Untitled Document
April 6, 2025 [GMT]
அதிகமாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில்..? - எதிலுமே முதலிடம்தான்!
[Monday 2016-01-11 11:00]

எந்நாட்டு மக்கள் அதிகளவில் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்றவை குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.


  

முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையே இதற்கு செலவிடுகின்றனர் எனவும், எனவே இப்படியான படங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர் எனக் கூற முடியாது எனறும் புகழ்பெற்ற உளவியல் மற்றும் பாலியல் சிகிச்சை வல்லுநர் டாக்டர் லாரி பெடீட்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நீலப்படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களே மிகவும் அதிகப்படியாக நாளொன்றுக்கு சுமார் 13 நிமிட நேரம் இதற்காக செலவிடுவதாகவும், கியூபா நாட்டு மக்களே மிகக் குறைவாக ஐந்தரை நிமிடங்கள் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு 11 மணி முதல் நள்ளிரவு முடியும் வரையிலான இரண்டு மணிநேரப் பகுதியே அதிகமானவர்கள் நீலப்படங்களை பார்க்கும் நேரமாகவுள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் நீலப்படங்களைப் பார்ப்பதை பொருத்தவரை ஜமைக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இப்படங்களைப் பார்ப்பவர்களில் 44 சதவீதம் பெண்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக இப்படங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறும் இந்த ஆய்வு நீலப் படங்களைப் பார்ப்பவர்களின் சராசரி வயது 35 எனவும் கூறுகிறது. ஸ்மார்ட் ஃபோன் மூலம் 53% பேர் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள் என்றும், அவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இந்த எண்ணிக்கை 212% அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. மொபைல் தொலைபேசி மூலம் இப்படங்களைப் பார்ப்பவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்துள்ளதாவும் இந்த ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகரிப்பு, இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றாலேயே இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னையிலுள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் நாராயண ரெட்டி பிபிசி தமிழோசையிடம் கூறினார். இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எதிர்பார்க்கப்பட்டதே எனவும் அவர் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com


சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
[Saturday 2025-03-29 18:00]

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்!
[Monday 2025-03-24 18:00]

இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.


கனமழையால் செந்நிறமாக மாறிய தீவு!
[Saturday 2025-03-15 16:00]

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மரணத்தில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்!
[Thursday 2025-03-13 19:00]

அவுஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் மருத்துவர்கள் மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.


ரூ.65 கோடிக்கு கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற பிரித்தானிய மாணவி!
[Thursday 2025-03-13 06:00]

பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ.65 கோடிக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி லாரா (Laura), தனது கன்னித்தன்மையை £1.7 மில்லியனுக்கு ( இலங்கை பணமதிப்பில் ரூ.65 கோடி) விற்ற சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் இவ்விபரீதமான ஏலத்தில் மிக உயர்ந்த தொகையை வழங்கி அதைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆறு கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Tuesday 2025-03-11 19:00]

அமெரிக்காவின் அலபாமாவில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் எடையைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த குழந்தையின் எடை 6 கிலோவை விட சற்று அதிகம் இருந்ததுதான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்ணின் பெயர் பமீலா மெய்ன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், பர்மிங்காம் (Birmingham) பகுதியில் வசித்து வருகிறார்.


20 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்!
[Wednesday 2025-03-05 18:00]

20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தான்சானியாவில் தான் அந்த அதிசய மனிதர் வாழ்ந்துவருகின்றார். அதிலும் தனது 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறாராம் இந்த மனிதர். எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர்.


18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்!
[Wednesday 2025-02-26 06:00]

பிரித்தானியாவின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் தங்க கழிப்பறை திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்க கழிப்பறை துணிகரமாக திருடப்பட்ட அதிர்ச்சிகரமான தருணத்தை சமீபத்தில் வெளியான பாதுகாப்பு கேமரா காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.


100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் மீண்டும் வந்த அதிசயம்!
[Tuesday 2025-02-18 16:00]

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் தற்போது மீண்டும் வந்துள்ள அதிசயம் பிரேசிலில் நடந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து வரும் நிலையில், மனிதர்களாலும் பல உயிரினங்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றது.


உலகிலேயே விலை உயர்ந்த ரோஜா இதுதான்!
[Thursday 2025-02-13 19:00]

பொதுவாகவே காதலர் தினம் என்று வந்துவிட்டால் ரோஜா தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் மலர் என்ற பெருமையையும் இது பெருகின்றது. உண்மையில் ரோஜா மலரின் வாசனைக்கு ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ஒரு ரோஜாவைின் விலைக்கு ஒரு பெரிய ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?


தங்கத்தில் பூட்டு: ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சரியமான பொருள்!
[Friday 2025-01-31 06:00]

ஜேர்மனியில் பழமையான ரோமன் தங்க பூட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியில் 2023-ஆம் ஆண்டு ஒரு உலோகம் தேடுபவர் கண்டுபிடித்த ஒரு முக்கிய ரோமன் காலப்பண்பு தான் இந்த தங்க பூட்டு. வெஸ்ட்பாலியா-லிப்பே பிராந்திய சங்கம் (LWL) இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியது.


மலையை உணவாக உண்ணும் பாமர மக்கள்!
[Tuesday 2024-12-31 17:00]

ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் மலையை உணவாக சாப்பிடும் மக்களின் தகவல் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இந்த உலகில் மலைப்பிரதெசங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் நாமும் தலைப்பகுதிகளை பார்த்திருப்போம். ஆனால் சாப்பிட தாட்டோம். ஆனால் தற்போது இந்த பதிவில் சொல்லப்போகும் மலையானது மக்கள் பார்ப்பதுடன் சாப்பிடவும் செய்கிறார்கள்.இந்த இடம் ஒரு தீவு.


50,000 ஆண்டுகளுக்கு முந்தைய மாமத் குட்டியின் உடல் ரஷ்யாவில் கண்டுபிடிப்பு!
[Tuesday 2024-12-24 07:00]

ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பை செய்துள்ளனர். 50,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய குட்டி மாமத்தின் எச்சங்கள் இதுவாகும். இந்த மிகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட மாதிரி வரலாற்றில் மிகவும் முக்கியமான மாமத் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் கோடையில் வெர்கோயன்ஸ்க்(Verkhoyansk) மாவட்டத்தின் படகைகா(Batagaika) பகுதியில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டது.


வெறும் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்கும் முதியவர்!
[Thursday 2024-12-19 16:00]

முதியவர் ஒருவர் 10 ரூபாய்க்கு பிரியாணி, 5 ரூபாய்க்கு பரோட்டா என மலிவு விலையில் உணவு விற்பனை செய்து வருகிறார். தற்போதைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் பிரியாணி தான். பல வகையான பிரியாணி உள்ளது. இதன் விலை குறைந்தது ரூ.100ல் தான் தொடங்குகிறது. ஆனால், முதியவர் ஒருவர் வெறும் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்து வருகிறார்.


5 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட லொட்டரி பரிசு: தற்போது ரூ.12 கோடிக்கு அதிபதி!
[Friday 2024-12-06 16:00]

கேரளா பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி பரிசுத்தொகையை கொல்லத்தைச் சேர்ந்தவர் வென்றுள்ளார். கேரள மாநிலத்தில் பூஜா பம்பர் லொட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் டிசம்பர் 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இந்த லொட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி JC 325526 என்ற எண்ணிற்கு கிடைத்தது. இந்த லொட்டரி டிக்கெட்டானது காயம்குளம் ஏஜென்சியில் இருந்து சப் ஏஜென்ட் மூலம் கொல்லம் ஏஜென்சி மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வந்தது.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா