Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இதய ஆரோக்கியம் முதல் சரும பாதுகாப்பு வரை மாயாஜாலம் செய்யும் தேங்காய் எண்ணெய்!
[Sunday 2026-03-15 18:00]

இயற்கையாகவே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் தேக்கி வைத்திருப்பதன் காாரணமாகவே தேங்காய் என்ற பெயர் வந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில், தேங்காயை மட்டுமே பயன்படுத்தி எந்தவிதமான இரசாயனமும் கலக்காமல் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை சமையல் முதல் சரும பராமரிப்பு வரையில் அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெயில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் காரணமாக சாதாரண வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தினாலும் ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தேங்காய் எண்ணெயை சமையல் முதல் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு வரை பயன்படுத்துவதால் கிடைக்கும் வியக்க வைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இயற்கையாக தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் செரிவான இருப்பதால், சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் ஏற்படாமல் தடுப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி இரவில் மசாஜ் செய்துவிட்டுபடுத்தால், சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளையும் விரைவில் குணப்படுத்து அதுமட்டுமின்றி, சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வழங்கி ருமம் வறண்டு போகாமலும், இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

‌அ‌திகமாக மே‌க்-அ‌ப் பொருட்களை பயன்படுத்தும் பெ‌ண்க‌ள் இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தேங்காய் எண்ணெய் தட‌வி‌க் கொ‌ண்டு தூங்கச்செல்வதால், சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.

மேலும் முகச்சுருக்கங்களும் நீங்கும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சமைத்த சாப்பிடுவதால், இதய நோய் அபாயம் பெருமளவில் குறைகின்றது. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% alcoholic acid அதில் காணப்படுவதுடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஆகியவையும் வராமல் தவிர்க்கலாம்.

பெண்கள் கால், கைகளில் உள்ள முடிகளை நீக்குவதற்கு முன், தேங்காய் எண்ணெய் தடவிய பின்பு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு முடியையும் எளிதில் அகற்ற முடியும்.

மேலும் சுத்தமான தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது, முடியுதிர்வு பிரச்சினை, பொடுகு தொல்லை, கூந்தல் வறட்சி நீங்கி கூந்தல் கருமையாகவும், மினுமினுப்பாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா