Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூக்கிரட்டை கீரையில் இவ்வளவு நன்மைகளா?
[Friday 2026-04-10 17:00]

பொதுவாகவே நமக்கு எளிதில் கிடைக்கும் விடயங்களை நாம் ஒருபோதும் கண்டுக்கொள்வதே கிடையாது. அது மனிதர்களாக இருந்தாலும் சரி மருந்தாக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நாம் புறக்கணிக்கும் பல விடயங்கள் நம்மை பெரிய ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் வாய்ந்தாக இருக்க கூடும். அந்தவகையில், சர்வ சாதாரணமாக சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி தான் இந்த மூக்கிரட்டை கீரை என்ற அரிய மூலிகை.

தெருவோரங்களிலும், வயல்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் இந்த கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் செரிந்து காணப்படுகின்றன. இந்த கீரையின் அற்புத நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூக்கிரட்டை கீரை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை உடலில் இருந்து முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் ஒரு அபூர்வ மூலிகையாகும்.

புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய ஆற்றல் இந்த முக்கிரட்டை கீரையில் இருக்கின்றது.

மூட்டு வீக்கம், வலி மற்றும் வாத நோய்களைக் குணப்படுத்தும் இந்த கீரையை தினசரி சிறிய அளவில் உணவில் சேர்த்துக்கொண்டாலும் கூட கண்பார்வை கூர்மையாகும். தினசரி மணிக்கணபக்கில் கணணி திரையை பார்த்தப்படி வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மூக்கிரட்டை கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

மேலும் இது இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வு கொடுக்கும்.

மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து, பொடி செய்து நீரில் கலந்து வேகவைத்து எடுத்து குடிப்பதால். ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி பார்வை சுத்தமாகும்.

மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்புக்கு தீர்வு கிடைப்பதுடன் சீறுநீரக கற்களும் கரையும்.

மூக்கிரட்டைக் கீரையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடுவதும் நல்ல பலனை கொடுக்கும்.

அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்த பிரச்சினைகளும் நீங்கும். மலச்சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் தீவிர சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மூக்கிரட்டைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா