Untitled Document
March 31, 2025 [GMT]
கனடா மற்றும் அமெரிக்கா இடையே விமான முன்பதிவுகள் கடும் வீழ்ச்சி!
[Friday 2025-03-28 06:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு போருக்கு மத்தியில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான முன்பதிவுகள் 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு போருக்கு மத்தியில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான முன்பதிவுகள் 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

  

விமானப் பகுப்பாய்வு நிறுவனமான OAG இன் தரவுகளின்படி, கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையும் அக்டோபர் 2025 வரை குறைக்கப்பட்டுள்ளது.

உச்ச பயணப் பருவமாகக் கருதப்படும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மிகப்பெரிய குறைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் முன்பதிவுகள் தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன.

மார்ச் 2024 முதல் மார்ச் 2025 வரை கிடைக்கக்கூடிய முன்பதிவுகளை ஒப்பிடுகையில் 71 முதல் 76 சதவீதம் வரையில் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளுக்கான விமான இருக்கைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அக்டோபர் மாத இறுதி வரை இரு நாடுகளுக்கும் இடையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களால் 320,000 க்கும் மேற்பட்ட இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், முன்பதிவுகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சரிவு, கனேடிய பயணிகள் முன்பதிவு செய்வதைத் தாமதப்படுத்துவதைக் குறிக்கிறது என்றே கூறுகின்றனர். ஒருவேளை வரி விதிப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ட்ரம்பின் சமீபத்திய வரி விதிப்புகள் என்பது கனேடிய தொழிலாளர்கள் மீதான நேரடி தாக்குதல் என்றே கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணத்தில் சரிவு எதிர்பார்க்கப்பட்டாலும், முன்பதிவுகளில் கணிசமான 70 சதவீத சரிவு என்பது விமான நிறுவனங்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தக் கூடும். வர்த்தக ரீதியான அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும், சில கனேடியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை விரும்பவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
[Monday 2025-03-31 18:00]

கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும். தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
[Monday 2025-03-31 18:00]

அணு ஆயுத பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு, ஈரான் பகிரங்கமாக பதில் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடான ஈரான் ரகசிய அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.



இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்!
[Monday 2025-03-31 18:00]

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.



ஒன்டாரியோவில் கடும் பனிமழை: ஆயிரக் கணக்கான வீடுகளுக்கு மின் தடை!
[Monday 2025-03-31 18:00]

ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒருபக்கம் நிலநடுக்கம், மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்!
[Monday 2025-03-31 06:00]

மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மியான்மரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.



ஐரோப்பிய நாடொன்றிற்கு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
[Monday 2025-03-31 06:00]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்கிறார். தனது பயணத்தின் போது, ​​ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் பிற மூத்த ஹங்கேரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்: கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்!
[Monday 2025-03-31 06:00]

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.



ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் தீப்பற்றியதால் பரபரப்பு!
[Sunday 2025-03-30 17:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது.



ஒண்டாரியோ மாகாணத்திற்கு கிடைக்கும் அதிர்ஸ்டம்!
[Sunday 2025-03-30 17:00]

இந்த ஆண்டில் ஒண்டாரியோ மாகாணத்திற்கு நான்காவது முறையாக தொடர்ச்சியாக லாட்டோ மேக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முறை $65 மில்லியன் டாலர் பரிசு நியூமார்கெட்டில் (Newmarket) விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு போயுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒண்டாரியோ லாட்டரி & கேமிங் கமிஷன் (OLG) வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற சீட்டிலுப்பில் இந்த வெற்றி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது.



ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் கைது!
[Sunday 2025-03-30 17:00]

தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.



இந்தோனேசியாவில் இன்று நில அதிர்வு!
[Sunday 2025-03-30 17:00]

இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.



ரஷ்யா தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி!
[Sunday 2025-03-30 07:00]

ஏறக்குறைய தினசரி ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் இலக்காகி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான பதிலை உக்ரைன் எதிர்பார்க்கிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ட்ரோன் தாக்குதல் விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.



உணவில் பூச்சிகள்: 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்!
[Sunday 2025-03-30 07:00]

வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் உணவில் எலி உட்பட பூச்சிகளைக் கண்டறிந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜப்பானின் மிகப் பிரபலமான உணவக நிறுவனம் Sukiya. இதன் வாடிக்கையாளர் ஒருவரால் உணவில் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.



ட்ரம்பின் வரி விதிப்பால் மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை!
[Sunday 2025-03-30 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்: கனேடிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
[Saturday 2025-03-29 18:00]

கனடா ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் என ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.



1000 ஐ கடந்த மியான்மார் நில நடுக்க பலி எண்ணிக்கை!
[Saturday 2025-03-29 18:00]

மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.



எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!
[Saturday 2025-03-29 18:00]

எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார். எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆண்டு ஈலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.



கனடாவுடன் இணைய விரும்பும் அமெரிக்கர்கள்!
[Saturday 2025-03-29 18:00]

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார். அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.



ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்: அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்!
[Saturday 2025-03-29 06:00]

அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார். அவர்களை மொத்தமாக அழித்தொழிப்பேன் என ஏற்கனவே கூறியிருந்தேன் என்றும், தற்போது அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.



அமெரிக்க இராணுவ தளங்கள் தாக்கப்படும்: ட்ரம்புக்கு பதிலளித்த ஈரான் தலைவர்!
[Saturday 2025-03-29 06:00]

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் இராணுவ நடவடிக்கைகளை எதிகொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா