Untitled Document
October 24, 2024 [GMT]
தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து 3 வாரங்களுக்கு முன்னரே பேசினோம்!
[Thursday 2024-10-24 05:00]


அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

"மத்திய கிழக்கில் யுத்த சூழல் ஆரம்பமானதுடன், பயங்கரவாத செயற்பாடுகள் பல்வேறு தரப்பினருக்கும் பரவியிருந்தன. இலங்கைக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால், புலனாய்வு அமைப்புகள் அது தொடர்பாக மிகச் சிறப்பாக விசாரணை நடத்தினர். ஒக்டோபர் 07ஆம் திகதி இது தொடர்பான உளவுத்துறை எமக்கு கிடைத்தது.

சில வெளிநாட்டு பிரஜைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபையில் பேசப்பட்டது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றனர்.

அறிவுறுத்தல்களின்படி, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு, அவர்கள் உள்ள இடங்களின் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர்.

இந்த பாதுகாப்பு பணிக்காக நேற்றுமுன்தினம் (22) முதல் விசேட பாதுகாப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது." என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் மக்கள் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்!
[Thursday 2024-10-24 05:00]

கிழக்கில் தமிழர்கள், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை கருத்தில்கொண்டு தமிழ் தேசியத்தினை கொண்டு செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



தாக்குதல் குறித்து உசார்படுத்திய இந்திய புலனாய்வுத் துறை!
[Thursday 2024-10-24 05:00]

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.



திருமலையில் 80 வீதம் வாக்களித்தால் இரண்டு பிரதிநிதித்துவங்களை பெறலாம்!
[Thursday 2024-10-24 05:00]

இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.



லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்த ட்ரோன்!
[Thursday 2024-10-24 05:00]

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று பிற்பகல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை விமானப்படை மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக புத்தளத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



யூடியூபரின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு!
[Thursday 2024-10-24 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை நிராகரித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து யூடியூபர் அஷேன் சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.



சீயோன் தேவாலயம் அருகே நடமாடியவர்கள் கைது!
[Thursday 2024-10-24 05:00]

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்



வாக்காளர் அட்டை விநியோகம் 27ஆம் திகதி ஆரம்பம்!
[Thursday 2024-10-24 05:00]

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



அறுகம்பையில் தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



ரஷ்யா, பிரித்தானியாவும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பிரஜைகள் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இஸ்ரேலியர்களை வெளியேற உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.



அறுகம்பை அச்சுறுத்தல் - பொலிஸ் கூறுவது என்ன?
[Wednesday 2024-10-23 18:00]

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் இன்று தெரிவித்துள்ளது.



ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2024-10-23 18:00]

அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.



சிறிரெலோ உதயராசாவின் வேட்புமனுவை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.



ரணிலின் விசாரணை அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!
[Wednesday 2024-10-23 18:00]

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டவை என்பதால் இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறும் வரை நாங்கள் மெளனிக்க போவதில்லை” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தபால்பெட்டி வேட்பாளர் மரணம்!
[Wednesday 2024-10-23 18:00]

நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் வேட்பாளரே உயிரிழந்துள்ளார்.



மானிப்பாயில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
[Wednesday 2024-10-23 18:00]

யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.



அரசாங்கம் கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது!
[Wednesday 2024-10-23 18:00]

அல்விஸ் அறிக்கையை ஏற்க முடியாது என்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த குழுவின் தலைவராக பதவி வகித்த நீதியரசர் (ஓய்வுநிலை) அல்விஸ் 2006 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களை இரத்து செய்ய முடியுமா ? எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.



யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கமாட்டேன்!
[Wednesday 2024-10-23 04:00]

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வன்னி வேட்பு மனு நிராகரிப்பு வழக்கு- இன்று தீர்ப்பு!
[Wednesday 2024-10-23 04:00]

வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) சார்பில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்த வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.



ஆணைக்குழுக்கள் குறித்து ரணில் இன்று விசேட அறிக்கை!
[Wednesday 2024-10-23 04:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா