Untitled Document
September 18, 2024 [GMT]
ஆசியாவிலேயே மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் சீனாவில் திறப்பு!
[Thursday 2015-12-31 16:00]

ஆசியாவிலேயே, மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம், சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. குறித்த மிகப்பரிய சுரங்க ரயில் நிலையம், குவாங்டாக் மாகாணம், ஷென்ஜென் நகரில், பூமிக்கடியில், 1.47 லட்சம் சதுர மீட்டர் பரப்பில், மூன்று மாடிகளோடு கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த சுரங்க ரயில் நிலையமே, ஆசியாவிலேயே மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதில், ஒரே நேரத்தில், 3,000 பயணிகள் வந்து செல்ல, அமர வசதி செய்யப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.


பிறக்க இருக்கும் 2016ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய்களினால் பாதிக்கப்படுவர்:
[Thursday 2015-12-31 12:00]

பிறக்க இருக்கும் 2016ஆம் ஆண்டில் உலகில் பல இலட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக தொண்டு முகவர் நிறுவனங்கள் கூறியுள்ளன. எல்நினோ காலநிலை மாற்றம் கடுமையாவதன் காரணமாகவே இந்த அபாய நிலை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பருவ நிலை மாற்றம் சில இடங்களில் வறட்சியையும் அதேவேளையில் வேறு சில இடங்களில் அதிக வெள்ளத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் விஷேடமாக ஆபிரிக்காவில் சில இடங்களில் எதிர்வரும் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க நகைச்சுவை நடிகர்!
[Thursday 2015-12-31 12:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் பில் காஸ்பி என்பவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு, தன்னோடு குறித்த நபர் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக, பென்சில் வேனியாவில் உள்ள பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தொடர்ந்து 25 பெண்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த நகைச்சுவை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 17 லட்ச ரூபாய்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், அந்நாட்டு உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மெக்சிக்கோவில் தொடரும் பனிப் பொழிவு:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
[Thursday 2015-12-31 11:00]

இயற்க்கை அழகு கொட்டிக் கிடக்கும் மெக்சிக்கோவின் பல பிராந்தியங்களிலும், பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. அந்தவகையில், மெக்சிகோ நாட்டில் உள்ள சியூடேட் ஜுவாரேஸ் நகரில்தான் இந்த கடும் பனிபொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக, அங்கு நிலவி வரும் பனிபொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலவும் பனிபொழிவால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அல்லலுற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு, வீதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


சீனா சுரங்க விபத்தில் 5 நாட்களுக்குப் பின் 8 பேர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிப்பு!
[Thursday 2015-12-31 08:00]

கிழக்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கத்தின் மேலிருந்து துளையிட்டு அதற்குள் காமிராவை அனுப்பி நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இன்னும் 8 பேர் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உதவிப்பொருட்களை அனுப்பும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் 400 -க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கனடா விமானத்தில் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்திய பஞ்சாபி கைது!
[Thursday 2015-12-31 08:00]

விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கியதாக கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பஞ்சாப் மாநிலத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொரொடோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. 47 வயதுமிக்க ஜாஸ்கரன் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். கனடாவின் அல்பெர்டா பக்குதியில் வசித்து வரும் சித்து, விமானத்தின் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


இந்திய பிரதமர் மோடியின் லாகூர் பயணத்திற்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!
[Thursday 2015-12-31 08:00]

பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானுக்கு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, லாகூரில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. பா.ஜ.க., தரப்பில் இது மோடியின் ராஜதந்திர நடவடிக்கையாகவே கருதப்பட்டது.


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா விமான தாக்குதல்: - 3 மாதங்களில் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
[Thursday 2015-12-31 08:00]

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், போராளிக் குழுக்களும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இது போர்க்குற்றம் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபையும் கூறியது. இந்நிலையில், சிரியாவின் மனித உரிமைகைள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷ்யா கடந்த மூன்று மாதங்களில் நடத்திய விமான தாக்குதல்களில் 2371 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 குழந்தைகள் உள்பட 792 பேர் பொதுமக்கள் ஆவர்.


ஃபேஸ்புக் நிறுவனம் தம்மிடம் அனைத்து தகவல்களையும் பகிரவில்லை: - பங்குதாரர்கள் வழக்கு
[Thursday 2015-12-31 08:00]

ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்களில் இரு குழுவினர் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த நிறுவனம் இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறது. தமது எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகளை ஃபேஸ்புக் மறைத்துவிட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தத் தீர்ப்பு குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் தனது பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்ட சில மாதங்களில் அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் ஏறக்குறைய ஃபேஸ் புக் பங்குகளின் மதிப்பில் சரிபாதி வீழ்ச்சியடைந்தது. அதேசமயம் ஃபேஸ்புக் பங்குகளை இன்றுவரை தொடர்ந்து வைத்திருப்பவர்கள் கூடுதல் லாபம் சம்பாதித்திருப்பார்கள்.


ஆபாசப் படத்தில் நடிக்கத் தயார்:
[Wednesday 2015-12-30 23:00]

சர்ச்சைகளுடன் நடந்து முடிந்த உலக அழகிப் போட்டியில், நூலிழையில் உலக அழகிப் பட்டத்தை தவற விட்ட, மிஸ் கொலம்பியா அட்ரியாட்னா கூடிரர்சுக்கு பிரபல ஆபாசப் பட நிறுவனமான விவிட் எண்டர்டெயின்மெண்ட் பார்ன் ஸ்டூடியோ (Vivid Entertainment porn studio), தங்களது ஆபாசப் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் தரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த வாய்ப்பு குறித்து அட்ரியாட்னா கூறுகையில்,


ரஷ்யாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக 2 மாணவிகளுக்கு ஐந்தாண்டு சிறை!
[Wednesday 2015-12-30 19:00]

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக 2 மாணவிகளுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் படையில் ரஷ்யாவை சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் தற்போது அங்கு ஆயுதம் போராடி வருவதாகவும், இதில் சிலர் அங்கு போராடிவிட்டு தாய்நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டதாகவும் ரஷ்ய உளவுத்துறை கருதுகின்றது. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்களை ஆதரிக்கும் வகையில் அவர்களுக்கு நிதியுதவி செய்ததாக கடந்த ஆண்டு இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.


சீனாவின் முதல் பிரதமர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்:
[Wednesday 2015-12-30 19:00]

இந்தப் புத்தாண்டில் ஹாங்காங்கில் வெளிவரவிருக்கும் புத்தகம் ஒன்று, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவின் மிகவும் மரியாதைக்குரிய முதல் பிரதமரான சோ என்லாய், ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவர் தன்னுடைய பள்ளித் தோழனுடன் மிகவும் நெருக்கமான அன்பு வைத்திருந்ததாகவும் அப்புத்தகம் கூறுகின்றது. லிபரல் அரசியல் இதழின் முன்னாள் ஆசிரியரும், ஹாங்காங்கைச் சேர்ந்த எழுத்தாளருமான சொய் வின் முய், ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தனது முதல் புத்தகத்தை எழுதியுள்ளார்.


செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும்! - ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டு கையேடு!
[Wednesday 2015-12-30 12:00]

சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை கைபற்றி அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உள்பட சில நாடுகள் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக நடத்தி வருகின்றனர். தற்போது செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கையேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என 15 அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது. சிலர் செக்ஸ் அடிமைகளை தவறாக பயன்படுத்துவதாக தெரிகிறது. இதை ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளாது என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட உத்தரவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கணவர் அல்லாதவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறி பிரம்மபடி!
[Wednesday 2015-12-30 08:00]

இந்தோனேஷியாவின் பந்த ஏஸெ மாகாணத்தில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது இங்கு உள்ள பைதூரஹீம் மசூதி அருகே நூர் எலிட்டா என்ற 20 வயது பெண் ஒருவர் தனது கணவர் அல்லாத ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மபடி கொடுக்கபட்டது. பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.அங்கு ஷரியத் சட்டத்தின் கீழ், திருமணமாகாத மற்றும் தொடர்பில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் நெருக்கமாக இருக்க அனுமதி இல்லை.


மிதரக மகிழுந்து தேர்வு: - துபாயில் அசத்தும் தூய தமிழ்
[Wednesday 2015-12-30 08:00]

துபாயில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் ஆங்கிலம், அரபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இதனை மேலும் எளிதாக்கும் வகையில், தமிழ், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய நான்கு இந்திய மொழிகள் உள்பட ஏழு மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஜூன் மாதம் துபாய் அரசு அறிவித்தது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான 30 நிமிட தேர்வை தமிழில் எழுதலாம் என்றும் போக்குவரத்து விதிகள் தொடர்பான உரைகளும் தமிழில் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது. அந்த சட்டம் அமலுக்கு வந்து, அதன்படி தமிழில் தேர்வு எழுதிய நண்பர் ஒருவர், அவருக்கு தமிழில் வழங்கப்பட்ட தேர்வு முடிவு அறிக்கையை தன்னுடைய முகநூலில் வெளியிட்டுள்ளார்.


செய்தியாளர்களுக்கு ஆபத்தான பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது!
[Wednesday 2015-12-30 08:00]

உலகில் ஊடகவியலார்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தில் ஊடகவியலாளரகள் கொலை செய்யப்பட்டதை அடுத்து உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தாக்குதலில் செய்தியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் இந்த ஆண்டில் மாத்திரம், தமது பணியை செய்ததற்காக பிரான்ஸில் மொத்தம் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி!
[Tuesday 2015-12-29 17:00]

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தான் நகரில் தேசிய தரவுத்தள அலுவலகம் உள்ளது. இங்கு அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டை வேண்டி இன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றான். அவனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், தனது மோட்டார் சைக்கிளை நுழைவு வாயிலில் மோதியதுடன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் அவன் வெடிக்கச் செய்துள்ளான். அப்போது அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள் நொறுங்கின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதி முழுவதும் உடல்கள் சிதறிக்கிடந்தன.


ஊழல் வழக்கில் இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை!
[Tuesday 2015-12-29 17:00]

இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது. 2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்தபோது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கிவிற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் காலத்தை பெப்ரவரி 15இல் ஆரம்பிப்பார்.


பெட்ரோலிய விலை குறைவால் சவூதியின் பட்ஜெட்டில் பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு!
[Tuesday 2015-12-29 15:00]

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோலின் விலை 50 சதவீதம் வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தபோதும் சர்வதேச விலைகளைவிட அது குறைவாகவே இருக்கும். டீசல், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விலைகளும் உயரும்.


விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு!
[Tuesday 2015-12-29 15:00]

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட பகுதிகளை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மனைவி லூசியுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர், பாரிய தீ விபத்தில் உயிரிழப்புகளை தவிர்க்க போராடிய தீயணைப்பு படை வீரர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.


சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியில் விமானத்தாக்குதல்:
[Tuesday 2015-12-29 09:00]

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியில் வீழ்ந்து வெடித்த விமானக்குண்டு, அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தில் உலாவருகின்றது. நேரடியாக பதிவு செய்யப்பட்ட இந்த காணொளியில், குண்டு வீச்சையடுத்து மக்கள் பாதுகாப்பு தேடி அங்குமிங்கும் ஓடுவதையும், குண்டு வீச்சில் தீப்பிடித்த கட்டங்களின் தீயை அணைப்பதும் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் ஏழு முறை குண்டு வீழ்ந்ததாகவும், இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் டமஸ்கஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் அதிகமாக இருக்கும் ஏர்பின் மற்றும் டோமா பகுதிகளில் யுத்த விமானங்கள் குண்டு வீசித்தாக்கியதாக சிரியாவில் நிலைகொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் சிவில் யுத்தத்தினால், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் அவசரகால நிலை பிரகடனம்!
[Tuesday 2015-12-29 08:00]

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் கடும் வெள்ளம் காரணமாக அவசரகால நிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவில், இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களில் இடம்பெற்ற மோசமான வெள்ளப்பெருக்கு இதுவென ஆர்ஜென்டீனாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட ஆர்ஜென்டீனாவில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


எபோலா தொற்று அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்படவுள்ள கினியா!
[Tuesday 2015-12-29 08:00]

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியா எபோலா தொற்று அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளை எபோலா தொற்றானது பெரிதும் தாக்கியிருந்தது. இந்நிலையில் இந்நோய் தாக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் எபோலா தொற்று அற்ற நாடாக தற்போது கினியா பிரகடனப்படுத்தப்படவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிவித்தலை தொடர்ந்து இத்தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட கினிய மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். எபோலா தொற்று நோயினால் கினியாவில் மாத்திரம் சுமார் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன், ஏனைய ஆபிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் மேலும் 9 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.


சீன நிலச்சரிவு பேரழிவு:நிலச்சரிவு சம்பவத்துடன் தொடர்புபட்ட 12 பேர் கைது!
[Tuesday 2015-12-29 08:00]

சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள சென்சென் நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு சம்பவத்துடன் தொடர்புபட்ட 12 பேரை சீன பெய்ஜிங் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் கட்டுமான கழிவுகளை சேகரித்து வைக்கும் நிறுவனமொன்றின் நிர்வாகியும் உள்ளடங்குவதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சென்சென் நகரில் ஏற்பட்ட இந்த கட்டுமான பேரழிவுக்கு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டமையே காரணம் என அரசாங்கம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது.


மன
[Tuesday 2015-12-29 08:00]

பலஸ்


மலேசியாவில் 50,000 பேர் ஐஎஸ் இயக்க அனுதாபிகள்! - உளவுத்துறை மதிப்பீடு
[Monday 2015-12-28 22:00]

மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில்,


மலேசிய நடிகை நடிகை டிஃப்பனி லியோங் புற்றுநோயால் மரணம்!
[Monday 2015-12-28 22:00]

மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரின் மீடியாகார்ப் (Mediacorp) குழுமத்தின் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை டிஃப்பனி லியோங், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மரணமடைந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார். மீடியாகார்ப் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கு முன்பு, லியோங் மலேசியாவில் விளம்பர மாடலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


'மேலும்' ஒரு ரகசியத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது!
[Monday 2015-12-28 21:00]

சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ் (Wikileaks) ஆகும். 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த இணையத்தளம் ஆனது பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருவதையே தான் வேலையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படியான விக்கிலீக்ஸ் வலைதளம் இன்றுவரை நாசா மறைத்த ஏலியன் ஆதாரம் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா