Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா கந்தசாமி ஆலய நிர்வாக இயக்குனர் முத்து செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மூன்று வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார்! Top News
[Friday 2024-09-27 18:00]

முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின், பல காலம் வடக்கு பிராந்தியத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றுபவர்களும், பலரின் உயிர்களை காப்பாற்றியவர்களுமான இதய சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி லக்ஷ்மன் மற்றும் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரையும் அதற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக திறம்பட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல உயிர்களை மீட்டு தந்தவருமான நிபுணர் வைத்திய கலாநிதி சிவசங்கர் மற்றும் அனஸ்தீசியா நிபுணரான வைத்திய கலாநிதி ரமணன் ஆகியோரை சந்தித்து அங்குள்ள நிலைமைகளை அறிந்தார்.

அப்போது கனடிய மக்களின் பங்களிப்பினால் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக ஜூன் மாதம் அமெரிக்காவிலிருந்து தருவித்து வழங்கப்பட்ட விசேட இதய அதிர்வு யந்திரத்தினை கொண்டு சவால் மிக்க அறுபத்திற்கும் மேற்பட்ட இதய சத்திர சிகிச்சைகளை தாங்கள் யாழ் மருத்துவமனையிலேயே வெற்றிகரமாக செய்து நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி கொண்டிருப்பதனை வைத்தியர்கள் திரு முத்துவிற்கு தெரியப்படுத்தியதுடன் நிதியுதவி செய்த மக்களுக்கு தங்களது நன்றியினை கூறினர்.

அதன் பின் யாழ் மருத்துவமனையின் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்ற திரு முத்துவிற்கு சிறுநீரக நிபுணர் வைத்திய கலாநிதி பிரம்மா அவர்கள் தொடர்ச்சியாக செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு நிறுவித்து வரும் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள், இயந்திரங்களின் பயன்பாட்டினையும் அதன் பயனையும் தெரிவித்து கனடிய வாழ் தமிழர்களுக்கு தங்கள் வைத்திய குழுவின் சார்பிலும், நோயாளிகளின் சார்பிலும் நன்றியினை கூறினார். இதனையடுத்து சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று அங்கு குருதி சுத்திகரிப்பு நிலையத்திற்கு சமீபத்தில் செந்தில் குமரன் நிவாரண அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை பார்வையிட்டு அங்குள்ள நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

இறுதியாக மல்லாவி மருத்துவமனையில் நிவாரண அமைப்பினால் நிறுவப்பட்ட கனடா- மல்லாவி ரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் பயன்பாட்டினை பார்வையிட்டார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வைத்திய கலாநிதி தேஷாஞ்சலியும் அங்கு திரு முத்துவை வரவேற்க வந்த சில மல்லாவி வாழ் பிரதேச மக்களும் தங்கள் நன்றியினை நிதியுதவி செய்த மக்களுக்கு தெரிவிக்குமாறு கூறினர். இந்த ஆண்டின் முதற் பகுதியில் நிவாரண அமைப்பிற்கு நிதி சேகரிக்க கனடா கந்தசாமி ஆலயத்தில் இடம் தந்து அதன் ஊடாக இதய சத்திர சிகிச்சையினை பெற்று கொண்ட திருகோணமலையினை சேர்ந்த இரண்டு வயதான கன்சிகா அஜந்தனை அவரின் பெற்றோர் திரு முத்துவினை சந்திக்க மல்லாவி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அந்த சிறு குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க தங்கள் பிள்ளை நோய்வாய் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கையில் தாங்கள் பட்ட துன்பத்தினை கூறி, சத்திர சிகிச்சைக்கு நிதியுதவி செய்த கனடா கந்தசாமி ஆலய நிர்வாகிகளுக்கும் பக்தர்களுக்கும் நன்றி கூறியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. இங்கு முக்கியமாக குறிப்பிடவேண்டிய செய்தி, இதே போல் கனடா கந்தசாமி ஆலயத்தின் விசேட நாட்களில் சேகரிக்கப்பட்ட நிதியினை கொண்டு செந்தில் குமரன் ஏழு நோயாளிகளின் உயிர் காக்கும் சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக ஒழுங்கு செய்து முடித்துள்ளார் என்பதாகும். இந்த சந்திப்புகளின் ஊடாக கனடாவில் நிவாரண அமைப்பினால் சேர்த்து அனுப்பப்படும் நிதி, எங்கள் தாயக வாழ் மக்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பதனை கண்கூடாக பார்க்க நேரிட்டதாக திரு முத்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா