Untitled Document
April 2, 2025 [GMT]
2029 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றுவோம்!
[Monday 2025-03-31 06:00]


 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்  ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

  

அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.

தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை முன்னெடுத்தோம். ஆகவே கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.

தேசிய பொருளாதாரத்தையும், கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது.இருப்பினும் அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கிராமிய பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுத்த புதிய திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தற்போது அழைப்பு விடுக்கும் ஆளுங்கட்சியினர் தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.இந்த அரசாங்கம் ஆறுமாத கால பதவியை நிறைவு செய்துள்ளது.இருப்பினும் எவ்விதமான புதிய திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!
[Wednesday 2025-04-02 05:00]

அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



இரண்டரை வயதில் ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை சரளமாக கூறும் யாழ்.சிறுமி!
[Wednesday 2025-04-02 05:00]

சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



தமிழர்களை மீண்டும் ஏமாற்றவே நாகவிகாரையில் கலந்துரையாடலுக்கு அழைப்பு!
[Wednesday 2025-04-02 05:00]

தையிட்டியில் சட்டவிரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



எரிபொருள் விலையை குறைக்க முடியாது!
[Wednesday 2025-04-02 05:00]

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன இன்று தெரிவித்தார்.



பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்த நிலையில் தமிழர்கள்!
[Wednesday 2025-04-02 05:00]

“பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலை” தான் இன்று ஈழத் தமிழர்களின் நிலை. நீலமும் பச்சையும் மாறி மாறி ஏமாற்றிய காலம் போய், இன்று சிவப்பும் ஏமாற்ற புறப்பட்டிருக்கிறது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது என்று பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
[Wednesday 2025-04-02 05:00]

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.



புதிய வாகனப் பதிவுகளுக்கே டின் எண் கட்டாயம்!
[Wednesday 2025-04-02 05:00]

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது.



பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
[Wednesday 2025-04-02 05:00]

பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



பேருந்துக் கட்டணம் கணிசமாக உயரும்!
[Wednesday 2025-04-02 05:00]

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாது!
[Tuesday 2025-04-01 16:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



தேர்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு!
[Tuesday 2025-04-01 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் செயற்பாடுகளை நாளை வரை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சொந்தமில்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச!
[Tuesday 2025-04-01 16:00]

அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் தெரிவித்தார்.



அச்சுவேலியில் வாள்வெட்டு - பெற்றோல் குண்டும் வீச்சு!
[Tuesday 2025-04-01 16:00]

அச்சுவேலி வடக்கு பகுதியில், திங்கட்கிழமை இரவு வாள்வெட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கு அந்தோணியார் கோயில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கபட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டுள்ளது



வியாழேந்திரன், சாமர சம்பத் விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2025-04-01 16:00]

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தமிழரசின் வேட்பாளர் வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Tuesday 2025-04-01 16:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது திங்கட்கிழமை இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளுக்கு ரின் எண் கட்டாயம்!
[Tuesday 2025-04-01 16:00]

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் TIN சமர்ப்பிப்பதற்கான தேவை அமல்படுத்தப்படும் என்று DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்தார். அதன்படி, தனிநபர்கள் DMT சேவைகளை அணுகும்போது அந்தந்த கருமபீடங்களில் தங்கள் TIN-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.



யாழ்.பல்கலைக்கழக பகிடிவதை- 4 மாணவர்கள் இடைநிறுத்தம்!
[Tuesday 2025-04-01 16:00]

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Tuesday 2025-04-01 16:00]

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.



முழங்காவிலில் பாடசாலை முன் பெற்றோர் போராட்டம்!
[Tuesday 2025-04-01 16:00]

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கெதிராக சமூகவலைத்தளங்களுடாக பரப்படும் அவதூறு பரப்புரைகளை தடுக்ககோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாயாறு கடலில் நீராடிய இரு யுவதிகள் பலி!
[Tuesday 2025-04-01 05:00]

முல்லைத்தீவு- நாயாறு கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.


Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா