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வாவின் கருத்து. எனக்கு இப்போது சேக்ஸ்பியரின் நாடக வசனம் ஒன்று ஞாபகம் வருகிறது. 'நீயுமா புரூட்டஸ்' இப்போது எனது கேள்வி நீயுமா அனுர” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தியாகி பொன்.சிவகுமாரன் சிலை முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சுயேட்சைக் குழு! Top News
[Friday 2024-10-18 16:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழு 13 இன் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.



முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!
[Friday 2024-10-18 16:00]

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



தம்பலகாமம் கைகலப்பில் காயமடைந்தவர் மரணம்!
[Friday 2024-10-18 16:00]

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.



மின்சாரக் கட்டணத்தை 45 வீதம் குறைக்க முடியும்!
[Friday 2024-10-18 16:00]

இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை என ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.



உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது!
[Friday 2024-10-18 16:00]

உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சர்வதேச நாணய நிதியத்துடன் ஏன் பேச்சு நடத்தவில்லை?
[Friday 2024-10-18 16:00]

“ஏன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிச்சுமையை குறைக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.



வன்னியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!
[Friday 2024-10-18 16:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்காக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



கட்டுப்பாட்டு விலையை தாண்டியது அரிசி! - செயற்கைத் தட்டுப்பாடு.
[Friday 2024-10-18 16:00]

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால், சந்தையில் நாட்டு அரிசியின் விலை அதிகரித்துள்ளது. நெல் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக, சங்கத்தின் தலைவர் ரஞ்சித் தெரிவித்தார்.



கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தால் பயணம் செய்ய 3 நாட்களுக்குத் தடை!
[Friday 2024-10-18 16:00]

கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.



விசாரணை அறிக்கை விளையாட்டுப் பொம்மை அல்ல!
[Friday 2024-10-18 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



வேட்பாளர்கள் செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு!
[Friday 2024-10-18 05:00]

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேற்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் 2023 இல 03 எனும் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 03ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட முடியுமான செலவு எல்லைகள் திர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



தமிழ் மக்கள் தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும்!
[Friday 2024-10-18 05:00]

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும்!
[Friday 2024-10-18 05:00]

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



தேசியப்பட்டியல் ஆசனம் கேட்கிறார் தமிதா!
[Friday 2024-10-18 05:00]

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகையும் அரகலய செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன, அக்கட்சியிடம் இருந்து தேசிய பட்டியல் ரீதியிலான இடத்தை கோரியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிடம் இருந்து ஒரு தேசிய பட்டியல் இடத்தை கோரியதாக அபேரத்ன கூறினார். எனது கோரிக்கைக்கு கட்சித் தலைமை இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



தபால் மூலம் வாக்களிக்க ஏழரை இலட்சம் பேர் விண்ணப்பம்!
[Friday 2024-10-18 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சங்கு கூட்டணிக்கு வியாழேந்திரன் ஆதரவு!
[Friday 2024-10-18 05:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்! - அங்கஜன் அறிக்கை.
[Friday 2024-10-18 05:00]

கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.



பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள்!
[Friday 2024-10-18 05:00]

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவித்துள்ளது.பெறப்பட்ட புகார்களில் 181 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 76 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!
[Friday 2024-10-18 05:00]

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.



முன்னணி 10 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!
[Thursday 2024-10-17 18:00]

தமிழருடைய ஆதரவோடு ஒற்றையாட்சி அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட்டதாக வரப்போகும் வரலாற்றுத் தவறைத் தடுக்க, வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் எனவும், அதுவே தமது இலக்கு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா