|
|
இம்முறை தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில்!
- மைத்திரி, ரணில் பங்கேற்கின்றனர்
[Thursday 2015-12-31 07:00]
|
இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம அதிதியாக கலந்து கொள்வர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
|
|
|
இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை மறுப்பு!
[Thursday 2015-12-31 07:00]
|
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.குறித்த அதிகாரிகளுக்கு பிணை வழங்குமாறு நேற்று கோரப்பட்டது. எனினும், இந்த பிணை மனுவினை நீதவான் நிராகரித்துள்ளார்.
|
|
|
அந்தரங்கப் படங்களை வைத்து பெண்ணை மிரட்டியவர் பருத்தித்துறையில் கைது!
[Thursday 2015-12-31 07:00]
|
பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
|
|
|
வட மாகாணசபை கலைக்கப்படவுள்ளதான செய்தி சிறப்புரிமை மீறல்!
- அவைத் தலைவர் சிவஞானம்
[Wednesday 2015-12-30 20:00]
|
வடமாகாண சபை கலைப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியாகும். இது சபையின் சிறப்புரிமையை மீறும் விடயம். இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்தார்.
|
|
|
கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு எரிச்சலூட்டினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது!
- முதலமைச்சர்
[Wednesday 2015-12-30 20:00]
|
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தினேன். அதற்குப் பின்னர் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்பந்தன் என்னிடம் கூறினார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
நிலையான சமாதானம், புரிந்துணர்வை நிலைநாட்ட அனைவரும்
முன்வரவேண்டும்!
- சம்பந்தனின் புத்தாண்டு செய்தி
[Wednesday 2015-12-30 20:00]
|
நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். அவர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கல்வி நியதிச்சட்டம் வடக்கு மாகாண சபையில் ஒருமனதாக நிறைவேறியது!
[Wednesday 2015-12-30 20:00]
|
வடமாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் மாகாணசபையின் விசேட அமர்வில் எதிர்ப்புக்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, குறித்த நியதிச்சட்டம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆங்கில மொழியில் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
|
|
|
மகிந்தவின் புதிய கட்சியில் இணைவாராம் நாமல்!
[Wednesday 2015-12-30 19:00]
|
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் தானும் அதில் இணைந்து கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வந்திருந்த நாமலிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
|
|
|
அரசியலமைப்பு திருத்த யோசனைகளை கூட்டாக முன்வைக்க முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்பு இணக்கம்!
[Wednesday 2015-12-30 19:00]
|
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அச்சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
|
|
|
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Wednesday 2015-12-30 19:00]
|
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
|
|
|
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட இடங்களில் அகற்றப்படாத மிதிவெடிகள்!
[Wednesday 2015-12-30 19:00]
|
இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அகற்றப்படாமல் உள்ளது. அப்பகுதிகளில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டன.
|
|
|
வீடுகளின் ஓடுகள், கூரைகளை அகற்றி விட்டு வெறும் நிலத்தை ஒப்படைத்த படையினர்!
[Wednesday 2015-12-30 19:00]
|
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாகவிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் ஓடுகள், நிலைகள் என்பன அகற்றப்பட்டு அவை உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அமைந்துள்ள வீடுகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அதனை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
|
|
|
தலைவர் என்ற பதம் ஆண் பாலா, பெண் பாலா?
- வடக்கு மாகாணசபையில் விவாதம்
[Wednesday 2015-12-30 19:00]
|
அனந்தி சசிதரனும் வடமாகாண சபை அவைத்தலைவர் ஆகலாம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, கல்வி நியதிச் சட்டத்தின் திருத்தம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
தாதியின் கையைப் பிடித்து இழுத்து சேட்டை விட்ட இளைஞர் கைது!
[Wednesday 2015-12-30 19:00]
|
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயது இளைஞன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், வீதியில் நின்று கொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமைபணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த இளைஞன் அவரின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
|
|
|
104 வயதில் காலமானார் சதாசிவம் ஐயா!
[Wednesday 2015-12-30 19:00]
|
வவுனியா சதாசிவம் ஐயா வாழ்வியல் சாதனையாளராக 104 வயது வரை வாழ்ந்து இறைபதம் அடைந்தார். வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் நேற்று குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 104.
|
|
|
வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - பொங்கலுக்கு முன் மீள்குடியமர்வாம்!
[Wednesday 2015-12-30 08:00]
|
வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
|
|
|
பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு புலனாய்வு அதிகாரியும் சிக்கினார்!
[Wednesday 2015-12-30 08:00]
|
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தலில் தொடர்புடைய மற்றுமொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபேரத்ன எனப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளர் பிரகீத் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் சார்ஜண்ட் தர அதிகாரியாக இருந்துள்ளார்.
|
|
|
வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் அமைதியைக் குழப்ப முயற்சி!
- ராஜித சேனாரத்ன
[Wednesday 2015-12-30 08:00]
|
வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
|
|
|
ஈழ ஆதரவாளர்களை திருப்திப்படுத்த இராணுவத்தினரைப் பழிவாங்குகிறதாம் அரசாங்கம்!
- கம்மன்பில குற்றச்சாட்டு
[Wednesday 2015-12-30 08:00]
|
ஈழ ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்கிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
|
|
|
மக்களை அணிதிரட்டி நீதிக்கும் விடுதலைக்குமான ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம் !
[Wednesday 2015-12-30 08:00]
|
இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார்.
|
|
|
சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் மஹிந்த!
- எஸ்.பி. தகவல்
[Wednesday 2015-12-30 08:00]
|
ஜெனீவாவில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்தத் தீர்மானித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார். சாத்திரங்களை நம்பியே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை முற்கூட்டியே நடத்தியதாகக் கூறப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்தாலும், அதிகாரத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக ஜெனீவாவில் ஏற்பட்டிருந்த சவாலை சமாளிக்க முடியும் என அவர் நம்பியதாலேயே முற்கூட்டியே தேர்தல் நடத்தினார்.
|
|
|
சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்!
[Wednesday 2015-12-30 08:00]
|
1972 அரசியலமைப்பு போன்று புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
|
|
|
தெற்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்களவர்கள் போராட வேண்டும்!
- ஞானசார தேரர்
[Wednesday 2015-12-30 08:00]
|
வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ் மக்கள் போராடுவதைப்போல தெற்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்கள மக்களும் போராட வேண்டும். வடக்கிற்கு ஒரு நியதியும் தெற்கிற்கு ஒரு நியதியும் இருக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
-->
|
|
|
கையாடிய பணத்தை திரும்ப ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சர்!
[Wednesday 2015-12-30 08:00]
|
மஹிந்த ராஜபக்ச அரசின் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி பாரிய மோசடிகளைச் செய்திருந்தார். தனது மனைவியின் பெயரில் உள்ள காணியொன்றுக்கு சுமார் நான்காயிரம் தென்னங்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொண்டிருந்த அவர், அதற்கான நடுகைச் செலவையும் அமைச்சின் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் காரணமாக தெங்கு அபிவிருத்திச் சபைக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது.
|
|
|
ஹிருணிகாவை கைது செய்ய முடியுமா?
- சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியது சிஐடி
[Wednesday 2015-12-30 08:00]
|
தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி அங்கிருந்த ஊழியர் ஒருவரை டிபென்டர் வண்டியில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்ய முடியுமா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது.
|
|
|
தாஜுதீனின் படுகொலை: முக்கியஸ்தர்களில் சிலர் விரைவில் சிக்குவர்!
- ராஜித சேனாரத்ன
[Wednesday 2015-12-30 08:00]
|
பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிகவிரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனம் யாருடையது, பிரதான சந்தேகநபரான சாரதி, யாருடைய சாரதியாகக் கடமையாற்றிவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.
|
|
|
ஊடகங்களில் வெளியான அறிக்கையை மறுக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!
[Tuesday 2015-12-29 19:00]
|
'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்-
|
|
|
யாழ்ப்பாணத்தில் மழையினால் பல இடங்களில் வெள்ளம்!
- 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி
[Tuesday 2015-12-29 19:00]
|
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தென்மராட்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும், இதன்காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|