Untitled Document
May 6, 2024 [GMT]
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

  

அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல் வெளியாகி தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

குற்றப்பத்திரிகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிர்மலாதேவி வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



'இது கொலைதான்?' - விசாரணையை இறுக்கும் காவல்துறை!
[Monday 2024-05-06 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடியும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல் துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: தமிழக அரசு ஏற்பாடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்: வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி புகார்!
[Monday 2024-05-06 18:00]

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக போட்டியிடவில்லை.



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று (மே.6) காலை 9.30 மணியளவில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்துக்கொன்ற தாய்!
[Monday 2024-05-06 06:00]

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.



காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன்: விடாப்பிடியாய் நடந்த திருமணம்!
[Monday 2024-05-06 06:00]

எட்டு ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை உறவினர்கள் ஒன்று சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறுதானூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த எட்டு வருடமாக ரோஸ்லின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பெசன்ட் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ரோஸ்லின் மேரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது திருமணம் பற்றி பேசினாலும் ஏதாவது காரணம் சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சென்னை அடையாறு உட்பட நான்கு காவல் நிலையங்களில் ரோஸ்லின் புகார் அளித்தார்.



நீலகிரியில் இ-பாஸ்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
[Monday 2024-05-06 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவை!
[Sunday 2024-05-05 18:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



முடிந்தது 'நீட்' தேர்வு!
[Sunday 2024-05-05 18:00]

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி முடிந்துள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது.



ஜெயக்குமார் தனசிங் மரணம்: அடுத்தடுத்து சிக்கிய கடிதங்கள்!
[Sunday 2024-05-05 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!
[Sunday 2024-05-05 18:00]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.



பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரருக்கு நேர்ந்த சோகம்!
[Sunday 2024-05-05 07:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.



“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” - பிரதமர் மோடி பேச்சு!
[Sunday 2024-05-05 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது” - ராமதாஸ் குற்றச்சாட்டு!
[Sunday 2024-05-05 07:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை.



கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியான முக்கிய அறிவிப்பு!
[Saturday 2024-05-04 17:00]

தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலையில் தப்பிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தவர்கள் கைது!
[Saturday 2024-05-04 17:00]

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபை கட்டுமான பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வடலூர் சத்திய ஞான சபையில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடலூரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.



பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: கைது நடவடிக்கையில் கர்நாடக அரசு தீவிரம்!
[Saturday 2024-05-04 17:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!
[Saturday 2024-05-04 17:00]

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பொலிஸில் புகார் அளித்திருந்தார்.



சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி: தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு!
[Saturday 2024-05-04 07:00]

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.



“ராகுல் காந்தி தப்பி ஓடுவது இது முதல் முறையல்ல” - ஸ்மிருதி இராணி விமர்சனம்!
[Saturday 2024-05-04 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா