Untitled Document
June 30, 2024 [GMT]


இனக்குரோதத்தை தூண்டும் அரச அதிபர், கல்முனை தெற்கு பிரதேச செயலர்!
[Tuesday 2024-06-25 04:00]

மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்த்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக இந்த அலுவலகங்களின் விவகாரத்தில் தலையிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.


தேர்தலுக்கு தயாராகுமாறு அரச செயலகங்களுக்கு அறிவிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது.


மொட்டுவின் முடிவுக்காக காத்திருக்கும் தம்மிக்க பெரேரா!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவுக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.


போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை புலனாய்வு அதிகாரிகள் கைது!
[Sunday 2024-06-30 17:00]

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


இன்று இரவு எரிபொருள் விலை திருத்தம்!
[Sunday 2024-06-30 17:00]

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வான் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Sunday 2024-06-30 17:00]

மோட்டார் சைக்கிள் - வான் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.


வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து பின்னரே முடிவு!
[Sunday 2024-06-30 17:00]

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் பங்கேற்போம் என்று அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கும் என்றும் அறிவித்துள்ளது.


மிளகாய் ஐஸ்கிரீம் - கொஞ்சம் காரம், கொஞ்சம் இனிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


கடலில் மர்ம திரவம் அருந்திய ஐந்தாவது மீனவரும் மரணம்!
[Sunday 2024-06-30 17:00]

சர்வதேச கடலில் ஆபத்தான நிலையில் இருந்த 6 மீனவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மீனவரை காப்பாற்ற கடற்படை வைத்தியர் உட்பட கடற்படை குழு முயற்சித்து வருவதாக கடற்படை பேச்சாளர் ​கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.


இரணைமடுக் குளத்தில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு!
[Sunday 2024-06-30 17:00]

கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!
[Sunday 2024-06-30 16:00]

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஒருவரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தமிழ் தேசிய பேரவையை உருவாக்க முடிவு!
[Sunday 2024-06-30 05:00]

தமிழ் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்ற பொது கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியில் வியாழேந்திரன்! விமல் கட்சியும் உடைந்தது.
[Sunday 2024-06-30 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத்தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.


பட்டப்பகலில் வாள்களுடன் நடமாட முடியுமென்றால் பொலிசார் என்ன செய்கின்றனர்?
[Sunday 2024-06-30 05:00]

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாட முடியும் என்றால் யாழ்ப்பாணத்தில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.


திருகோணமலையில் காணாமல்போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மீட்பு!
[Sunday 2024-06-30 05:00]

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
[Sunday 2024-06-30 05:00]

ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இந்தியர்களை அடுத்து சீனர்கள் - தெற்கில் தொடர்கிறது வேட்டை!
[Sunday 2024-06-30 05:00]

ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர்!
[Saturday 2024-06-29 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


மாங்குளம் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
[Saturday 2024-06-29 17:00]

முல்லைத்தீவு மாங்குளத்துக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


மடு விபத்தில் இளைஞன் பலி!
[Saturday 2024-06-29 17:00]

மன்னா் - மடு இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


ரஷ்ய பிரஜைகளாக மாறிய இலங்கை கூலிப்படையினர்!
[Saturday 2024-06-29 17:00]

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


கோண்டாவிலில் ஆயுதங்களுடன் மூவர் கைது!
[Saturday 2024-06-29 17:00]

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன்போது வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


10 இலட்சத்தைத் தாண்டியது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!
[Saturday 2024-06-29 17:00]

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று பிற்பகல் இந்த எண்ணிக்கை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது!
[Saturday 2024-06-29 17:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.


இரணைமடுக் குளத்தில் நீராடிய சிறுவனை காணவில்லை!
[Saturday 2024-06-29 17:00]

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


கடலில் மிதந்த விச போத்தல்- மது என நினைத்துக் குடித்தவர்கள் மரணம்!
[Saturday 2024-06-29 17:00]

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 3 மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர்.


இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி திருகோணமைலையில் மாயம்!
[Saturday 2024-06-29 17:00]

நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார்.


சிறிதரனுக்கு அச்சுறுத்தல்! Top News
[Saturday 2024-06-29 06:00]

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது.


இந்தியப் பிரஜைக்கு பறவைக்காய்ச்சல் இல்லை!
[Saturday 2024-06-29 06:00]

இலங்கைக்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா