Untitled Document
June 29, 2024 [GMT]
ஆசிய நாடொன்றில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள்!
[Saturday 2024-05-25 06:00]

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், கிர்கிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், கிர்கிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

  

மே 17ம் திகதி அதிகாலையில் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள விடுதிக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான கிர்கிஸ்தான் இளைஞர்கள் வெளிநாட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பல கிர்கிஸ்தான் ஆண்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பொலிசார் சம்பவயிடத்தில் இருந்த போதும் அவர்களால் வன்முறையை தடுக்க முடியாமல் போனது என்றே கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் சில பெண்கள் உட்பட பல மாணவர்களை அடித்துத் தாக்கினர். இப்படியான சம்பவம் முதல் முறையென குறிப்பிட்டுள்ள மாணவர் ஒருவர், உள்ளூர் மக்களை தூண்டிவிடும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து முறையான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றார்.

இதனிடையே, பாக்கிஸ்தான் அரசாங்கம் பிஷ்கெக்கிலிருந்து தினமும் புறப்படும் கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது மற்றும் பல மாணவர்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாக வீடு திரும்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிர்கிஸ்தானில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களிடையே பிரபலமாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் மலிவான கட்டணம், விலைவாசி உயர்வும் குறைவு. இதனிடையே வன்முறை சம்பவத்தை அடுத்து, கிர்கிஸ்தான் அரசாங்கம் மாணவர்கள் தலைவர்களுடன் பேசத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட தாக்குதல்தாரிகள் கைதாகியுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய மாலுமி: கிரேக்க தீவில் சோகம்!
[Saturday 2024-06-29 06:00]

கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) பிரித்தானிய மாலுமி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) அருகில் நாற்பது வயதுடைய பிரித்தானிய மாலுமி வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உள்ளூர் படகுப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறப்படும் அந்த மனிதர், கிரேக்க கடலோரக் காவல் படையினர் தகவலின்படி, தலையின் இடது பக்கத்தில் காயங்களுடன் ஒரு விரிகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.



உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?
[Saturday 2024-06-29 06:00]

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தப்படும் திட்டமாகும்.



இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு!
[Saturday 2024-06-29 06:00]

இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்!
[Friday 2024-06-28 19:00]

பிரான்ஸ் நாட்டைவிட்டு ஒரு தரப்பினர் வெளியேறுவதைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக, நன்கு படித்தவர்களாகிய, பிரான்ஸ் குடிமக்களான, இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஏராளமானோர், பிரான்சைவிட்டு அமைதியாக வெளியேறியுள்ளது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.



கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் பற்றிய தகவல்!
[Friday 2024-06-28 19:00]

கனடாவில் அதிக அளவில் வதிவுரிமை அந்தஸ்தினை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.



தாய்வான் வான் எல்லைக்குள் 10 சீன போர் விமானங்கள்!
[Friday 2024-06-28 19:00]

தாய்வானின் வான் பரப்புக்குள் பத்து சீன விமானங்கள் இவ்வார முற்பகுதியில் பிரவேசித்ததாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



மாலத்தீவு ஜனாதிபதிக்கு பில்லி, சூனியம் வைத்த இரு அமைச்சர்கள் கைது!
[Friday 2024-06-28 19:00]

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார்.



பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த மருத்துவ பணியாளர்!
[Friday 2024-06-28 06:00]

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில் சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.



வெளிநாடொன்றில் ரயிலும்-பஸ்ஸும் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
[Friday 2024-06-28 06:00]

ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் Nove Zamky என்ற நகரத்திற்கு அருகில் நேற்று மாலை 5 மணிக்கு சற்று பிறகு ரயிலும் பஸ்ஸும் மோதி கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.



இன்யூட் அடையாள மோசடி வழக்கு: கனேடிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை!
[Friday 2024-06-28 06:00]

கனடாவில் Inuit அடையாள மோசடி வழக்கில் டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவின் நுனாவுட்(Nunavut) நீதிபதி இன்யூட்(Inuit) பூர்வீக குடிமக்கள் அல்லாத டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.



பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்!
[Thursday 2024-06-27 06:00]

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



பாகிஸ்தானில் மர்மமான முறையில் 22 பேர் மரணம்!
[Thursday 2024-06-27 06:00]

பாகிஸ்தானின் கராச்சியில் மர்மமான முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இதனால், கராச்சியில் உச்சக்கட்ட உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.



மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது!
[Thursday 2024-06-27 06:00]

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman என்பவர், உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.



அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை!
[Wednesday 2024-06-26 16:00]

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளது.



கனடாவில் கைதான 124 பேர்: ஏன் தெரியுமா?
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.



பறந்து வந்த குப்பை பலூனால் விமான நிலையத்தை மூடிய தென் கொரியா!
[Wednesday 2024-06-26 16:00]

பறந்து வந்த வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியா விமான நிலையத்தில் விழுந்ததனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.



கனடா இடைத்தேர்தல்: ட்ரூடோ கட்சிக்கு தோல்வி!
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல தேர்தல்கள், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை தெளிவாகக் காட்டியுள்ளன. அது பிரித்தானியாவானாலும் சரி, ஜேர்மனியானாலும் சரி, ஆளும் கட்சியினர் பின்னடைவையே சந்தித்துள்ளார்கள்.



இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த பரிதாபம்!
[Wednesday 2024-06-26 06:00]

இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில்(treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.



கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்!
[Wednesday 2024-06-26 06:00]

கனடாவின் டொரண்டோவில் உள்ள விளையாட்டு திடல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரண்டோவில் உள்ள ஜேன் வீதி மற்றும் பால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானியாவுக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்!
[Wednesday 2024-06-26 06:00]

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்ததை ஏற்று, நீதிமன்றம் குற்றவாளிகளுடைய தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா