Untitled Document
September 3, 2024 [GMT]


40 ஆண்டுகளில் முதல் முறையாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் இந்திய பிரதமர்!
[Monday 2024-07-08 18:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பதிவிட்டுள்ளார். விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


“சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி!
[Tuesday 2024-09-03 18:00]

திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் தலைவருமான வெள்ளிமலை தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டியம்பலம், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட விவசாய அமைப்பாளர் இல்.கண்ணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.


பெண் காவலர் மீது தாக்குதல்: போலீசார் தீவிர விசாரணை!
[Tuesday 2024-09-03 18:00]

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிக்குமார். இவர் நேற்று (02.09.2024), சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், கேசவநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சுழி போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காளிக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகளை கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
[Tuesday 2024-09-03 18:00]

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், காமன்தொட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலக் கல்திட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலைப் பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.


தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: உயிரை காப்பாற்றிய செயற்கை தொழில்நுட்பம்!
[Tuesday 2024-09-03 18:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.


பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய தமிழக வீராங்கனைகள்!
[Tuesday 2024-09-03 06:00]

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 21க்கு17, 21க்கு10 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21க்கு 12, 21க்கு8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.


எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!
[Tuesday 2024-09-03 06:00]

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ‘போலியான ஆவணங்களைக் கொண்டு தன்னை மிரட்டி நிலத்தைப் பதிவு செய்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


“ஃபார்முலா 4 கார் பந்தயம் வரலாற்றில் முக்கிய மைல் கல்” - தமிழக அரசு பெருமிதம்!
[Tuesday 2024-09-03 06:00]

சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


“தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கடுகளவும் குறைந்த பாடில்லை” - இ.பி.எஸ் கண்டனம்!
[Monday 2024-09-02 19:00]

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.


நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி!
[Monday 2024-09-02 19:00]

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.


இரவில் படிப்பு, பகலில் சமோசா விற்பனை: நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்!
[Monday 2024-09-02 19:00]

தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார். இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார்.


ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு!
[Monday 2024-09-02 19:00]

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 27 பேர் பலியாகியுள்ளனர், இதனால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கி சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தொடர்ந்து பலத்தை மழை பெய்து வருவதால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரு மாநிலங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு!
[Monday 2024-09-02 06:00]

இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது.


செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நோயாளி: அதிரும் மேற்கு வங்கம்!
[Monday 2024-09-02 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


“நமது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது” - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
[Monday 2024-09-02 06:00]

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது, “2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வல்லரவு பெற்று விளங்கும். பாடத்திட்டத்தை தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டும்.


“விளையாட்டுத் துறை அமைச்சராக இருங்கள், விளையாட்டு அமைச்சராக இருக்காதீர்கள்” - சீமான்!
[Sunday 2024-09-01 18:00]

சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு போட்டிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போட்டி நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


'நிலுவையில் கிடக்கும் மனு': த.வெ.க-விற்கு கிடைக்குமா அனுமதி?
[Sunday 2024-09-01 18:00]

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.


தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள்: அடுத்து நேர்ந்த பயங்கரம்!
[Sunday 2024-09-01 18:00]

இந்திய மாநிலம் சத்தீஷ்கரில் சிறுவர்கள் இருவர், தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டத்தில் உள்ள ரிசலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்கள் வீர் சிங், புரன் ஷகு. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.


மகன் பாடசாலை செல்லாததால் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Sunday 2024-09-01 18:00]

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் பெண்ணொருவர், தனது மகன் பாடசாலை செல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (35). இவர்களின் மகன் அதே ஊரில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


சிதம்பரத்தில் காங்கிரஸ் பேரணி: மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பங்கேற்பு!
[Sunday 2024-09-01 06:00]

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி இன்று (31-08-24) நடைபெற்றது. சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த பேரணியை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் சையது அசினா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்கி எஸ்.பி.கோயில்தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது.


‘தொழுகைக்கான இடைவெளி ரத்து’ - அசாம் முதல்வர் விளக்கம்!
[Sunday 2024-09-01 06:00]

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்துள்ளார்.


பாரா ஒலிம்பிக்: தொடர் பதக்கங்களை வெல்லும் இந்திய அணி!
[Sunday 2024-09-01 06:00]

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனை களமிறங்கினர். இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது.


அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கொடுத்த பரிசுப்பொருட்கள் என்னென்ன?
[Saturday 2024-08-31 16:00]

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசாக அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ் நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தடம் திட்டம்.


தாயை கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகன்!
[Saturday 2024-08-31 16:00]

இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் நிலேஷ் (21). இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்துவிட்டார். இதனால் நிலேஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.


கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்: 500 பொலிஸார் குவிப்பு!
[Saturday 2024-08-31 16:00]

தனியார் கல்லூரியை சுற்றிள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் சோதனையில் இறங்கியுள்ளனர். தமிழக மாவட்டமான செங்கல்பட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றி இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.


கோலாகலமாக நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம்!
[Saturday 2024-08-31 16:00]

சென்னையில் இன்று பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு கமல் ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மற்றும் நாளையும் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது.


அடுத்த 3 மணி நேரம்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-08-31 07:00]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு: பொள்ளாச்சியில் சோகம்!
[Saturday 2024-08-31 07:00]

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். கூலி வேலை செய்து வைத்த அருண்குமார் மனைவி சுகன்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.


ரூ. 822 கோடியில் பிராட்வே பேருந்து நிலையம்: தமிழக அரசு நிர்வாக அனுமதி!
[Saturday 2024-08-31 07:00]

சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைத்த வசதிகளைக் கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் தமிழக அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா