Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு!
[Thursday 2024-10-03 18:00]

பொதுவாக கடைகளில் நாம் வாங்கி சாப்பிடும் உணவுகளை விட வீட்டில் சுத்தமான நமது கையில் சமைத்து சாப்பிடும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானவை. இப்படி இருக்கும் பொழுது என்ன தான் நாம் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில உணவுகள் ஹோட்டல்களில் சாப்பிட்டால் அந்த சுவை வரும். இல்லாவிட்டால் கல்யாண வீடுகளில் சாப்பிடும் பொழுது அந்த சுவையை பார்க்கலாம்.

இதற்கான சமையல் ரகசியங்களை தெரிந்து கொண்டால் நாமும் கல்யாண வீட்டில் போல் உணவு சாப்பிடலாம். சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டால் சில சமயங்களில் அடிக்கடி சாப்பிட தோன்றும். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன்படி, வீட்டில் என்ன தான் முயற்சி செய்தாலும் சில உணவுகளின் முழு சுவையும் எடுக்க முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு வீட்டில் வைத்து சாப்பிடும் வகையில் கல்யாண வீட்டு வத்தல் குழம்பு எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 20 பல்

பச்சைமிளகாய் - 5

தேங்காய் - ½ மூடி

வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்

தக்காளி - 1 மணத்தக்காளி

வத்தல் - 2 டேபிள் ஸ்பூன்

சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு

புளி - எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - ½ டீ ஸ்பூன்

சோம்பு - ¼ டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்

கடுகு - ¼ டீ ஸ்பூன்

வரமிளகாய் - 5

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டீ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்

வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்

மிளகு - ½ டீ ஸ்பூன்

வர மிளகாய் - 10

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்

பச்சரிசி - ½ டீ ஸ்பூன்

கருவேப்பிலை - 2 கொத்து

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசி, கொத்தமல்லி விதை, வரமிளகாய் 10, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு நொறுங்கும் அளவிற்கு வறுக்கவும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி விட்டு ஆற வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். தேங்காய் பூ அல்லது நறுக்கிய சோம்பு சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு பொரிய விட்டு மிளகாய், மணத்தக்காளி வத்தல், சுண்டைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்று பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கிய பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், கருவேப்பிலை, பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை போட்டு வாணலியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். கொதிக்கும் பொழுது புளி கரைச்சலையும் ஊற்றி விடவும்.

தொடர்ந்து உப்பு, வெல்லம் சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்த பொடி, கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தயார்!

முக்கிய குறிப்பு:

வத்தல் குழம்பை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம் அல்லது பிரிட்ஜ்-ல் வைத்து கூட மாதக்கணக்கில் கெட்டு போகாமல் சாப்பிடலாம். அவசரத்திற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com



உருளைக் கிழங்குடன் அவித்த முட்டை சேர்த்து சாப்பிடுவது நல்லதா?
[Wednesday 2024-10-02 17:00]

பொதுவாக பலரும் காலையில் அவித்த முட்டை, அதுனுடன் ஏதாவது காய்கறி சாலட் எடுத்து கொள்வார்கள். இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் காலை முதல் வழங்குகின்றது. அவித்த முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் இருக்கின்றது. உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கி, சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.



மாரடைப்பை தடுக்கும் பட்டாணி மசாலா!
[Tuesday 2024-10-01 18:00]

பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் அதிகளவு கார்போஹைட்ரேட் காணப்படுகின்றது. இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதன் செறிந்து காணப்படும் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த தெரிவாக இருக்கின்றது.



உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் வெள்ளரிக்காய்!
[Monday 2024-09-30 18:00]

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீர்ச்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய் நமக்கு பல நன்மைகளை அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் ஈரப்பதத்தை சரியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து கிடைக்கவும் உதவுகின்றது.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாய மருந்து!
[Sunday 2024-09-29 17:00]

நம் மன்னோர்கள் எல்லோம் இப்போது இருப்பவர்களை விட மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். இவர்கள் தற்காலத்தை போல மருந்து மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை. இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து தான் வாழ்ந்தார்கள். இதனால் இவாகளுக்கு எந்த நொய் நொடியும் இருக்கவில்லை. மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமல் பிடிப்பது வழக்கம். இதை இலகுவாக போக்கக்கூடிய கஷாயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



நாய் வளர்ப்பதால் நோய் ஆபத்து குறையுமா?
[Saturday 2024-09-28 18:00]

நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதனை பாராமரிப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் பொறுப்பான செயலாகும். சிலருக்கு இது ஒரு பொழுதுஆபோக்காக காணப்படுகின்றது. இதில் பலருக்ம் தெரியாத உண்மை உன்று உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் நாய் வளர்ப்பதில் உள்ள நற்பலன்களை விவரித்துள்ளது.



சளி இருமலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காரசாரமான கொங்கு நாட்டின் செலவு ரசம்!
[Friday 2024-09-27 18:00]

பொதுவாக உணவுகள் பசிக்காகவும் சுவைய்யாகவும் சாப்பிடப்படுகின்றது. ஆனால் சில உணவுகள் நமத உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் தான் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும். உணவுகளில் கொங்கு நாட்டு உணவு என்றால் இது மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் பிரபலமானவை.கொங்கு மாவட்டங்களில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு இன்றளவும் மிகுந்த சுவை இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் கொங்கு சமையல் உணவுகள் பல உலகளவிலும் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.



மதுபானம் அருந்தாவிட்டாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம்: காரணம் என்ன?
[Thursday 2024-09-26 18:00]

நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் நமது உடல் பாகங்களும் பாதுகாப்பாக இருக்கும். நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது.



மூளையின் ஆரோக்கியத்தை குறைத்து மந்தமாக்கும் ஆபத்தான பழக்கங்கள்!
[Wednesday 2024-09-25 18:00]

உடலில் மிக முக்கியமான பகுதி தான் நமது மூளையாகும். ஆனால் சில பழக்கவழக்கங்களால் இதன் செயற்பாடு மங்கிப்போகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு நமக்கு தேவை முதலில் காலை உணவு தான். நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க நாம் உடல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.



சிக்கன் குழம்பை இப்படி ஒருமுறை செய்து பாருங்க!
[Tuesday 2024-09-24 18:00]

பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம் என்பதுடன் இது எல்லா வகையான உணவுகளுடனும் சூப்பராக பொருந்துவது இதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் அனைவரும் விரும்பும் படி காரசாரமான சிக்கன் கிரேவியை எளிமையான முயைில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



ஹீமோகுளோபின் அளவை கூட்டும் பேரிச்சம்பழம் அல்வா!
[Monday 2024-09-23 17:00]

பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் மாலை நேர டீக்கு ஏதாவது சுவிட்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி இருந்தால் சந்தேகமே இல்லாமல் கேரட் அல்வா, பருப்பு அல்வா, ரவை அல்வா என அல்வா வகைகளை செய்து சாப்பிடலாம். அந்த வரிசையில் ஒன்று தான் பேரீச்சம்பழ அல்வா. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது.



பிரியாணியை மிஞ்சும் சுவையில் கத்தரிக்காய் சாதம்!
[Sunday 2024-09-22 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுதில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. கர்நாடக பாணியில் பிரியாணி சுவையை மிஞ்சும் அளவுக்கு அசத்தல் சுவையில் கத்திரிக்காய் சாதத்தை எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொழுப்பை எரித்து 21 நாட்களில் இடுப்பழகை பெற வேண்டுமா?
[Saturday 2024-09-21 17:00]

உடல் எடை என்பது தற்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த உடல் எடைப்பிரச்சனைக்கு முழுக்காரணம் நம்முடைய வாழ்க்கை முறை தான். நாம் ஒரு வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கித்துவம் வகிக்கிறது. உடல் எடை அதிகரிக்க நம்முடைய உணவுப்பழக்கவழக்கம் தான் முழுக்காரணமாகும். இந்த காரணத்தினால் நாம் தினமும் சாப்பிடம் உணவில் கவனம் வெலுத்த வேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது அவவளவு சுலபமான விஷயம் அல்ல.



கைகளில் தோல் உரிய என்ன காரணம்?
[Friday 2024-09-20 18:00]

இருக்கே சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் தங்குவது, அழுக்குகள் சரும துவாரத்தில் தங்குவது சரும பளபளப்பை மங்க செய்துவிடும். சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளும் வற்றும் போது சருமம் வறட்சி ஆவதை நன்றாக உணர முடியும். இதனால் சருமத்தில் பல பிரச்சனைகள் உருவாகும். அதில் அரிப்பு, செதில்களாக இருக்கும். உலர்ந்த திட்டுகள் உருவாகும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் வறண்ட சருமம் என்பது எல்லா வயதினரையும் பாதிக்க கூடிய ஒன்று.



புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?
[Thursday 2024-09-19 18:00]

எமது முன்னோர் புரட்டாசி மாதத்தை தெய்வத்திற்கு உரிய மாதமாக பார்க்கிறார்கள். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகளுக்கு இடம் இருக்காது. மாறாக சைவ உணவுகளை தான் மாதம் முழுவதும் சாப்பிட வேண்டும். இப்படி இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என இன்றும் நம்பப்படுகின்றது. இந்த சாஸ்த்திரத்தை காலங்காலமாக இந்துக்கள் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு சாஸ்த்திரம் ரீதியாக காரணம் இருப்பது போல் ஒரு அறிவியல் காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!
[Wednesday 2024-09-18 17:00]

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், மருந்து பாவனை, தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. வழுக்கை பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் வருகின்றது. இந்த பிரச்சினை அனுபவிப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் முயற்சிப்பதை விட ஆயுள் வேத முறைப்படி வைத்தியம் பெறலாம்.


Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா