Untitled Document
June 29, 2024 [GMT]


ஜேர்மனியில் களைகட்டும் யூரோ கிண்ணம்: கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர்!
[Monday 2024-06-17 06:00]

ஜேர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் கோடாரியுடன் பொலிசாருக்கு மிரட்டல் விடுத்த நபரை, பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபரை சுட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், அந்த நபர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய மாலுமி: கிரேக்க தீவில் சோகம்!
[Saturday 2024-06-29 06:00]

கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) பிரித்தானிய மாலுமி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) அருகில் நாற்பது வயதுடைய பிரித்தானிய மாலுமி வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உள்ளூர் படகுப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறப்படும் அந்த மனிதர், கிரேக்க கடலோரக் காவல் படையினர் தகவலின்படி, தலையின் இடது பக்கத்தில் காயங்களுடன் ஒரு விரிகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?
[Saturday 2024-06-29 06:00]

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தப்படும் திட்டமாகும்.


இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு!
[Saturday 2024-06-29 06:00]

இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்!
[Friday 2024-06-28 19:00]

பிரான்ஸ் நாட்டைவிட்டு ஒரு தரப்பினர் வெளியேறுவதைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக, நன்கு படித்தவர்களாகிய, பிரான்ஸ் குடிமக்களான, இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஏராளமானோர், பிரான்சைவிட்டு அமைதியாக வெளியேறியுள்ளது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் பற்றிய தகவல்!
[Friday 2024-06-28 19:00]

கனடாவில் அதிக அளவில் வதிவுரிமை அந்தஸ்தினை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


தாய்வான் வான் எல்லைக்குள் 10 சீன போர் விமானங்கள்!
[Friday 2024-06-28 19:00]

தாய்வானின் வான் பரப்புக்குள் பத்து சீன விமானங்கள் இவ்வார முற்பகுதியில் பிரவேசித்ததாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


மாலத்தீவு ஜனாதிபதிக்கு பில்லி, சூனியம் வைத்த இரு அமைச்சர்கள் கைது!
[Friday 2024-06-28 19:00]

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார்.


பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த மருத்துவ பணியாளர்!
[Friday 2024-06-28 06:00]

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில் சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.


வெளிநாடொன்றில் ரயிலும்-பஸ்ஸும் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
[Friday 2024-06-28 06:00]

ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் Nove Zamky என்ற நகரத்திற்கு அருகில் நேற்று மாலை 5 மணிக்கு சற்று பிறகு ரயிலும் பஸ்ஸும் மோதி கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்யூட் அடையாள மோசடி வழக்கு: கனேடிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை!
[Friday 2024-06-28 06:00]

கனடாவில் Inuit அடையாள மோசடி வழக்கில் டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவின் நுனாவுட்(Nunavut) நீதிபதி இன்யூட்(Inuit) பூர்வீக குடிமக்கள் அல்லாத டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.


பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்!
[Thursday 2024-06-27 06:00]

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


பாகிஸ்தானில் மர்மமான முறையில் 22 பேர் மரணம்!
[Thursday 2024-06-27 06:00]

பாகிஸ்தானின் கராச்சியில் மர்மமான முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இதனால், கராச்சியில் உச்சக்கட்ட உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது!
[Thursday 2024-06-27 06:00]

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman என்பவர், உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.


அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை!
[Wednesday 2024-06-26 16:00]

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளது.


கனடாவில் கைதான 124 பேர்: ஏன் தெரியுமா?
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


பறந்து வந்த குப்பை பலூனால் விமான நிலையத்தை மூடிய தென் கொரியா!
[Wednesday 2024-06-26 16:00]

பறந்து வந்த வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியா விமான நிலையத்தில் விழுந்ததனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.


கனடா இடைத்தேர்தல்: ட்ரூடோ கட்சிக்கு தோல்வி!
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல தேர்தல்கள், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை தெளிவாகக் காட்டியுள்ளன. அது பிரித்தானியாவானாலும் சரி, ஜேர்மனியானாலும் சரி, ஆளும் கட்சியினர் பின்னடைவையே சந்தித்துள்ளார்கள்.


இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த பரிதாபம்!
[Wednesday 2024-06-26 06:00]

இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில்(treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்!
[Wednesday 2024-06-26 06:00]

கனடாவின் டொரண்டோவில் உள்ள விளையாட்டு திடல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரண்டோவில் உள்ள ஜேன் வீதி மற்றும் பால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரித்தானியாவுக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்!
[Wednesday 2024-06-26 06:00]

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்ததை ஏற்று, நீதிமன்றம் குற்றவாளிகளுடைய தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.


கனடாவின் பண வீக்கம் குறித்து வெளியான தகவல்!
[Tuesday 2024-06-25 18:00]

கனடாவின் பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு விதத்திற்கும் குறைந்த அளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.


பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியுலகை பார்க்கும் ஜூலியன் அசாஞ்சே!
[Tuesday 2024-06-25 18:00]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு இந்த சுதந்திரம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


கனடிய இடைத்தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!
[Tuesday 2024-06-25 18:00]

டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார்.


பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்!
[Tuesday 2024-06-25 18:00]

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.


ரஷ்யாவில் வழிபாட்டுத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல்!
[Tuesday 2024-06-25 06:00]

ரஷ்யாவில் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தானில் (Dagestan) ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஒரு தேவாலயத் தந்தை கொல்லப்பட்டதாக மாநில ஆளுநர் செர்ஜி மிலிகோவ் (Sergei Melikov) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


விமான நிலையத்தில் PG Work Permit விண்ணப்பத்தை நிறுத்திய கனடா!
[Tuesday 2024-06-25 06:00]

Flagpoling-ஐ தவிர்ப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு PG work permit விண்ணப்பம் வசங்குவதை கனடா நிறுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 21 முதல் அமலுக்கு வந்தன. வேலை மற்றும் நிரந்தர வதிவிடத்தை நாடும் சர்வதேச மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி பணிக்கான அனுமதி (PGWP) முக்கியமானது.


ஹஜ் யாத்திரையில் 1301 பேர் மரணம்: சவுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
[Tuesday 2024-06-25 06:00]

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் வெயிலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 83 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹஜ் செய்ய வந்தவர்கள் என்றும், போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியில் நீண்ட தூரம் நடந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈபிள் டவர் டிக்கெட் விலை 20% உயர்வு!
[Monday 2024-06-24 06:00]

ஈபிள் டவர் கோபுரத்தின் டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. பாரிஸின் ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் ஈபிள் டவரின் சுற்றுலா டிக்கெட் விலைகள் 20% உயர்த்தப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்னதாக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.

Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா