Untitled Document
April 8, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
காயங்களை கட்டி வைக்கலாமா? - பாட்டி வைத்தியத்தில் தீர்வு!
[Sunday 2025-04-06 16:00]

வழக்கமாக நமது உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால், உடனே அதற்கு மருந்து போட்டு கட்டி விடுவார்கள். இது சரியா? தவறா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் தொற்றுக்கள் உள்ளே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் மேல் புறம் தோலில் இருப்பதால் அடுத்த தோலுக்கு செல்லும் முன்னர் ஆற்ற முயற்சிகள் செய்வார்கள். மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் என மூன்று அமைப்புக்கள் உள்ளன.

அதில், மேலோட்டமான காயம் ஏற்பட்டால் வெறும் மேல் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டியவுடன் ஏற்படும் காயம் அது மேல் தோலில் தான் ஏற்படுகிறது. அதனை மூடி கட்டி வைப்பது சிறந்தது.

சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பார்கள். ஏனெனின் சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறி விடும். ஆனால் காயங்களில் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை மூடி வைப்பது வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் அதனை திறந்து வைத்து மருந்து போடுவது நல்லது.

கடுமையான தீப்புண்களில் கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி வைப்பது சிறந்தது.

மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்கும். தூசி அழுக்கு படாமலும் கிருமிகள் உள்ளே நுழையாமலும் இருக்கும். காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு போட்டு பாதுகாப்பது நோயாளியின் கடமை என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

புண்கள் ஏற்பட்டால் அதனை சில நாட்டு வைத்தியங்கள் செய்து இலகுவாக ஆற்றலாம். அப்படியாயின், புண்களை சீக்கிரம் ஆற்றும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.

1. அத்திமர காய்

ஆறாத ரணங்கள் இருந்தால் அத்திமரத்தின் காய், இலை, பட்டை சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. அத்திமரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி, ஒரு கைப்பிடி எடுத்து மண் சட்டியில், இரண்டு டம்ளர் நீர் விட்டு (காயங்களுக்கு ஏற்ப) கொதிக்க வைத்து வடிக்கட்டவும்.

அந்த நீரை புண்களுக்கு காலை, இரவு என இரண்டு வேளைகள் தடவினால் புண்கள் ஆறும். அத்திமரப்பட்டை நீர் புண்ணின் ஆழம் வரைக்கும் சென்று உள்ளிருக்கும் கிருமிகளை நீக்கிவிடும்.

2. ஊமத்தை இலை

கிராமங்களில் வயல்புறங்களில் சாலை ஓரங்களில் ஊமத்தை இலை, பூ, காய் விதை கிடைக்கும். ஊமத்தை இலையை கையளவு எடுத்து மண் போக சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைய அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு கலந்து குழைத்து புண் கட்டி, வீக்கம் இருக்கும் இடங்களில் தடவினால் புண்கள் ஆறும்.

இந்த பற்று காய காய துடைக்கமால் அதன் மேலேயே பற்று போட வேண்டும். இவை புண், கட்டி உள்ளிருக்கும் சீழ், கிருமிகளை உறிஞ்சு எடுத்து, மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது புண்ணின் தழும்பு தெரியும். இப்படி தொடர்ந்து 5 நாட்களுக்கு போட வேண்டும்.

3. கடுக்காய்த்தூள்

நாக்கில் அல்லது வாயில் புண் வந்து விட்டால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கடுக்காய்தூள், காசுக்கட்டி தூள் வாங்கி வைத்து கொள்ளலாம்.

அதனை தினமும் காலையில் பசு நெய்யில் கடுக்காய்த்தூளையும், காசுக்கட்டி தூளையும் 5 முதல் 10 சிட்டிகை வரை எடுத்து நாக்கு, உதடு பகுதியில் தடவி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் செய்து வந்தால் உதட்டில் இருக்கும் புண்கள் ஆறும். வயதிற்கேற்ப அளவை மாற்றிக் கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com



தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி!
[Saturday 2025-04-05 16:00]

தினசரி பால் குடித்து வந்தால் அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும். அதே போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குவதுடன் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. உடல் எடையை கட்டுகுள் வைக்க வேண்டும் என்று போராடுவர்களுக்கு பன்னீர் சிறந்த தெரிவாக இருக்கும்.



இறந்த செல்களை ஒரே தடவையில் நீக்கும் ஸ்க்ரப்!
[Thursday 2025-04-03 19:00]

பொதுவாக நம்முடைய சருமம் பல ஆயிரக்கணக்கான செல்களால் உருவாக்கபட்டது. அந்த செல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் உயிருடன் இருக்கும். அதன் பின்னர் படிபடியாக இறந்து விடும். இறந்த இந்த செல்களை நாம் முறையாக நீக்காவிட்டால் அது அப்படியே சருமத்தில் தங்கி, ஒரு வித கருமையை உண்டு பண்ணும். இதன் காரணமாக சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதனை ஸ்கிரப் மூலம் இல்லாமலாக்குகிறார்கள்.



தினமும் தேவைக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Wednesday 2025-04-02 18:00]

உப்பு நம் உணவில் மட்டுமல்ல, சுவையிலும் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. உப்பு உடலில் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு சமிக்ஞைகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது. உணவில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டால், உடலில் பல மாற்றங்கள் தோன்றத் தொடங்குகின்றன, அவற்றைப் புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.



இளநீர் குடித்தால் இந்த 2 நன்மைகள் கிடைத்தே தீரும்!
[Tuesday 2025-04-01 19:00]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம், இதனால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. ஆனால் இளநீர் உடலை நீரேற்றம் செய்வது மட்டுமல்லாமல் ஆற்றலையும் தருகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது. குறிப்பாக கோடையில், அத்தியாவசிய தாதுக்கள் உடலில் இருந்து வியர்வை வடிவில் அகற்றப்படும் போது, ​​தேங்காய் நீர் இந்தக் குறைபாட்டை ஈடுசெய்ய உதவுகிறது. இந்த பதிவில் இளநீரால் முக்கியமான என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.



கோடையில் தினம் ஒரு கொய்யா!
[Monday 2025-03-31 18:00]

தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிக அளவில் கொண்டுள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது.



ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்!
[Sunday 2025-03-30 17:00]

பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி அறியப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது. எனவே ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில், சிறந்த இடத்தை பிடித்து வைத்திருக்கும் ப்ரோக்கோலியில் எவ்வாறு அசத்தல் சுவையில் ப்ராக்கோலி மிளகு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்!
[Saturday 2025-03-29 18:00]

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நோய்களுக்கு மருந்துவில்லைகள் சாப்பிடுவதிலும் பார்க்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படியானவர்கள், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிடலாம். நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகளை சாப்பிடும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.



கோடை வெயிலுக்கு ஏற்ற கம்பங்கூழ்!
[Friday 2025-03-28 18:00]

கோடை காலத்தின் கொடூர வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கம்பங்கூழ் சிறந்த பானமாக கருதப்படுகின்றது. நமது முன்னோர்கள் கம்பு, கேப்பை போன்ற தானியங்களை கஞ்சி வடிவில் தயாரித்து, தினசரி உணவாக உட்கொண்டு வந்தனர். கோடையில் அதிகம் காணப்படும் உடல் சூடு, நீரிழிவு, செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு தீர்வாக, இயற்கையான கம்பங்கூழை குடிப்பது சிறந்தது.



முடி வளர்ச்சியை வேகமாக்க வேண்டுமா?
[Thursday 2025-03-27 19:00]

இப்போதெல்லாம் முடி உதிர்தல் மற்றும் பலவீனமடைதல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதிகரித்து வரும் மாசுபாடு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, முடியின் இயற்கையான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் நாம் இயற்கை பொருட்கள் மீது கவனம் தேடுவது அவசியம். குறிப்பிட்ட மூலகைகள் முடியின் வேர்களை ஊட்டமளிப்பதன் மூலம் முடியை அடர்த்தியாகவும், வலுவாகவும், நீளமாகவும் மாற்ற உதவுகின்றன.



டீ, காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2025-03-26 18:00]

டீ மற்றும் காபி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபருக்கு புதிய நாளின் ஆரம்பம் காபி, டீ இல்லாமல் ஆரம்பமாவது இல்லை. அந்த அளவிற்கு காபி, டீ அனைவருக்கும் பிடித்தமான பானமாக மாறியுள்ளது. சில நபர்கள் மணிக்கு ஒருமுறை இந்த பானத்தை அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி அருந்துவதால், சுறுசுறுப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.



நள்ளிரவில் விழிப்பு வருகிறதா?
[Tuesday 2025-03-25 19:00]

நள்ளிரவில் திடீரென கண்விழிப்பு ஏற்பட்டு தூக்கத்தை கெடுத்துவிடும். அவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இரவில் 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதை தான் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.



விளக்கெண்ணெய்யை சுடு நீரில் கலந்து குடித்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகுமா?
[Monday 2025-03-24 18:00]

பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பல தரப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் விளக்கெண்ணெய் முக்கியம் பெறுகிறது. ஏனெனின் விளக்கெண்ணெய்யில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை உபயோகிக்கும் அளவுக்கு மக்கள் விளக்கெண்ணெயை பரவலாகப் பயன்படுத்துவது குறைவு. வெளியில் தடவிக் கொள்ளும் போதே எண்ணற்ற நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.



கரு உருவாக அவசியமான உணவுகள்!
[Friday 2025-03-21 18:00]

எளிமையான முறையில் தாய்மையடைய ஆரோக்கியமான உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சரியான உணவு பழக்கம் அவசியம் என மருத்துவர் ஒருவர் பேசியிருக்கிறார்.



நறுக்கிய ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவினால் என்ன நடக்கும்?
[Wednesday 2025-03-19 18:00]

ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிறிய துண்டு பழங்கள் இருந்தாலும், அதில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் பாடசாலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் துண்டுகளாக்கி ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொண்டு செல்வது வழக்கம். சில பழங்கள் சிறிது நேரம் வெட்டி வைத்தால் கூட நிறமாற்றம் ஏற்படும். அதிலும் ஆப்பிள்கள் முக்கியம் பெறுகின்றன.



வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது: ஏன்?
[Tuesday 2025-03-18 19:00]

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா