Untitled Document
September 18, 2024 [GMT]
மசூத் அசாரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்த பின்னரே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: - சிவசேனை வலியுறுத்தல்
[Friday 2016-01-15 10:00]

பதான்கோட்டில் நிகழ்ந்தப்பட்டதைப் போன்று, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போதெல்லாம், அதற்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்வது போல் நாடகமாடுவதும், பின்னர் அவர்களை விடுதலை செய்வதும் பாகிஸ்தானுக்கு கைவந்த கலையாகும்.எனவே, பதான்கோட் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி மசூத் அசாரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்வரை, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.தீர்க்கமாக செயல்பட வேண்டும்-காங்கிரஸ்: இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் கூறியபோது, "பாகிஸ்தான் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தீர்க்கமான முடிவுடனும், அந்த நாட்டுடனான பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்ட காலவரையறுக்குள் பேசி தீர்வுகாணும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டும்' என்றார்.


இந்தியர்களை ஹிந்துக்கள் என்றே வெளிநாட்டினர் அழைக்கின்றனர்:- ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்
[Friday 2016-01-15 00:00]

இந்தியாவின் குணம் பன்முகத்தன்மை என்றும், அதேநேரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை ஹிந்துக்கள் என்றே அந்நாட்டினர் அழைக்கின்றனர் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், நந்துர்பார் மாவட்டத்தில் மகர சங்கராந்தியையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான். நாட்டிற்குள் பன்முகத்தன்மை நிலவினாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.இந்தியாவைத் தவிர, உலகில் வேறெந்த நாட்டிலும் உலக மக்கள் அனைவரையும் தங்கள் சொந்தம்போல் கருதுவோர் இல்லை.


முதல்முறையாக பதினெட்டு நாடுகள் உள்ளடங்கிய மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி! - இந்திய ராணுவம் ஏற்பாடு!
[Thursday 2016-01-14 23:00]

பதினெட்டு நாடுகள் உள்ளடங்கிய ஆசியான் பிளஸ் நாடுகளின் ராணுவப்படை பங்குபெறும் வகையில் முதல்முறையாக, உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை வரும் மார்ச் மாதம் புனேயில் நடத்துகிறது இந்திய ராணுவம். 'எக்ஸ்சர்சைஸ் போர்ஸ் 18' என்ற பெயரில் இந்த பயிற்சி உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. நட்பு நாடுகளின் ராணுவத்திடம் இருந்து பல நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் 10 தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனேய், வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா மற்றும் சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.


மதுரையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி உண்ணாவிரதம்: - வைகோ
[Thursday 2016-01-14 17:00]

மதுரையை அடுத்துள்ள ஒத்தக்கடையில் வருகிற 26


தைத் திருநாள் - தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்திட உறுதியேற்போம் ! - விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை
[Thursday 2016-01-14 16:00]

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் திருநாளில் விடுதலைச்சிறுத்தைகளின் மனமுவந்த நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் ஆண்டு முழுதும் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஒரே பண்டிகை, "தமிழர் திருநாள்" என்று அழைப்பதற்குரிய சிறப்பைப் பெற்றுள்ள ஒரே பெருநாள், உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி உவந்து மகிழும் உன்னத நாள், ஒளியளிக்கும் கதிரோனுக்கும் உடனுழைக்கும் காளைகளுக்கும் பச்சரிசியில் பொங்கலிட்டு படைத்து வணங்கி நன்றி செலுத்தி உள்ளம் நெகிழும் உயரிய நாள், தைத் திருநாளாம் பொங்கல் திருநாள்!


தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப் பொங்கல்: - சீமான்
[Thursday 2016-01-14 16:00]

காரிருள் நீக்கி, கொடும்பகை அழித்து, புத்தொளி வீசி, புவி அருள் செய்யப் புறப்பட்டு வருகிறது தமிழரின் புத்தாண்டு. காலங்காலமாக அடிமைப் பட்டு கிடக்கும் அன்னைத் தமிழினம் விழிகளின் ஓரம் நம்பிக்கைச் சிவப்பேற்றி வரும் நாட்கள் வாழ்வினைத்தரும், வசந்தத்தினை வரவேற்கும் எனக் காத்துக் கிடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டு, நிலம்,நீர்,காடு என அனைத்தையும் இழந்து விட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் தங்கள் அடிமை இருள் நீங்க தங்களைத் தாங்களே மீள் எழுப்பி ஒரு புதிய புரட்சிப் பூபாளம் இசைக்க அணியமாகி இருக்கிறார்கள்.


தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்: - ஜெயலலிதா
[Thursday 2016-01-14 15:00]

அன்பிற்குரிய தமிழக மக்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கழுத்தறுத்து இளைஞர் கொலை: வன்முறை வெடித்தது
[Thursday 2016-01-14 13:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கழுத்தறுபட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.ஸ்ரீநகரில் ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது பாஷிர் மாலிக் என்பவரின் மகன் ஓவைஸ் பாஷிர் மாலிக் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த தகவல் பரவியதும், காவல்நிலையம் முன்பு கூடிய ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையம் மீது கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.


தமிழில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி!
[Thursday 2016-01-14 13:00]

தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று ட்விட்டரில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.வேறுமையில் ஒற்றுமையாக இந்த நாள் திகழ்கிறது கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


பேஸ்புக் பதிவால் வந்த வினை: - மாயாவதியின் காலில் விழுந்த பெண் வேட்பாளரின் வாய்ப்பு பறிப்பு
[Thursday 2016-01-14 13:00]

மாயாவதியின் காலில் விழுந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதால், உத்தரப்பிரதேச மாநிலம், அத்ரெளலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இருந்த பகுஜன் சமாஜ் கட்சி பெண் வேட்பாளரின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், அடுத்த ஆண்டு (2017) சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். அதன்படி, அத்ரெளலி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தர்மேந்திர செளதரி. அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.


வேலையற்ற பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன்: - முதல்வர் அறிவிப்பு
[Thursday 2016-01-14 07:00]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வெள்ளம் பாதித்த மாவட்ட இளைஞர்களுக்கு கடன் வழங்கப்படும். கடனை பெற பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.வேலையற்ற பட்டதாரிகள் சுய தொழில் துவங்க, 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


குஜராத் மாநில பா.ஜ.க. தலைவராக தேர்வாகிறார் அமித்ஷா!
[Thursday 2016-01-14 07:00]

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க.வுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. அதன் முதல்கட்ட பணியாக குஜராத் பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்க அமிஷ்தா முடிவு செய்துள்ளார்.


தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: - சீமான் வலியுறுத்தல்
[Wednesday 2016-01-13 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,


ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடவில்லை: - திமுக தலைவர் மு.கருணாநிதி
[Wednesday 2016-01-13 22:00]

ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடுவதாக தான் நினைக்கவில்லை என திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாநில அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இது ஒரு சட்டப் பிரச்னை. அதுகுறித்து ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது என்றார்.ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்றார் கருணாநிதி.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது: - மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
[Wednesday 2016-01-13 20:00]

ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் அமைப்பினர் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதிக்குமாறுக் கோரியிருந்தனர்.இந்த மனு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும்! - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
[Wednesday 2016-01-13 19:00]

ஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை. பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகள்தான் ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று! அதற்கு எவ்வித குந்தகமோ, தடையோ இல்லாத ஆட்சியாக தனது ஆட்சியை நடத்தவேண்டியது அதன் முக்கிய தேவையாகும்!


கரும்பு விவசாயிகளை அதிமுக அரசு ஏமாற்றுகிறது: - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
[Wednesday 2016-01-13 19:00]

கரும்பு விவசாயிகளை அதிமுக அரசு ஏமாற்றுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரும்பு விவசாயிகள், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 கேட்டு போராடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலிதா ரூபாய் 2850 என ஆதாரவிலையை அறிவித்துவிட்டு, இது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்குமென கூறி இருப்பது நகைப்பிற்குரியதாகும். மத்திய அரசு ஆதார விலையை அறிவித்து பல மாதங்களுக்குப் பிறகு, கரும்பு அரவை பருவம் துவங்கி பலநாட்களுக்குப் பிறகு, தற்போதுதான் மாநில அரசின் ஆதாரவிலையை அதிமுக அரசு அறிவித்துள்ளது.


வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முதல்வர் ஜெயலலிதா
[Wednesday 2016-01-13 13:00]

தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவைக் காப்பாற்றி வருகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா இன்று உரையாற்றினார்.அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்.அதிமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றும் என்று தெரிவித்தார்.அதிமுக அலுவலகம் முன்பு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முன்பு ஜெயலலிதா உரையாற்றியதற்கு, தொண்டர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.


மோசடி வழக்கிலிருந்து கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்தத உயர் நீதிமன்றம்!
[Wednesday 2016-01-13 12:00]

மோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர்.ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு, நிலத்தை விற்கவும் இல்லை, முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.


கொல்கத்தாவில் குடியரசு தின பேரணி ஒத்திகையின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி பலி!
[Wednesday 2016-01-13 07:00]

கொல்கத்தாவில் குடியரசு தின பேரணிக்காக ஒத்திகை பயிற்சியின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்ரல் அபிமன்யு கௌட்(30) என்ற அதிகாரி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா பேரணிக்கான ஒத்திகையை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆடி கார் ஒன்று அவர் மீது மோதியது.


சூரிய மின் உற்பத்தி சாதன ஊழல் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் விசாரணை!
[Wednesday 2016-01-13 07:00]
சூரிய மின் உற்பத்தி சாதன ஊழல் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் வரும் 25-ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது. கேரளத்தில் கட்டடங்களின் மேற்கூரையில் பொருத்தப்படும் சூரிய

மின் உற்பத்தி சாதனங்களைத் தயாரிப்பதாக "டீம் சோலார்' என்ற நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேருவதற்கு பல முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும், சூரிய மின் உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்க பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.


நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்தியவர்தான் நிதியமைச்சர் ஜேட்லி: - காங்கிரஸ்
[Wednesday 2016-01-13 07:00]

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்தியவர்தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.தில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தை முடக்குவதில் நேரு குடும்பத்தினர் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்திருந்தார்.இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமளியால் நாடாளுமன்றம் முடங்குவது குறித்து அருண் ஜேட்லி கவலை தெரிவித்து வருகிறார்.


பதான்கோட் விமான தளத்தில் ரூ. 20 கொடுத்தால் ஆடு மேய்க்கலாம்!
[Tuesday 2016-01-12 22:00]

பதான்கோட் விமான தளத்தை சுற்றியுள்ள மக்கள் ரூ. 20 கொடுத்து அங்கு தங்களது ஆடுகளை மேய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்துக்குள் கடந்த 2 ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து பதான்கோட் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பதான்கோட் விமான தளத்தைச் சுற்றி வசிப்போர், தங்களது ஆடு, மாடுகளை அந்த தளத்துக்குள் அழைத்து சென்று மேய்துள்ளது தெரியவந்தது. அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு அலுவலர்களிடம் ரூ. 20 கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை: -தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றம்
[Tuesday 2016-01-12 21:00]

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த 7ம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் அதற்கான ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டு வந்தனர். வாடிவாசல்களில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது.


அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய பூங்காவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகம்!
[Tuesday 2016-01-12 20:00]

அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய உயிரியியல் பூங்காவில் மேலும் ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டிருப்பது இன்று காலை தெரியவந்தது.ஞாயிற்றிக்கிழமை இரவு இப்பூங்கா பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சரியான இடத்தை கண்டறியமுடியவில்லை என பூங்கா அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில் இன்று காலை பூங்கா அலுவலர்கள் இறந்து போன காண்டாமிருகத்தின் உடலை சித்தோல்மரி பகுதியில் கண்டறிந்தனர்.


குடியரசு தினத்தன்று இலங்கை சிறையில் உள்ள 114 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்: - மீனவர் பேரவை
[Tuesday 2016-01-12 20:00]

சிறைவைக்கப்பட்டுள்ள 114 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற குடியரசு தினத்தன்று நாகப்பட்டிணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தேசிய மீனவர் பேரவை தீர்மானித்துள்ளது.இதுகுறித்து பேரவையின் தலைவர் மா. இளங்கோ வெளியிட்ட அறிக்கை:கடந்த 26-2-2015 முதல் 10 மாதங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு அவை இலங்கை கடற்கரைகளில் மக்கி பாழாகி வருகின்றன.தமிழக மீனவர்கள் 114 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் தமிழகம் முழுவதும் மீனவ சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.


திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!
[Tuesday 2016-01-12 07:00]

திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.


இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை அமைச்சரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது: - ராமதாஸ்
[Tuesday 2016-01-12 07:00]

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார்.இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா