Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உயிருக்கு உலை வைக்கும் கருப்பு நிற டப்பா!
[Thursday 2026-02-19 15:00]

உணவுகளை கடைகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவில் வாங்குவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கடைகளில் உணவுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். அவ்வாறு கடையில் வாங்கும் உணவுகளை நமது கைக்கு கொடுக்கும் போது, முந்தைய காலத்தைப் போன்று வாழையிலையில் மடித்து நமக்கு தருவதில்லை. உலகம் மாடர்னாக மாறியுள்ள நிலையில், உணவை கட்டிக் கொடுக்கும் தோரணையும் மாடர்னாக மாறியுள்ளது. ஆம் பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துகின்றனர்.

நாமும் பிளாஸ்டிக் டப்பாவில் வாங்கி வருவதை கௌரவமாகவும், ஆரோக்கியமாகவும் நினைத்து வருகின்றோம். அதிலும் கருப்பு நிற டப்பாவில் தான் அதிகளவில் உணவுகள் பரிமாறப்படுகின்றது.

வெளியில் பிளாஸ்டிக் டப்பாவில் வாங்கி வரும் உணவுகளை பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் சாப்பிடுகின்றனர். ஆக மொத்தம் இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாகவே மாறியுள்ளது.

தண்ணீர் குடிப்பது, உணவை சேமித்து வைப்பது, உணவுகளை எடுத்துச் செல்வது, சமையல் பொருட்களை சேமிப்பது என அனைத்துக்கும் பிளாஸ்டிக் டப்பா தான் பயன்படுத்தப்படுகின்றது.

இதனை தவிர்க்க முடியவில்லை என்றாலும், சற்று தரமான, ஆய்வு செய்யப்பட்ட, ஆபத்து குறைவான ஃபுட் கிரேடு பிளாஸ்டிக் பாக்ஸினை வாங்கி பயன்படுத்துவது சற்று ஆபத்தை குறைக்கின்றது.

வெள்ளை நிற பிளாஸ்டிக் டப்பாவை விட கருப்பு நிற டப்பா தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இரண்டுமே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.

ஆனால் கருப்பு நிற டப்பாவில் ஆபத்துக்களை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அதிக நச்சுக்கள் கொண்ட டாப்பா தான் கருப்புநிறம் ஆகும். இவை கார்பன் துகள்களால் செய்யப்படுகின்றது.

அதுமட்டுமின்றி டிவி, டிவி ரிமோட், பழைய மொபைல் போன்ற எல்கட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்து கிடைப்பது தான் இந்த கருப்பு நிற பிளாஸ்டிக் ஆகும்.

குறித்த கருப்பு நிற டப்பாவில் அதிகளவில் கார்சினோஜெனிக் இருப்பதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் கூறுகின்றது. மேலும் கார்சினோஜெனிக் தான் புற்றுநோயை உண்டாக்கக் காரணமாக இருப்பதாகவும், பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவினை போடும் போது அது ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக கருப்பு நிற டப்பாவை பயன்படுத்தினால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு அதனால் ஒட்டுமொத்த உடலில் பிரச்சனை ஏற்படுவதுடன், இதிலுள்ள கார்சினோஜெனிக் பண்புகள் புற்றுநோய் அபாயத்தினை 300 மடங்கு அதிகரிக்கின்றது.

மேலும் ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மை, ஆண்மைக் கோளாறு பிரச்சனை ஏற்படுகின்றது.

மைக்ரோவேவ் ஓவனில் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவை வைத்து உணவினை சூடு செய்ய வேண்டாம்.

வெளியிலிருந்து சூடான உணவினை கருப்பு நிற டப்பாவில் வாங்கி வந்தால், உடனடியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.

கருப்பு நிற டப்பாவில் வாங்கி வரப்பட்ட உணவினை கடைசி வரை வழித்து சாப்பிடாதீர்கள். அதில் மைக்ரோ பிளாஸ்டிக், கெமிக்கல் கலந்திருக்கும்.

உணவு வாங்க கடைக்கு சென்றால் சங்கடம் கொள்ளாமல் வீட்டிலிருந்தே பாத்திரத்தை எடுத்து செல்வது மிகவும் நல்லது.

இந்த ஆபத்தை தெரிந்த பின்பு கருப்பு நிற டப்பாவை இனிமேல் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா