Untitled Document
October 23, 2024 [GMT]
ரணிலின் விசாரணை அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!
[Wednesday 2024-10-23 18:00]


“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டவை என்பதால் இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறும் வரை நாங்கள் மெளனிக்க போவதில்லை” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டவை என்பதால் இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறும் வரை நாங்கள் மெளனிக்க போவதில்லை” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

  

அதேவேளை, இரகசிய அறிக்கை என்று குறிப்பிட்டே எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், உதய கம்மன்பில அரங்கேற்றிய நாடகத்தை தொடர்ந்து அதன் இரகசியம் உடைக்கப்பட்டுள்ளது. கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே தேர்தலுக்கு முன்னர் கத்தோலிக்க ஆயர்கள் சபையிடம் பொய்கூறி அவசரமாக இந்த அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

ஏ.என்.ஜே.டி.அல்விஸ் அறிக்கை நேரடியாக கத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் எரல் அண்டனி பெரேரா ஆண்டகைக்கே அனுப்பி வைக்கப்பட்டது. முதலாவது அறிக்கை செப்டெம்பர் 17 ஆம் திகதி அதாவது தேர்தலுக்கு மூன்று தினங்கள் இருக்கும்போது எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன் இந்த அறிக்கை இரகசியமானது என்று கடிதத்தினூடாக அறிவித்திருந்தார்கள். இரகசிய அறிக்கையாக அதனை அவர்கள் அனுப்பி வைத்திருந்ததால் அதனை வெளியிடுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கவில்லை. இந்த அறிக்கையில் இரகசியத் தன்மை எதுவும் இல்லை என்று இதுவரையில் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இருந்தபோதும், உதய கம்மன்பில அரங்கேற்றிய நாடகத்தை தொடர்ந்து அதன் இரகசியத் தன்மை உடைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது இந்த அறிக்கை தொடர்பில் எங்களால் பேச முடியுமென்று நாங்கள் நம்புகிறோம். அதனால் இது மூடிமறைக்க வேண்டிய விடயமில்லை என்றும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் விடயங்கள் எங்களுக்கு அவசியமற்றது.

எங்களுக்கான நீதியையே கோருகிறோம். அதற்கு சுதந்திரமான சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அவ்வாறிருக்கையில், ஜனாதிபதியின் நியமனங்கள் தொடர்பில் கருத்து வெளியிட எங்களுக்கு உரிமை இல்லை. விசாரணைகள் இடம்பெறுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பலமுறை ஒவ்வொரு ஜனாதிபதிகளுக்கும் எங்களின் விடயங்களையும் சந்தேகிக்கும் விடயங்களையும் கடிதத்தினூடாக அறிவித்திருக்கிறோம். ஆனால் அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. ஒன்றரை வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் அதில் சில குறைபாடுகள் இருக்கின்றன.

பரிந்துரைகள் மாத்திரமே எங்களுக்கு கிடைத்தன. சில காலங்களின் பின்னரே மேலும் சில உள்ளடக்கங்கள் கிடைத்தன. ஆனால், அரச இரகசியம் தொடர்பான பகுதி எங்களுக்கு கிடைக்கவில்லை. நீதியரசர் விஜித் மலல்கொடவின் அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தது.

எங்களுக்கு கிடைத்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதனை செயற்படுத்தாதவர்களின் பங்களிப்பு தொடர்பிலான யோசனைகள் மாத்திரமே அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதேபோன்று, செனல் 4 நிறுவனத்தின் ஆவணப்படம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கை இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. எங்களுக்கும் இன்னும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை. கத்தோலிக்க ஆயர்கள் சபைக்கு பொய்கூறி தவறான பாதயை காண்பிப்பதற்காகவே இந்தக் குழுக்களை பயன்படுத்தி கொள்வதற்கே தேர்தலுக்கு முன்னர் இந்த அறிக்கைகளை அவசரமாக தயாரித்து கொடுப்பதற்கான அடிப்படைக் காரணமாக இருக்குமென நாங்கள் கருதுகிறோம்.

இரண்டாவது குழுவின் அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. செனல் 4 நிறுவனத்தின் ஆவணப்படம் தொடர்பில் சரியான சாட்சிகளை விசாரணை செய்தார்களா என்பது எங்களுக்கு தெரியாது. அதுதொடர்பான அறிக்கையொன்றும் எங்களுக்கு கிடைக்கவும் இல்லை.

சனல் 4 வின் ஆவணப்படம் மிகவும் அவசியமானது. அந்த ஆவணப்படத்தில் நபரொருவர், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்களினூடாக பண உதவி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். ஆகவே, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் இதுதொடர்பில் கட்டாயம் விசாரணை செய்தே ஆக வேண்டும்.

இவ்விரு குழுக்களின் கூட்டங்களில் எங்களின் சட்டத்தரணிகளுக்கோ அல்லது வேறு சட்டத்தரணிகளுக்கோ கேள்வி கேட்பதற்கு இடமளிக்கப்படவில்லை. இவ்விரு விசாரணைகளும் இரகசியமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளாகவே நாங்கள் கொள்கிறோம். அதனால், இவ்விரு அறிக்கைகளையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான முறையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தால் இன்னும் காலம் செலவாகியிருக்கும். ஆனால், மேலும் கீழுமாகவே இவ்விரு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

எங்களுக்கு கிடைத்துள்ள அல்விஸ் அறிக்கையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை மீளவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த பரிந்துரைகளை மீண்டும் அறிவிப்பதற்கு எதற்காக தனியான குழு நியமிக்க வேண்டும். அதற்கு ஒரு இணைப்பை பொருத்தும் வகையிலேயே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கை ஆழ்ந்து, வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட அறிக்கையும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் அறிக்கைகளை பெற்றுக்கொடுத்தோம் என்பதற்காகவே இந்த அறிக்கையை முன்வைத்திருக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படைவாதத்துக்கு இவர்கள் ஏழு பேரையும் உட்படுத்தியவர்கள் யார் என்பதை முதலில் தேடிப்பார்க்க வேண்டும். இரண்டாவது இந்த விடயம் தொடர்பில் அறிந்தும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய விசாரணைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு நிதி, வெடிபொருட்கள், பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். இதுதொடர்பில் எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். ஆனால் அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு விசாரணைகள் இடம்பெற்றால் மாத்திரமே சரியான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் நாங்கள் அமைதி காக்க மாட்டோம். அதுவரையில் குரல் கொடுப்போம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



அறுகம்பையில் தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



ரஷ்யா, பிரித்தானியாவும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பிரஜைகள் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இஸ்ரேலியர்களை வெளியேற உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.



அறுகம்பை அச்சுறுத்தல் - பொலிஸ் கூறுவது என்ன?
[Wednesday 2024-10-23 18:00]

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் இன்று தெரிவித்துள்ளது.



ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2024-10-23 18:00]

அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.



சிறிரெலோ உதயராசாவின் வேட்புமனுவை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.



யாழ்ப்பாணத்தில் தபால்பெட்டி வேட்பாளர் மரணம்!
[Wednesday 2024-10-23 18:00]

நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் வேட்பாளரே உயிரிழந்துள்ளார்.



மானிப்பாயில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
[Wednesday 2024-10-23 18:00]

யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.



அரசாங்கம் கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது!
[Wednesday 2024-10-23 18:00]

அல்விஸ் அறிக்கையை ஏற்க முடியாது என்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த குழுவின் தலைவராக பதவி வகித்த நீதியரசர் (ஓய்வுநிலை) அல்விஸ் 2006 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களை இரத்து செய்ய முடியுமா ? எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.



யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கமாட்டேன்!
[Wednesday 2024-10-23 04:00]

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வன்னி வேட்பு மனு நிராகரிப்பு வழக்கு- இன்று தீர்ப்பு!
[Wednesday 2024-10-23 04:00]

வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) சார்பில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்த வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.



ஆணைக்குழுக்கள் குறித்து ரணில் இன்று விசேட அறிக்கை!
[Wednesday 2024-10-23 04:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.



ரஷ்யாவில் சிக்கியுள்ள இராணுவத்தினர் - கைவிரிக்கிறது அரசாங்கம்!
[Wednesday 2024-10-23 04:00]

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம். அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இணைந்துள்ளதால் இராஜதந்திர ரீதியில் இவ்விடயத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.



தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும்!
[Wednesday 2024-10-23 04:00]

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியிப் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.



சுவரொட்டி வழக்கு - வவுனியாவில் ஸ்ரீரங்கா பேட்டி!
[Wednesday 2024-10-23 04:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, நேற்று வவுனியாவில், ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.



நீதியரசர்கள் குழுவின் அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டதா?
[Wednesday 2024-10-23 04:00]

ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் விசாரணை அறிக்கையை அரசியல் நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டது என எவ்வாறு தெரிவிக்க முடியும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.



கட்டுநாயக்கவில் சிக்கிய ஐஸ், குஷ்!
[Wednesday 2024-10-23 04:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருளின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



மீனவர் பிரச்சினை - ஜனாதிபதியின் செயலாளருடன் இந்தியத் தூதுவர் பேச்சு!
[Wednesday 2024-10-23 04:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.



சீனத் தூதரக அதிகாரியும் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு!
[Wednesday 2024-10-23 04:00]

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.



அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது!
[Tuesday 2024-10-22 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா