Untitled Document
September 18, 2024 [GMT]
 
ராஜதுரை இயக்கத்தில் இணையும் ஜாம்பவான்கள்!
[Monday 2016-01-18 17:00]

ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கேத்ரீன் தெரசா, பிரபு, ராதாரவி, விவேக் உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் படம் முத்துராமலிங்கம். குளோபல் மீடியா ஒர்க்ஸ் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு U.K. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளுக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார். நடிகர் முத்துராமனுடன் காற்றினிலே ஒரு கீதம், நடிகர் கார்த்திக்குடன் சின்ன கண்ணம்மா, தற்போது கௌதம் கார்த்திக்குடன் முத்துராமலிங்கம் என மூன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம்.


பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றி கூறும் படத்தில் நடிக்கவுள்ள அஞ்சலி!
[Monday 2016-01-18 17:00]

சகலகலா வல்லவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரீ ஆனவர் அஞ்சலி. இவ்வருடத்தில் அஞ்சலி நடிப்பில் தொடர்ந்து மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பேரன்பு போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றி கூறும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தை இயக்குனர் சர்வேஷ் இயக்குகிறார், படத்திற்கு காண்பது பொய் என்றும் பெயரிட்டுள்ளனர்.படம் பற்றி இயக்குனர் கூறுகையில், எளிமையான, எதார்த்தமான நடிப்பை வெளிப்பத்தும் திறன் கொண்ட அஞ்சலி இப்படத்திற்கு ஏற்றவராவார். ஜனவரி 20ம் தேதி முதல் தொடங்கவுள்ள இப்படம் கண்டிப்பாக பெண்களுக்கான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்று கூறுகிறார்.த்ரிஷா, நயன்தாரா இருவரும் அண்மையில் பெண்கள் மையப்படுத்திய கதையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சில பெண்கள் என்னை திட்டி சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! - நடிகர் சுரேஷ்
[Monday 2016-01-18 17:00]

பாலாவின் தாரை தப்பட்டை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தில் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான சுரேஷ் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.படம் பற்றி சுரேஷ் கூறுகையில், படத்தை பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். இயக்குனர் பாலா அவர்களால் தான் எனக்கு இந்த புகழ். ஒரு நடிகராக புகழ் கிடைப்பது வித்தியாசமாக உள்ளது.சில பெண்கள் என்னை திட்டி சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அறிந்த பாலா சார், நான் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்தார் என்கிறார் சுரேஷ்.


மீண்டும் ஜீவாவுடன் இணையும் ஆர்யா!
[Monday 2016-01-18 08:00]

ஜீவா நடித்த


பரிபூரணமான நடிகரான மம்முட்டியுடன் பணிபுரிவது பெரிய ஆசீர்வாதம்: - இயக்குனர் ராம்
[Monday 2016-01-18 07:00]


3 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா: - அதிர்ந்து போன சுந்தர்.சி
[Sunday 2016-01-17 21:00]

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க வேண்டியவர்.பிறகு ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலகினார். பின் சுந்தர்.சி இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை அனுகினாராம்.ஆனால், அவர் ரூ 3 கோடி சம்பளம் கேட்க, சுந்தர்.சி மீண்டும் ஹன்சிகாவையே கமிட் செய்து விட்டாராம்.


சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளிக்கப்படும்: - நாசர்
[Sunday 2016-01-17 19:00]

கடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார் தரப்பு கூறியது.ஆனால், இன்று வரை எங்களிடம் எந்த கணக்கு வழக்குகளும் வந்து சேர வில்லை என நாசர் கூறியுள்ளார்.மேலும், இன்றுடன் அந்த அவகாசம் முடிவதால் விரைவில் சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளிக்கப்படும் என நாசர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளங்களில் பாலா மீது கடும் விமர்சனம்!
[Sunday 2016-01-17 19:00]

தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் தாரை தப்பட்டை.இப்படத்தை பார்த்த பலரும் பாலாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரே மாதிரியான படங்களை தான் தருகிறார்.அவரது குறிக்கோள் படத்திற்கு வரும் மக்கள் அழ வைக்க வேண்டுமே, தவிர வேறு ஏதும் அவரது படங்களில் இல்லை, குறிப்பாக தாரை தப்பட்டையில் மிகவும் வன்முறையான காட்சிகளை காட்டியுள்ளார்.இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற ரேஞ்சில் பாலா மீது சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றது.


தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன: - கங்கனா ரனாவத்.
[Sunday 2016-01-17 12:00]

தமிழில்


நடிகர் சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறிவிட்டது: - லட்சுமி ராமகிருஷ்ணன்
[Sunday 2016-01-17 09:00]

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம்


இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்!
[Sunday 2016-01-17 09:00]

இளையராஜாவில் 1000மவது இசையமைப்பில் சமீபத்தில் வந்த படம் தான் தாரை தப்பட்டை. இதன் பிறகு இவர் மீண்டும் நடிகர் தனுஷுடன் கைக்கோர்த்துள்ளார்.ஆனால், இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை, அவர் தயாரிப்பில் அம்மா கணக்கு என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்க சம்மதித்துள்ளாராம்.இதை தன் டுவிட்டர் பக்கத்தில் மிக மகிழ்ச்சியாக தனுஷ் தெரிவித்துள்ளார்.


இளைய தளபதி விஜயுடன் மோதும் பல்கேரியா வில்லன்!
[Sunday 2016-01-17 09:00]

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்நிலையில் விரைவில் டப்பிங் வேலைகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.இப்படத்தில் ஒரு அதிபயங்கர சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம், இதில் பல்கேரியா நாட்டை சேர்ந்த லோபோ என்ற நடிகருடன் விஜய் மோதுவாராம்.இந்த சண்டைக்காட்சி மிகவும் மிரட்டலாக வந்திருப்பதாகவும், ரசிகர்களை மிகவும் கவரும் என்றும் கூறப்படுகின்றது.


சினிமா வருகைற்கு ரஜினி சார் தான் காரணம்: - சிவகார்த்திகேயன்
[Sunday 2016-01-17 09:00]
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரஜினிமுருகன் படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திலிருந்து இவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், இன்று இந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினி சார் தான்.அவர் மீது கொண்ட அன்பால் தான் சினிமாவிற்கு வரவேண்டும் என எண்ணமே வந்தது

ரஜினி முருகன்: திரை விமர்சனம்! - ஊரில் வெட்டியாக சுற்றி வரும் சிவகார்த்திகேயன்
[Friday 2016-01-15 23:00]

வெற்றிப் பெற்ற


ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்!
[Friday 2016-01-15 19:00]

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமர்ஷியல் வலையில் சிக்காமல் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி அவர்களுக்காக படம் எடுப்பவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வரவிருக்கின்றது.இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வந்தது, இதில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இப்பாடல் இன்று வெளிவருவதாக இருந்து பின் தள்ளிவைக்கப்பட்டது. இதற்காக கௌதம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


எமி மீது கடும் கோபத்தில் தெறி படக்குழு!
[Friday 2016-01-15 19:00]
,p> தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த லண்டன் கேர்ள் எமி ஜாக்ஸன். இவர் நடிக்கும் படத்தில், எமி லண்டனலிருந்து இங்கு வந்து நடிப்பதற்கு, வந்து செல்லும் ப்ளைட் டிக்கெட் செலவு தயாரிப்பாளருடையது தானம்.இந்நிலையில் தெறி படத்தின் முக்கியமான காட்சி ஒன்று எடுக்க, எமி படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். இதுக்குறித்து கேட்டால், ப்ளைட் மிஸ் பண்ணிட்டேன் என்று கூலாக பதில் அளித்தாராம்.(வெளியில் விசா பிரச்சனை அதனால் தான் எமி வரவில்லை என கூறியது வேறுக்கதை).இவர் ஏற்கனவே ஐ படத்திலும் இதுப்போல் செய்தாராம்.தற்போது தெறி படக்குழு எமி மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.


ஜீவாவின் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்!
[Friday 2016-01-15 19:00]

இது என்ன மாயம், ரஜினிமுருகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் ரயில், சிவகார்த்திகேயனின் புதிய படம், பாம்புசட்டை என பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும், ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருந்தார். இதற்கான போட்டோஷுட் கூட சமீபத்தில் நடந்து முடிந்தது.ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவர் தொடர்ந்து கமிட் ஆகியிருப்பதால் இந்த படத்திற்கான கால்ஷிட் தேதிகளில் கொஞ்சம் தடுமாற்றம் வரும் என்பதால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக தற்போது ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல நாள் கழிச்சு இப்போதான் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கு: - டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை!
[Thursday 2016-01-14 20:00]

பல நாள் கழிச்சு இப்போதான் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கு - வேதாளம் படத்தில் அஜீத்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்தாரல்லவா? அந்த கேரக்டரில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் ஊதாக்கலரு ஸ்ரீதிவ்யாதானாம். சம்பளம் ஒரு பிரச்சனையே இல்ல என்று இவர்கள் கொக்கிப் போட, முடியவே முடியாதுன்னு இவர் உக்கிப் போட்டிருக்கிறார். ஏன்? ஒரு பிரபல கதாநாயகி தங்கச்சியா நடிச்சா, பின்னாடி வர்ற டைரக்டர்கள் எல்லாரும், வாம்மா தங்கச்சி என்றே வருவார்கள் என்பது ஒரு சிக்கல்.


இணைய வாசிகளுக்கு சவால் விட்ட ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர்!
[Thursday 2016-01-14 14:00]

இணையதளத்தில் பிரபலங்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் புகைப்படம் போடும் போது அவர்களுக்கு சிலர் இழிவான கருத்துக்களை கூறுகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். தற்போது இதே பிரச்சனையால் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சிக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் நான் அதைச் செய்வதில்லை.


13வது சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற நயன்தாரா, அரவிந்த் சாமி!
[Thursday 2016-01-14 07:00]

சென்னையில் 13வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் நயன்தாராவுக்கு மாயா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நாயகி மற்றும் அரவிந்த் சாமிக்கு தனிஒருவன் படத்திற்காக சிறந்த நடிகன் என இருவருக்கும் கே. பாலசந்தர் நினைவு விருது கிடைத்துள்ளது.அதோடு இவ்வருடத்தின் யூத் ஐகான் என்ற அமிதாப் பச்சன் விருதும் நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. சிறந்த படத்துக்கான விருதை கிருமி படம் தட்டிச்சென்றுள்ளது.


முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
[Thursday 2016-01-14 07:00]

அருண்குமார் இயக்கும் சேதுபதி என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் இப்படத்தில் நாயகியாக நடிக்க, போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். சேதுபதி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான டீஸர் பொங்கல் 15ம் தேதி அல்லது 16ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.விஜய் சேதுபதி முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் டீஸரை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ரஜினி பட பெயரை தலைப்பாக வைத்துள்ள உதயநிதி!
[Thursday 2016-01-14 07:00]

இப்போதெல்லாம் பட பெயர்களை வைப்பதில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரண்ட் உருவாகி வருகிறது. அதாவது ரஜினி, கமல் போன்றவர்கள் நடித்த பழைய படத்தின் பெயர்களை இளம் நடிகர்கள் தங்களது படங்களுக்கு சூட்டி வருவது.அந்த வகையில் ஜீவா நடிக்கும் போக்கிரி ராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை போன்ற பெயர்கள் ரஜினி பட தலைப்புகளே. தற்போது இவர்களை தொடர்ந்து உதயநிதி புதிதாக நடிக்கும் படத்திற்கு மனிதன் என்று ரஜினி பட பெயரை வைத்துள்ளார்.இப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக்.


ஜல்லிக்கட்டு விவகாரம்: - த்ரிஷா, எமி ஜாக்ஸன் மீது கடும் கோபத்தில் தமிழக மக்கள்!
[Wednesday 2016-01-13 22:00]

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இதேபோல் இந்த வருடத்தில் ஐ என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் எமி ஜாக்ஸன்.இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என பீட்டா அமைப்பில் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களை போலவே விராட் கோஹ்லி, வித்யா பாலன், பிபாஷா பாசு போன்ற பல பிரபலங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.இதனால், மிகவும் கோபமடைந்துள்ளனர் தமிழக மக்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை!
[Wednesday 2016-01-13 22:00]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், வருமான வரித்துறை ஆனையர்கள் சில ஆவனங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


இந்த வருடம் பல படங்களுக்கு இசையமைக்கவுள்ள யுவன்!
[Wednesday 2016-01-13 19:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கடந்த வருடம் முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு சிறந்த இசையை தர முடியவில்லை.இதனால், இந்த வருடம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். விரைவில் மதுரை, கோயமுத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.இந்த வருடம் யுவன் இசையில் தரமணி, பேரன்பு, ஒரு ஹாலிவுட் படம், தெலுங்கு படமான ஆக்சிஜன், வெங்கட் பிரபு படம், தர்மதுரை, விஷ்ணுவர்தன்-அஜித் இணையும் படம், பாரதிராஜா நடிக்கும் ஓம், யாக்கை என அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.இது மட்டுமின்றி பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும் புதிய படத்திற்கும் இசை யுவன் தானாம்.


விஜய் படத்தில் நடிக்க வில்லை: - வதந்திக்கு முற்று புள்ளி வைத்த நடிகை மியா ஜார்ஜ்
[Wednesday 2016-01-13 19:00]

இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. மேலும், இரண்டாம் நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால், இந்த செய்தி உண்மையில்லை, அது யாரோ என் பெயரில் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் மூலம் தெரிவித்த கருத்து என மியா விளக்கம் கொடுத்துள்ளார்.


வருகிற 20ம் தேதி திருமண பந்தத்தில் இணையும் அசின்!
[Wednesday 2016-01-13 19:00]

பிரபல நடிகையான அசின், ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்.தற்போது இவர்களது திருமணம் வருகிற 20ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. 2 நாள் விழாவாக நடக்கும் இவர்களது திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.இந்து, கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறதாம். திருமணத்தை தொடர்ந்து மும்பையில் வருகிற 23ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகின்றது.


தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு: - கவிஞர் வைரமுத்து
[Wednesday 2016-01-13 13:00]

கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் அறிமுக விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் சுப்பிரமணியம், விளையாட்டுத்துறை இணை மந்திரி டத்தோ சரவணன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து பேசினார்கள். விழாவின் நிறைவான கவிஞர் வைரமுத்து ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தாய்த் தமிழ்நாட்டையும், உங்களையும் கடல் பிரித்து வைத்தாலும் தமிழ் நமக்கிடையே ஒரு கலாசாரப் பாலம் கட்டி வைத்திருக்கிறது. இங்கே கூடத்திலும், மாடத்திலும் நிறைந்து வழிந்து அமர இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கிற பெருங்கூட்டத்தைப் பார்க்கிற போது தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை பெறுகிறேன். 40 சிறுகதைகளை ஒரே மூச்சில் தொடர்ச்சியாக எப்படி எழுத முடிந்தது என்று இந்த மேடையில் பலபேர் வியந்து கேட்டார்கள்.


விஜய் படத்தில் மிரட்டும் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர்!
[Wednesday 2016-01-13 13:00]

இளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார்.தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார்.இதில் மம்முட்டி தனி ஒருவன் அரவிந்த் சாமி ஸ்டைலில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


இளையராஜா இசையை கேட்டபடி ஓவியம் வரையும் நிகழ்வு!
[Wednesday 2016-01-13 07:00]

நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா