Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலகத் தமிழர் பேரவை! Top News
[Wednesday 2024-12-11 17:00]

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவம் டொரென்டோ மாநகரில் கடந்த 8ஆம் திகதி (December 8 2024) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தாயகத்தை நேசிக்கின்ற கனடா வாழ் மக்கள் மாத்திரமன்றி உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இணைய வழியாகவும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்புடன் இணைந்து பணியாற்றவும் உறுதியளித்தனர். புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நூற்றுக் கணக்கான அமைப்புகள் தாயகத்தை நோக்கிய அரவணைப்புக் கரங்களுடன் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளிலும் அரசியல் கட்டமைப்புக்களை முன்னோக்கி நகர்த்துவதிலும் பணியாற்றி வருகின்றன. இந்த ஒரு பின்னணியில் இன்னும் ஒரு அமைப்பு தேவையா என்ற கேள்விகள் எழும்பலாம்.

2009 ஆம் ஆண்டில் தாயக மண்ணில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசிய அவசரத் தேவைகளுக் கூடே தமிழ் மக்களின் இனப் பரம்பலை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் மக்களிடையே விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இதற்கும் அப்பால் தாயக "தமிழர் அரசியல்"; என்பது திசை மாறியதன் விளைவு இந்த அரசியல்மீது தாயக மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இதனால் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தாயக மண்ணில் நேரடியாக நிலை கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த ஒரு பின்னணியில் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றது என்பதுதான் டொரென்டோ மாநகரில் நடைபெற்ற "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் அங்குரார்ப்பன வைபவத்தில் கலந்து கொண்டோரினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களினதும் ஏகோபித்த முடிவாக அமைந்தது.

"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நிமால் விநாயகமூர்த்தி கருத்துரைக்கையில் 2009 க்குப் பின் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையாகும். "தாயகம்"; என்பது தாயகத்தில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர் மக்களுக்கும் அத்திவாரமாகும். தாயக மண்ணின் அத்திவாரம் அசைக்கப்படுவதையும் தகர்க்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர் சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதனை இலக்காகக் கொண்டே"அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. இதனை முன்னோக்கி நகர்த்த புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து வருகைதந்நத சட்டத்தரணி விக்னேஸ்வரா தனது வாழ்த்துரையில்

" போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தலைமை இன்றி அரசியல் அநாதைகளாக உள்ளனர். தாயக மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாக மாறி விட்டது. கடந்தகால தியாகங்கள ;மறக்கப்பட்டுள்ளன. தியாகங்கள் செய்தவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து தியாகங்களைச் செய்த தாயக மக்களும் புறந்தள்ளப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியமே கேள்விக்குள்ளாக்பட்டுவிட்டது. இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியம் ன்பது "நாடாளுமன்ற மாகாணசபைகளுக்கான கதிரைகளுக்கான "தேசியமாக" மாறிவிட்டது. இத்தகைய அபாயகரமான போக்கில் இருந்து தாயகமும் தமிழ்த் தேசியமும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். இதற்கு "அனைத்துலகத் தமிழ் பேரவை" அமைப்பின் வருகை அவசியமாகுகின்றது என்று குறிப்பிட்டார்.

இணையவழி வாழ்த்து

இணைய வழியூடாகக் கலந்து கொண்டவர்களில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தனது வாழ்த்துரையில் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது அவசர அவசியத் தேவையாக இருக்கின்றது.தமிழ் மக்களின் குறிப்பாக தாயக மண்ணின் பொருளாதார சமூக மேம்பாடு பண்பாடு மேம்படுத்தப்படல் வேண்டும். தாயக அரசியல் கபளீகாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஈழத் தமிழர் என்ற வகையில் புலத்திலும் தாயகத்திலும் ஒன்றிணைய வேண்டும். இதனை முன்னெடுக்க "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின்" வருகை அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் செல்வநாதன் இளையதம்பி கருத்துரைக்கையில் தமிழர் போராட்டத்தை முன் நோக்கி நகர்த்த ஐந்து முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டார்.

1. தாயகத்தில் மக்கள் தொகை குறைவடைந்து கொண்டு போகின்றது. மறுபுறம் தமிழர்களின் இனப்பரம்பல் பறி போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகை இன்றி போராட்டத்தை நகர்த்த இயலாது. கூடுதலான பிள்ளைகளைப் பெற்றால் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தாயக மக்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.எனவே கூடுதல் பிள்ளைகளைப் பெறுபவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். இல்லையேல் இன்னும் இரண்டொரு வருடங்களில் தாயகத் தமிழர் இனவிகிதாசாரத்தில் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவர்.

2.பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடு போக விரும்புகின்றனர். தாயகத்தில் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். பொதுத் தொழில் கட்டமைப்பு தனியார் தொழிற் துறை என்பன கட்டி எழுப்பப்பட வேண்டும். தாயக விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும்.

3.தாயகக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பாடசாலைகள் கூடுதலான வளங்களை புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து பெறுகின்றன. பெரும்பாலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன.இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழ் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

4.தாயகத்தில் பண்பாடு கலாசாரம் என்பன சீரழிந்து கொண்டு போகின்றது. மதுபாணம் மற்றும் போதைவஸ்த்து பாவணை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சீரழிவிற்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். தாயக மண் போதைவஸ்த்து மதுபாண பாவணையில் இருந்து மீட்டெடுக்கப்படல் வேண்டும்.

5. தாயக மக்களின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும். வதிவிட வசதியை உறுதிப்படுத்துவதுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதுடன் மக்கள் நிம்மதியாக வாழ உதவி செய்ய வேண்டும். தாயகத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். யூதர்கள் போன்று தாயக பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். தாயகப் பொருளாதாரத்தைக் கட்டி ழுப்பினால் மக்கள் தாமாக அரசியல் செய்வர்.

ராமு மணிவண்ணன் தமது வாழ்த்துரையில் " 2009 க்குப் பின் தமிழர்களின் தலைமையில் ஒரு வெற்றிடம் உள்ளது. வரலாறு கற்றுத்தந்த பாடம் என்ன? இன்றும் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும் தேட வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்து செல்ல வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

லோகன் லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கியதுடன் "அனைத்துலகத் தமிழர் பேரவை" அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

லிங்கஜோதி வினாசித்தம்பி ரஜீவ் முத்துராமன்பிரசன்னா பாலச்ந்திரன் பாலச்சந்திரன் நாகலிங்கம் மற்றும் பலரும் கருத்துரை வழங்கினர்.வாழ்த்துரைகளை வழங்கினர்.இந் நிகழ்ச்சியை கென் கிருபா ஒறுங்கிணைத்து வழிநடத்தினார். இறுதியில் மரியராசா மரியாம்பிள்ளை நன்றியுரை வழங்கினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா