Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கல் உப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு வருமா?
[Monday 2026-02-02 16:00]

எல்லோரது வீட்டிலும் கல் உப்பு மிகவும் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு சமையல் பொருளாகும். ஆரோக்கியமான உணவை சாப்பிட அனைவரும் கல் உப்பை உணவில் சேர்த்து கொள்வார்கள். அதிலும் கல் உப்பு சேர்த்தால் தான் உணவில் அதிகமான சுவை கிடைக்கும் என நினைத்து அனேகமான மக்கள் உணவில் கல் உப்பை சேர்க்கின்றனர். கல் உப்பு சாப்பிடுவது நல்லது, ஆனால் அதை நீண்ட காலமாக உட்கொள்வது பாதுகாப்பானதா என்பதை யாராவது யோசித்து உள்ளீர்களா? இந்த கல் உப்பில் உள்ள தாதுக்கள் இரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.

இதன் காரணமாக இப்போது, ​​கல் உப்பை அதிகமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல என்று கூறப்படுகிறது, ஏனெனில் அது இதயத்திற்கு ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

கல் உப்பை அதிகமாகப் பயன்படுத்துவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா என்பதை டாக்டர் பினய் பாண்டே ( இருதயவியல்,சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஃபரிதாபாத்) கூறும் போது ​​அவர் முதலில் சொன்னது கல் உப்புக்கும் சாதாரண டேபிள் உப்புக்கும் உள்ள உண்மையான வேறுபாடு என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்ற கூறினார்.

இந்த இரண்டு உப்பிலும் முக்கிய கூறாக இருப்பது சோடியம் குளோரைட்தான். இதன் வேறுபாடு என்னவென்றால், கல் உப்பு குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது.

இதனால் அதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் மிகச் சிறிய அளவில் இருக்கலாம்.

ஆனால் இத்தாதுக்கள் மிகவும் குறைந்த அளவில் இருப்பதால், அவை இதய ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாக்கும். இப்படியே பயன்பட்டால் அது எந்த வகையிலும் பெரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தாது.

மாரடைப்பு ஏற்படும் அபாயம் உப்பினால் வருவது அல்லது அதில் உள்ள சோடி குளோரைட்டை நாம் எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதை பொறுத்து உள்ளது.

கல் உப்பு அல்லது வெள்ளை உப்பு எதுவாக இருந்தாலும் நாம் அதிகமாக சாப்பிட்டால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்டகால உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய ஆபத்தாக இந்த அதிக உப்பு உட்கொள்ளல் ஆகும்.

கல் உப்பு, "இயற்கையானது" எனவே அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அது பாதுகாப்பானது என்பது தவறான கருத்து. உண்மையில், கல் உப்பு மற்றும் மேசை உப்பிலிருந்து பெறப்பட்ட சோடியத்தை உடல் வேறுபடுத்தி தாக்கத்தை தராது.

என்ன உப்பு சாப்பிட்டாலும் அதில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உடலில் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுகிறது.

எனவே உப்பு சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு வராது. நாம் எந்த உப்பை எவ்வளவு சாப்பிடுகிறோமோ அதில் உள்ள சோடிய குளோரைட்டு மூலம் தான் நோய் உண்டாகும்.

மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதற்கு கல் உப்பு மட்டும் காரணமல்ல, எவ்வளவு உப்பு உட்கொள்கிறோம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை, புகைபிடித்தல், நீரிழிவு நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகளே இதற்கு காரணம்.

கல் உப்பு மாரடைப்புக்கு ஒரு காரணம் அல்ல, ஆனால் அதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான காரணிகளாக சீரான உணவு, குறைந்த உப்பு உட்கொள்ளல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா