Untitled Document
June 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரெண்டு கெட்டான் நிலைமையில் தள்ளாடும் விஜய் சேதுபதி!
[Thursday 2024-06-13 18:00]

ஒரு படம் திரையரங்குகளில் வருகிறது என்றால் நாம் எல்லாம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு எப்படி குதூகலமாக இருக்கிறோமோ அதைவிட ப்ளூ சட்டை மாறன் புது படத்திற்கு விமர்சனம் கொடுக்க முதல் ஆளாக வந்து விடுவார். அதுவும் இவர் கொடுக்கிற விமர்சனம் நிச்சயமாக நல்லவிதமாக இருக்காது. அந்தப் படத்தின் கதையையும், நடித்த ஆர்டிஸ்ட்களையும், எடுத்த இயக்குனர்களையும் வச்சு செய்யும் அளவிற்கு சம்பவத்தை செய்துவிட்டு போய்விடுவார்.

அதுவும் பெரிய பெரிய நடிகர்கள் படம் என்றால் இவருக்கு அல்வா சாப்பிட மாதிரி. அப்படி இருக்கும் பொழுது விஜய் சேதுபதி படத்தை மட்டும் சும்மா விடுவாரா என்ன. என்னதான் விமர்சனம் கொடுத்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். அதாவது குரங்கு பொம்மை படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை நடித்து முடித்து இருக்கிறார்.

இப்படம் நாளை அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. அதற்கு முன் ரிவ்யூ ஷோ பார்த்த பலரும் டுவிட்டரில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே மாதிரி ப்ளூ சட்டையும் அவருடைய விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார்.

அதாவது சாதாரண சலூன் கடையே வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு மனைவி இல்லை ஒரே ஒரு அன்பான மகள் மட்டும் இருக்கிறாள். ஆனால் அந்த மகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்துகிறார். அது சம்பந்தமாக அவர் கேம்புக்கு போயிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி திடீரென்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து குப்பைத் தொட்டியை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதை கேட்டதும் அங்கு இருப்பவர்கள் நக்கல் அடித்து கிண்டல் பண்ணுகிறார்கள். உடனே விஜய் சேதுபதி என்னுடைய குப்பைத் தொட்டியை கண்டுபிடித்து கொடுத்தால் நான் அஞ்சு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே இந்த அஞ்சு லட்ச ரூபாய்க்காக அந்த குப்பை தொட்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசர்கள் தேட முயற்சி எடுக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு திருட்டு கும்பல் எங்கேயாவது ஒதுங்கி இருக்கும் தனி வீட்டில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்து விட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு பல திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

இப்படி இரண்டு கதை வேறு ஒரு டிராக்கில் நகர்ந்து கொண்டு போகும் பொழுது இரண்டாம் பகுதியில் அனைத்துக்கும் சேர்ந்து ஒரு கதை ட்ராக் வருகிறது. அதை பார்க்கும் பொழுது முதல் பாதியில் உள்ளது இரண்டாம் கதையோடு ஒத்துப் போகிற மாதிரி அனைத்து முடிச்சுகளையும் போட்டு இணைத்து இருக்கிறார்கள்.

மேலும் இதில் வில்லனாக அனுராக் நடிப்பு பெருசாக எடுபடவில்லை. அதே மாதிரி நடராஜன் கெட்ட போலீஸ் என்பதை காட்டுவதற்கு ஒரு நீளமான ஸ்டோரியை சொல்லி போர் அடிக்க வைத்திருக்கிறார்கள். அத்துடன் முதல் பாதியை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இரண்டாம் பாதி நன்றாக அமைந்திருக்கிறது.

கதையும் விறுவிறுப்பாக நகர்ந்து டுவிஸ்ட்டாக பல திருப்பங்கள் நடைபெறுகிறது. முக்கியமாக சிங்கம்புலி எண்டரி கொடுத்த பின்பு அவரை வைத்து நகரும் ஒவ்வொரு காட்சிகளும் அட்டகாசமாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் முதல் பாதி சொதப்பினாலும் இரண்டாம் பாதி குறை சொல்ல முடியாத அளவிற்கு நன்றாக அமைந்திருக்கிறது என்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் மகாராஜா படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் இப்படம் விஜய் சேதுபதியின் கேரியரை தூக்கி நிறுத்துமா? விட்ட இடத்தை பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகிய நிலையில் தள்ளாடுகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com



ஹீரோவுக்கு சமையல் செய்பவருக்கு ஒரு நாள் சம்பளம்: கேட்டு ஷாக் ஆன நடிகர்!
[Sunday 2024-06-23 07:00]

பொதுவாக நடிகர்கள் என்றால் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். அதனால் அவர்கள் சொகுசான வீடு, கார் என அவர்கள் வாழ்க்கை இருக்கும். படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைப்பார்கள். கேரவன், உணவு, மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எக்கச்சக்க செலவு வைப்பார்கள்.



கல்கியில் நடிக்க கமல் சம்மதிக்க காரணம் இதுதான்!
[Saturday 2024-06-22 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் கல்கி 2898 AD படம் உருவாகி இருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் கூட இதன் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. சூப்பர் ஹீரோ பாணியில் வெளிவந்த அந்த ட்ரெய்லரின் இறுதியில் கமலின் என்ட்ரி வேற லெவலில் இருந்தது.



நடிகர் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு விஷயம்!
[Saturday 2024-06-22 18:00]

விஜய்-அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளார்கள். ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்துவது விஜய்-அஜித்தின் படங்களின் வசூல் தான். இப்போது அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.



சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள்!
[Saturday 2024-06-22 18:00]

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம். இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள். அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.



பட்டையை கிளப்பும் 'கோட்' படத்தின் டீசர்! Top News
[Saturday 2024-06-22 06:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் GOAT. இப்படத்தின் பட்டையை கிளப்பும் க்ளிம்ஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது, இதோ...



கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் போக்கிரி!
[Saturday 2024-06-22 06:00]

நடிகர் விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி பட்டய கிளப்பிய கில்லி படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படம் ரீ-ரிலீஸிலும் செம வசூல் வேட்டை நடத்தியது.



"பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்" - விஜய் போட்ட உத்தரவு!
[Friday 2024-06-21 18:00]

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.



பண நெருக்கடியால் வெளியிட முடியாமல் தத்தளிக்கும் 4 படங்கள்!
[Friday 2024-06-21 18:00]

டாப் ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் லைக்காவுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. கடுமையான நிதி நெருக்கடிக்கு இந்த நிறுவனம் ஆளாகி இருக்கிறது. மணிரத்னத்துடன் இணைந்து இவர்கள் தயாரித்த பொன்னியின் செல்வன் ஏகப்பட்ட லாபத்தை கொடுத்தது. அதனாலயே இவர்கள் சந்திரமுகி 2, லால் சலாம் போன்ற படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்தனர்.



கள்ளக்குறிச்சி விவகாரம்: கொந்தளித்த சூர்யா!
[Friday 2024-06-21 18:00]

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விஷயம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் சூர்யா, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் பற்றி அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!
[Friday 2024-06-21 06:00]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது நடிப்பு திறமைக்காக கோலிவுட்டில் பெயர் பெற்றவர். அவர் சமீப கலாகாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அதில் ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார். அதே நிறத்தில் தெலுங்கு சினிமாவிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.



சேலையிலும் தாராள கவர்ச்சி காட்டும் நடிகை மாளவிகா மோகனன்! Top News
[Friday 2024-06-21 06:00]

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர். மாளவிகா தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ...



கள்ளக்குறிச்சி விரையும் விஜய்: கள்ளச்சாராய சம்பவத்துக்கு நேரில் இரங்கல்!
[Thursday 2024-06-20 19:00]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டவர்க்ளிகள் உயிரிழந்து இருப்பதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என நடிகர் விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



விஷ சாராயம் குடித்தவர்களின் பலி எண்ணிக்கை உயர்வது பேரதிர்ச்சியாக உள்ளது - நடிகர் விஷால்!
[Thursday 2024-06-20 18:00]

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் பலியான பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்பு 39 ஆக உயர்வு : கமல் ஹாசன் வேதனை!
[Thursday 2024-06-20 18:00]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கமல் ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்திற்கு மாஸ் டைட்டில்!
[Thursday 2024-06-20 06:00]

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆகிவிட்ட நிலையில், அதன் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படத்தை தொடங்கி இருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். SK 23 என தாற்காலிகமாக இந்த் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ருக்மிணி வசந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா