Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க!
[Thursday 2026-03-05 16:00]

காதில் அதிக நேரம் ஹெட்செட், இயர் போன் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு அனைத்து இடங்களுக்கு செல்வதுடன், தனது வேலையையும் செய்து வருகின்றனர். ஆனால் இவை செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் சற்று அறிந்துள்ளனர். ஆனாலும் தனது தனிமைக்காக இவ்வாறான காரியத்தை தற்போதும் செய்து வருகின்றனர்.

செவித்திறன் இழப்பு அல்லது குறைபாடு பிறவியில் மட்டும் இருப்பதில்லை. அவை நமது வாழ்க்கையின் சில மாற்றங்களால் எந்த காலத்திலும், எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இவற்றில் முக்கியமானது ஹெட்செட் அணிவது ஆகும்.

ஹெட்செட்டில் 85 dB-க்கு மேல் ஒலி வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவது செவித்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் காதிலுள்ள நரம்புகள் நிரந்தரமாக சேதம் ஏற்படுகின்றது.

ஹெட்செட் நீண்ட நேரம் அணிவதுடன், அப்படியே தூங்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானதாகும். ஹெட்செட் தூங்கும் காதின் உட்பகுதிக்கு சென்று காயத்தினை ஏற்படுத்துவதுடன், மூளைக்கு செல்லும் மின்காந்த அலைகள் தலைவலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தி, செவித்திறன் இழப்பினை ஏற்படுத்துகின்றது.

ஹெட்செட்டை வெவ்வேறு இடங்களில் வைக்கும் போதோ, வேறொருவரின் ஹெட்செட்டை பயன்படுத்தும் போதோ அதன் வழியாக கிருமிகள் பரவுவதுடன், காதில் தொற்றுகள் ஏற்பட்டு செவித்திறன் இழப்பு ஏற்படும்.

ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஹெட்செட், இயர் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு வனச்சிதறல், நினைவாற்றல் பாதிப்பு, செவித்திறன் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹெட்செட் பயன்படுத்துவது சுற்றுப்புறச்சூழலில் இருந்து வரும் ஒலிகளைத் தடுப்பதுடன், இதனால் உணர்திறன் குறைந்துவிடுவதாகவும், நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் பல்வேறு பிரச்சனை ஏற்படுகின்றது.

காதில் இடைவிடாமல் ஏதேனும் ஒலி கேட்பது போன்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகு ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு செவித்திறன் இழப்பு ஏற்பட்டால் அதனை மீண்டும் கொண்டு வரமுடியாது. ஆதலால் வரும்முன்பே நமது செவித்திறன் இழப்பினை தடுப்பது நமது முக்கியமான வேலையாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா