Untitled Document
September 21, 2024 [GMT]
ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
[Friday 2024-09-20 18:00]

லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவா கேலண்ட் போரின், புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்.

லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவா கேலண்ட் போரின், புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்.

  

எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும். அந்த பகுதியில் வளங்கள் மற்றும் படைகளையும் ஒதுக்கியுள்ளோம்.

எங்களுடைய திட்டம் தெளிவாக உள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதி சமூகத்தினரை அவர்களுடைய சொந்த வீட்டுக்குப் பாதுகாப்பாக திரும்ப செய்வதற்கான பணிகள் உறுதி செய்யப்படும்.

இதற்குப் பாதுகாப்பு சூழ்நிலை நிச்சயம் மாற்றப்பட வேண்டும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவின் $7மில்லியன் வெகுமதி: இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி பலி!
[Saturday 2024-09-21 07:00]

லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகளை ஏவி லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேலிய படைகளும் தீவிரமான வான்வழி தாக்குதலை முன்னெடுத்தனர். லெபனான் பெய்ரூட்(Beirut) பகுதி மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 59 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.



சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி!
[Saturday 2024-09-21 07:00]

சிங்கப்பூரில் ஷாப்பிங் மாலின் வாசலில் மலம் கழித்த இந்தியருக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் நுழைவு வாயிலில் 37 வயது இந்திய கட்டிட தொழிலாளி மலம் கழித்த குற்றத்திற்காக சுமார் S$400 (தோராயமாக ₹25,000) அபராதம் விதிக்கபட்டுள்ளது.



இஸ்ரேல்-லெபனான் இடையே பயங்கர ராக்கெட் தாக்குதல்: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடு!
[Saturday 2024-09-21 07:00]

லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.



புலம்பெயர் பணியாளர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு!
[Friday 2024-09-20 18:00]

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது பிரான்ஸ். திறன்மிகுப் பணியாளர்கள் பணி தேடும்போது, அதிக அளவில் பிரான்சில் பணி தேட ஆர்வம் காட்டுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, ஜூலை மாத நிலவரப்படி, அதிக ஊதியம் வழங்கும் பணிகள் என்றாலே, வெளிநாட்டவர்கள் பலரும் விரும்புவது பிரான்சைத்தான் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.



பூமிக்குத் திரும்ப முடியாததால் விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்!
[Friday 2024-09-20 18:00]

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடலாம் என்னும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.



உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம்!
[Friday 2024-09-20 18:00]

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன.



ரஷ்யாவிற்கு எதிராக இந்திய ஆயுதங்களைப் பயன்படுத்தும் உக்ரைன்!
[Friday 2024-09-20 06:00]

ஷ்யாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா இந்த ஆயுதங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்றது, ஆனால் இப்போது உக்ரைன் அவற்றைப் பயன்படுத்துகிறது. ரஷ்யாவின் எதிர்ப்புக்குப் பிறகும், அதைத் தடுக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது. ரஷ்யா இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தியாவிடம் புகார் அளித்ததாக மூன்று இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி அது கூறியது.



சர்ச்சையில் சிக்கிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
[Friday 2024-09-20 06:00]

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 100,000 பவுண்டுகள் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரித்தானியாவின் பிரதமரும் தொழிலாளர் கட்சித் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), 2019 டிசம்பர் மாதத்திலிருந்து 132,000 டொலர் (100,000 பவுண்டுகள்) மதிப்புள்ள பரிசுகளையும் விருந்தினரின் நன்மைகளையும் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.



புதிய இரத்த வகை ஒன்றை கண்டுபிடித்த பிரித்தானிய விஞ்ஞானிகள்!
[Friday 2024-09-20 06:00]

பிரித்தானிய விஞ்ஞானிகள் 50 ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட 'A', 'B', 'AB', மற்றும் 'O' ஆகிய நான்கு இரத்த வகைகளின் பட்டியலில் தற்போது 'MAL' என்ற புதிய இரத்த வகை சேர்க்கப்பட்டுள்ளது. 1972-ஆம் ஆண்டிலேயே இந்த அரிய இரத்த வகை முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. எனினும், அதற்கான பரிசோதனை முறையை கண்டறிய முடியாமல் இருக்க, இதுவரை இவ்வகை இரத்தம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.



மனித கடத்தல் தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
[Thursday 2024-09-19 18:00]

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களுக்கு மக்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரித்துள்ளது. இந்த ஆள் கடத்தல்கள் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுவிஸில் யாழ் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம்!
[Thursday 2024-09-19 18:00]

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலாந்தில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த இலங்கை இளம் குடும்பஸ்தர் அவர் வசித்து வந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 34 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்த நிலையில் இரு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



சீனாவில் நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்!
[Thursday 2024-09-19 18:00]

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது. கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.



முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம்: திவாலான அமெரிக்க நிறுவனம்!
[Thursday 2024-09-19 18:00]

அமெரிக்காவில் 1946ம் ஆண்டு துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம், திவாலானதன் காரணமாக தனது 75 ஆண்டுகால பயணத்தை முடிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர், காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் பெரும் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பே உயர்ந்த இடத்தில் உள்ளது.



லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

லெபனான் நாட்டில் நேற்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதன் தொடர்ச்சியாக கையடக்க ரேடியோ வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் நாட்டின் பல பகுதிகளில் வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் சிறுமி உட்பட 8 பேர் வரை உயிரிழந்ததுடன், 3000 பேர் வரை படுகாயமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாய், மகன்!
[Thursday 2024-09-19 06:00]

பிரித்தானியாவில் தாயுடன் சேர்த்து 9 வயது சிறுவனும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கார்ன்வாலில் தாயுடன் உயிரிழந்த ஒன்பது வயது சிறுவனின் குடும்பம், அவரை "சேட்டைக்காரன்" என்று விவரித்துள்ளது. டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் செப்டம்பர் 7 அன்று 31 வயதான டாஸ்மின் பேட்டர்சன்(Tasmin Paterson) மற்றும் அவரது மகன் ஹட்சன் பேட்டர்சன்(Hudson Paterson) ஆகியோரின் உயிரிழப்பை உறுதிப்படுத்தினர்.



காரில் மறைத்து வைக்கப்பட்ட வெடி மருந்து: டிரம்ப் மீது மீண்டும் வைக்கப்பட்ட குறி!
[Thursday 2024-09-19 06:00]

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது தொடர் தாக்குதல் குறி வைக்கப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிக்கான போட்டியில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது இரு தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கொலை முயற்சி துப்பாக்கி சூடு தாக்குதல் நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.



உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!
[Wednesday 2024-09-18 17:00]

சீனாவின் யுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பின் அது உலக அளவில் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறான ஒரு நிலையில் எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.



கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கான சலுகை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.



லெபனானில் பேஜர்கள் வெடித்தில் வெளியான புதிய தகவல்!
[Wednesday 2024-09-18 17:00]

லெபனானில் பேஜர்கள் வெடித்தில் 9 பேர் பலியானதுடன் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்தில்ன் பின்னனியில் இஸ்ரேல் இருப்பது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா