Untitled Document
July 8, 2024 [GMT]


இமய மலையின் 16,500 அடி உயரத்தில் ஏரியில் 800 எலும்புக்கூடுகள்: பல ஆண்டுகளாக நிலவும் மர்மம்!
[Tuesday 2024-07-02 18:00]

இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. காரணம், அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.


‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
[Monday 2024-07-08 06:00]

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.


போட்டித் தேர்வர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்!
[Monday 2024-07-08 06:00]

வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.


“முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்” - அமைச்சர் உதயநிதி!
[Monday 2024-07-08 06:00]

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
[Sunday 2024-07-07 17:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-07-07 17:00]

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்: பிரமிக்க வைக்கும் ஜியோ வேர்ல்ட் சென்டரின் வசதிகள்!
[Sunday 2024-07-07 17:00]

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஊடகங்களில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்த பிரமாண்ட திருமணம் ஜூலை 12ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் வைத்து நடைபெற இருக்கிறது. மும்பையின் பிரபலமான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர், இந்தியாவின் பிரமாண்ட நிகழ்வுகளுக்கான முன்னணி இடமாக திகழ்கிறது.


கணவன்-மனைவி மீது மோதிய கார்: மும்பையில் அதிகாலை நடந்த பயங்கரம்!
[Sunday 2024-07-07 17:00]

மும்பையில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையின் வொர்லி பகுதியில் இன்று அதிகாலை வேளையில் நடந்த வாகன விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நக்வா மற்றும் பிரதிக் நக்வா தம்பதியினர் சிக்கி கொண்டனர்.


ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
[Sunday 2024-07-07 08:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
[Sunday 2024-07-07 08:00]

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!
[Sunday 2024-07-07 08:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


"இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும்" - லாலு பிரசாத் யாதவ் உறுதி!
[Saturday 2024-07-06 16:00]

வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சி கவிழும் என்றும், தேர்தலுக்கு தயாராக இருங்கள் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.


வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!
[Saturday 2024-07-06 16:00]

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார். இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.


பச்சிளம் குழந்தையை அடித்து கொன்று பாறையில் வீசிய தந்தை!
[Saturday 2024-07-06 16:00]

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த விரக்தியில் பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். இவர் தனது முதல் மனைவி முனியம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி அளிக்கிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
[Saturday 2024-07-06 16:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தமிழக்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை - இ.பி.எஸ். கண்டனம்!
[Saturday 2024-07-06 08:00]

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை!
[Saturday 2024-07-06 08:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்து தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத சிலரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே கட்சித் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை பைக்கில் வந்த 6 பேர் தாக்கி வெட்டினர்.


ஸ்டீல், அலுமினிய பாத்திரங்களுக்கு ISI முத்திரை கட்டாயம்!
[Saturday 2024-07-06 08:00]

துருப்பிடிக்காத எஃகு (Stainless Stee) மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு ஐஎஸ்ஐ (ISI) முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேசிய தர தரநிலைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.


இஸ்டாகிராமில் பெண் போலப் பேசி மோசடி: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
[Friday 2024-07-05 18:00]

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவர், பெருமா நல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன், இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.


மோடியை கடுமையாக விமர்சித்த சிவசேனா மூத்த தலைவர்!
[Friday 2024-07-05 18:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்திற்கு செல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்திருக்கிறார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இந்திய மாநிலத்தில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய கிணறு!
[Friday 2024-07-05 18:00]

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்ற நபர், கிணற்றுக்குள் விழுந்த மரக்கட்டையை எடுக்க இறங்கியுள்ளார்.


தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
[Friday 2024-07-05 18:00]

இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 40 கிலோ மீற்றர் வேகத்தில் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.


அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!
[Friday 2024-07-05 06:00]

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹத்ராஸ் விரையும் ராகுல் காந்தி எம்.பி.!
[Friday 2024-07-05 06:00]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர்.


எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
[Friday 2024-07-05 06:00]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.


விஜய் கட்சிக்கு விரைவில் மூடு விழா: விளாசும் அர்ஜுன் சம்பத்!
[Thursday 2024-07-04 18:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விருது விழாவில் பேசிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" என்றார்.


தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணம்!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக மாவட்டமான விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழக மாவட்டமான விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


விஜய் விழாவில் மணமணக்கும் சைவ விருந்து!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில் சமைப்பதற்காக புதுச்சேரி கேட்டரிங் சர்வீஸை விஜய் புக் செய்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


121 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம்: போலே பாபா சாமியார் சர்ச்சை பேச்சு!
[Thursday 2024-07-04 18:00]

உத்தரப் பிரதேச மாநிலம் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம் என்று போலே பாபா சாமியார் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா