|
|
2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக வேதனைப்படுகிறேன்: விஜயகாந்த் குமுறல்
[Thursday 2015-12-31 08:00]
|
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக வேதனைப்படுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிந்து கட்சியினர் கலைந்து சென்ற பின்னர், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மேடை ஒலிபெருக்கிகள், பேனர்கள், கட்சிக் கொடிகளை அடித்து, நொறுக்கி தீவைத்தும் கொளுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தேமுதிக பேனர்கள் கிழிக்கப்பட்டு, எனது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த அராஜகம் நடக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு மறுநாள், தேமுதிகவைச் சார்ந்தவர்கள் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதாக தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
|
|
|
கிழக்கு தில்லியில் உள்ள வணிக வளாகத்தில் மகளிருக்கென பிரத்யேக மதுபான விற்பனையகம்!
[Thursday 2015-12-31 08:00]
|
கிழக்கு தில்லியில் உள்ள வணிக வளாகத்தில் மகளிருக்கென பிரத்யேக மதுபான விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.
மது அருந்தும் பழக்கம் ஆண்களிடையே அதிகம் இருந்தாலும், தில்லி போன்ற பெருநகரங்களில் பெண்களில் இளைய தலைமுறையினர் சிலரிடையே மதுப் பழக்கம் உள்ளது. அதேவேளையில், மதுக் கடைகளுக்கு ஆண்கள் போல பெண்களும் சகஜமாகச் சென்று மதுபானம் வாங்குவதில் சில அசௌகரியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
|
|
|
தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம் அருண் ஜேட்லிக்கு எதிராக 2 ஆதாரங்கள் வெளியிட்ட ஆம் ஆத்மி!
[Thursday 2015-12-31 08:00]
|
தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்ளும்படி, தில்லி காவல்துறை ஆணையர், சிறப்பு ஆணையருக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுதியதாக கூறப்படும் 2 கடிதங்களை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்டது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தக் கடிதங்களில் தவறாக எதுவும் இல்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் அந்த 2 கடிதங்களையும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷ் செய்தியாளர்கள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.
|
|
|
இந்தியாவில் 2016-ல் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்:
[Wednesday 2015-12-30 19:00]
|
2016-ல் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இணையதள வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 40 கோடி யாக உள்ளது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆண்டுகளில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டுவதே இலக்கு என்று முன்னர் தெரிவித்தேன். அந்த இலக்கு அடுத்த ஆண்டு எட்டப்பட்டுவிடும் என்று கூறினார்.
|
|
|
அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும்: - வேல்முருகன் வேண்டுகோள்
[Wednesday 2015-12-30 14:00]
|
தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்பொழுது 3 தமிழரின் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் குறித்தும், 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து முதல்வர் அறிவித்தது; மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட இடைவிடாத முயற்சிகளுக்காக முதல்வருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
|
|
|
கிரிக்கெட் சங்கத்தில் மகனை தேர்வு செய்ய தாயிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
[Wednesday 2015-12-30 08:00]
|
மாநில கிரிக்கெட் சங்கத்தில் மகனை தேர்வு செய்ய தாயிடம் பாலியல் பேரம் நடத்தியதாக டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சிலர் மீது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மனைவி, தனது மகனை கிரிக்கெட் சங்கத்தில் தேர்ச்சி பெற அதிகாரியிடம் பேரம் பேசியபோது, அந்த அதிகாரி ஓர் இரவு தன்னுடன் கழிக்கும்படி தாயை மிரட்டியதாகவும், எஸ்.எம்.எஸ். கொடுத்து தொந்தரவு செய்ததாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அருண் ஜெட்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள கெஜ்ரிவால், தற்போது இந்த புதிய புகாரை தெரிவித்துள்ளார்.
|
|
|
விஜயகாந்தை கைது செய்ய ஜனவரி ஐந்தாம் தேதிவரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Wednesday 2015-12-30 08:00]
|
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கைதுசெய்ய உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜனவரி ஐந்தாம் தேதிவரை இடைக்காலத் தடை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.
தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், அங்கிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தே.மு.தி.கவினர் அங்கிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றினர். இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
|
|
|
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு:
[Tuesday 2015-12-29 19:00]
|
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறை 12 வாரங்கள் என்ற அளவிலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்க, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
|
|
|
ஆசியாவில் ஊடகவியலாளர்கள் உயிரைப் பறிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!
[Tuesday 2015-12-29 17:00]
|
அமைதிப் பூங்காவாக திகழும் நாடுகளில் தான் இந்த ஆண்டு அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் "இந்த ஆண்டு உலகம் முழுவதும் 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 43 பேரின் படுகொலை பற்றி தெளிவான தகவல் இல்லை. உலகம் முழுவதும் தொழில் ரீதியாக அல்லாமல் மக்கள்-ஊடகவியலாளர்கள் பிரிவில் பணியாற்றிய 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஊடக நிறுவனங்களில் வேலைப்பார்த்த 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் 2 பங்கு ஊடகவியலாளர்கள் அமைதி தவழும் நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
|
|
|
ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!
[Tuesday 2015-12-29 17:00]
|
ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு இயக்கப்படும், ஹவுரா-அம்ரிட்சர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி, தான் புக் செய்திருந்த பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக தெரியாமல், ராணுவத்தினருக்காக புக் செய்யப்பட்ட கோச்சில் ஏறியுள்ளார். இதைப்பார்த்த ராணுவத்தினர் சிலர், அந்த சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். சிறுமி பாத்ரூம் சென்றபோது, அங்கு வைத்து இருவர் பலாத்காரம் செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம், மதுபூர் ரயில் நிலையத்தில் வைத்து, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, சமூக சேவகர்கள் சிலர் மீட்டு காவல் நிலையம் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சையளித்த பிறகு,
|
|
|
குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்தால் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் தகவல்
[Tuesday 2015-12-29 17:00]
|
குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.
|
|
|
2016ஆம் ஆண்டு யாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி
[Tuesday 2015-12-29 16:00]
|
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு பாடம் புகட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் மழை நிவாரணம் வழங்கக் கோரி நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க விஜயகாந்த் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த படத்தை தேமுதிகவினர் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர், தேமுதிகவினர் பேனர், கொடிகளை எரித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம், புதுவையிலும் வெடித்தது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்க வேண்டாம்; 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என கூறியிருந்தார்.
|
|
|
சி.பி.ஐக்கு நான் பயப்படப்போவதில்லை,எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்: அரவிந்த் கேஜ்ரிவால்
[Tuesday 2015-12-29 09:00]
|
சி.பி.ஐக்கு நான் பயப்படப்போவதில்லை. எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று தில்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் கூறியதாவது: -வியாபம் ஊழல் விவகாரத்தை திசை திருப்ப என் அலுவலகத்தை சோதனை நடத்தியுள்ளனர். நான் எந்த தவறும் செய்ய வில்லை. நாங்கள் போராட விரும்ப வில்லை. தில்லியில் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறோம்.
நீங்கள் எனக்கு பணம், நிலம் எதுவும் தரவேண்டும் என்று நான் பிரதமரை சந்தித்து கூறினேன். நானும் துணை முதல்வர் மணீஷும் பிரதமரை நேரில் சந்தித்து நாங்கள் உங்கள் குழந்தைகள் போல் எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அமைதியாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.
|
|
|
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனரை அகற்றிய விவகாரம்: விஜயகாந்த் வீடு,அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
[Tuesday 2015-12-29 09:00]
|
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனரை தேமுதிகவினர் அகற்றிய விவகாரம் தமிழகம் முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து ன்னையில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
இந்தியா ஈரானுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி
[Tuesday 2015-12-29 09:00]
|
இந்தியா ஈரானுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தில்லியில் நடக்கும் இருதரப்பு கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஈரான் நாட்டின் பொருளாதார விவகார மற்றும் நிதியமைச்சர் டாக்டர் அலி டாயிபின்யா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, இணைப்பு, துறைமுக அபிவிருத்தி உட்பட, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
|
|
|
மும்பையில் இன்று அதிகாலை இரட்டை அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து!
[Tuesday 2015-12-29 08:00]
|
மும்பை அருகே உள்ள பிவண்டியில் இன்று அதிகாலை இரட்டை அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 12 பேரில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 2 பேர் இடர்பாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். அவர்களை காபாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
|
|
|
வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிகள் தோல்விகளில் கற்றுக்கொண்டதன் மூலம் உருவானவை: மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரி
[Monday 2015-12-28 22:00]
|
ஆந்திரவை பூர்வீகமாக கொண்டவரும் மைக்ரோசாப்ட்டின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுருமான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சத்ய நாதெல்லாவும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் இன்று கையெழுத்திட்டனர். பின்னர் டி-ஹப் என்று அழைக்கப்படும் மென்பொருள் தொழில் பூங்கா கூட்டத்தில் பேசிய சத்ய நாதெல்லா பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
|
|
|
அன்புமணிக்கு போட்டி சகாயமா?
[Monday 2015-12-28 21:00]
|
தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை சகாயம் ஐஏஎஸ் மட்டுமே கொடுக்க முடியும். அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. மக்கள் நலக் கூட்டணி, நேர்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால், சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், சகாயம் குறித்த சமீபத்திய பரபரப்பிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில்,
|
|
|
டெல்லி அருகே குர்கானில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: - பட்டப்பகலில் துணிகரம்
[Monday 2015-12-28 21:00]
|
டெல்லி அருகே குர்கானில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டார். டிஎஸ்டி கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, இன்று காலை கல்லூரியின் வாசல் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல், திடீரென அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றது. அந்தப் பெண் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகினது. இதை வைத்து, மாணவியை கடத்தச் சென்ற வெள்ளை நிற கார் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் 4 பேர் வந்ததாகவும், கார் நம்பர் பிளேட்டை சேறு பூசி மறைத்திருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
|
|
|
உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான்: - ராஜ்நாத் சிங்!
[Monday 2015-12-28 21:00]
|
உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதம், தீவிராவதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளோம். இது தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற முடியும்.
தேசிய புலனாய்வு அமைப்பு சிக்கல்கள் நிறைந்த குற்ற வழக்குகள், பயங்கராவதம், தீவிரவாதம் மற்றும் மவோயிஸ்ட் குறித்த வழக்குகளில் உலக அளவில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் பங்கு மிகுந்த சாவல்கள் நிறைந்ததாக உள்ளது.
|
|
|
தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டியக்கம் மிகப் பெரிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்: - வைகோ
[Monday 2015-12-28 21:00]
|
அரியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:
|
|
|
|