Untitled Document
July 5, 2024 [GMT]


ஊழல் வழக்கில் இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை!
[Tuesday 2015-12-29 17:00]

இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது. 2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்தபோது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கிவிற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் காலத்தை பெப்ரவரி 15இல் ஆரம்பிப்பார்.


பிரிட்டன் தேர்தலில் சாதனைபடைத்த ஈழத் தமிழ் பெண்!
[Friday 2024-07-05 18:00]

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார். அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் (Uma Kumaran) தனதாக்கிகொண்டுள்ளார்.


அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்!
[Friday 2024-07-05 18:00]

மகத்தான வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார். 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் போதும் என்னும் நிலையில், 412 இருக்கைகளுடனும், 9.6 மில்லியன் வாக்குகளுடனும், தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது லேபர் கட்சி.


பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்...? - ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்!
[Friday 2024-07-05 18:00]

பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், அக்கட்சி வெற்றி பெறுமானால், அந்த வெற்றி பிரான்சுடனான உறவை பாதிக்கலாம் என்ற அச்சம் ஜேர்மனிக்கு அச்சம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல்!
[Friday 2024-07-05 18:00]

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!
[Friday 2024-07-05 06:00]

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent Residency) கிடைப்பது உத்தரவாதம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கனடாவில் வேலை செய்வதற்கும், பட்டப்படிப்புக்குப் பிறகு நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கும் பல வழிகள் இருந்தாலும், கனடாவின் சட்டதிட்டங்களும் அதில் கொண்டுவரப்படும் மாற்றங்களும் அதனை எளிதாக பேர் அனுமதிப்பதில்லை.


பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட செல்லப்பிராணிகள்!
[Friday 2024-07-05 06:00]

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது. ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர். ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாக்காளர்கள் இந்த நாய்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே கட்டி வைத்தனர்.


காற்று மற்றும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மாவு!
[Friday 2024-07-05 06:00]

உலகில் அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறைக்கு, ஃபின்லாந்தைச் சேர்ந்த சோலார் ஃபுட்ஸ் (Solar Foods) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய தீர்வைக் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் சோலீன் (Solein) என்ற புரதப் பொடியை (Protein Powder) தயாரித்துள்ளது. இந்த பொடியை மனிதர்கள் உட்கொள்ளலாம் என்று நிறுவனம் கூறுகிறது.


பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள 8 தமிழர்கள்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.


பதவி விலகுவோம்: ட்ரூடோ தலைவராக நீடிப்பதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு!
[Thursday 2024-07-04 18:00]

கனடாவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ட்ரூடோ கட்சி முக்கியமான இருக்கை ஒன்றை இழந்தது. ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.


பிரித்தானிய தேர்தலில் புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்க முடியும்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகிற நிலையில் புலம்பெயர்ந்த வாக்காளர்களும் அங்கு வாக்களிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும். அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.


பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.


கனேடிய வரலாற்றில் முதன்முறையாக ராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமனம்!
[Thursday 2024-07-04 06:00]

கனடா முதன்முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ அதிகாரியாக நியமித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Jennie Carignan), ஆயுதப்படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ளார்.


பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்பு!
[Thursday 2024-07-04 06:00]

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் Ipswich-சில் குடும்பத்துடன் வசித்து வந்த மலையாளியான வைத்தியர் ராமசாமி ஜெயராம் (56) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 30-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு ராமசாமி வீட்டில் இருந்து வெளியே சென்று பின்னர் காணாமல் போனார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் லொட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்!
[Thursday 2024-07-04 06:00]

அபுதாபி Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 22 கோடி ரூபாய்க்கு மேல் (10 மில்லியன் திர்ஹாம்) வென்றுள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் (Raisur Rahman Anisur Rahman), ஜூன் 15 அன்று, Big Ticket-ன் 264-வது டிராவில் கலந்துகொண்டு, 078319 என்ற டிக்கெட்டை வாங்கியுள்ளார்.


அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் வருவதற்கு வாய்ப்பு!
[Wednesday 2024-07-03 18:00]

தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் , அமெரிக்க அதிபராக மாற்றுவதற்கன வாய்ப்புக்கள் உள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.


மியான்மரில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது!
[Wednesday 2024-07-03 18:00]

மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளரின் மூன்று செல்போன் கடைகளையும் அரசாங்கம் மூடக்கியுள்ளது.


எலான் மஸ்க் தவறை சுட்டிக்காட்டிய சீன சிறுமி!
[Wednesday 2024-07-03 18:00]

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.


காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் பலி!
[Wednesday 2024-07-03 18:00]

மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தியதில் 12 பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர். மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தின.


பிரித்தானிய மருத்துவமனை குண்டு தாக்குதல் சதி: நடுங்க வைக்கும் செவிலியரின் திட்டம்!
[Wednesday 2024-07-03 06:00]

பிரித்தானியாவில் மருத்துவமனை மீது பயிற்சி செவிலியர் ஒருவர் சுய-அழிப்பு குண்டு தாக்குதல் நடத்த சதி செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பயிற்சி செவிலியர் ஒருவர் அவர் பணியாற்றிய அதே மருத்துவமனை மீது சுய-அழிப்பு குண்டு தாக்குதல் நடத்த சதி செய்த குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்.


ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்?
[Wednesday 2024-07-03 06:00]

கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பியாங்யாங் தனது சொந்த நிலத்தடி போர்க் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. கிம் இல்-சுங் தனது இராணுவத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் அந்த சுரங்கங்கள் 1970யில் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரித்தானிய செவிலியர் லூசி லெட்பி மீதான வழக்கு: குற்றத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பு!
[Wednesday 2024-07-03 06:00]

பிரித்தானிய மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை முயன்ற செவிலியர் லூசி லெட்பி குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானிய மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் லூசி லெட்பி மீதான மறு விசாரணையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


"உன் தாயை பலாத்காரம் செய்வேன்" - போராட்டக்காரரிடம் கீழ்த்தரமாக பேசிய பொலிஸ் அதிகாரி!
[Tuesday 2024-07-02 18:00]

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் குவிந்த சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் நாட்டில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் பொலிஸார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது.


கனடாவின் மாண்டரின் உணவகங்களில் குவிந்த மக்கள் கூட்டம்!
[Tuesday 2024-07-02 18:00]

ஜூலை 1 கனடா தினத்தை முன்னிட்டு மாண்டரின் உணவகங்கள்(mandarin) நேற்றையதினம் இலவச பஃபேக்களை (free buffet) வழங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இலவச பஃபே மதியம் முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது மாண்டரின் 100 க்கும் மேற்பட்ட கிளாசிக் உணவுகளைக் கொண்டுள்ளது.


உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதிப்புரட்சி!
[Tuesday 2024-07-02 18:00]

உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முறியடித்துள்ளதாக அந்த உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 30ம் திகதி உக்ரைன் தலைநகரில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி உக்ரைன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும் இரணுவத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் சதிபுரட்சி முயற்சி குழுவினர் திட்டமிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.


லண்டனில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவு: காணொளி வெளியானதால் இராஜினாமா!
[Tuesday 2024-07-02 18:00]

லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறைசாலையில் பெண் அதிகாரி ஒருவர் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா தலத்தில் 2 மகள்களை கைவிட்டுவிட்டு ஓடிய கனேடிய தாய்!
[Tuesday 2024-07-02 06:00]

சுற்றுலாத் தலமான கன்குனில் (Cancun) இரு கனடா சிறுமிகளை கைவிட்டுச் சென்றதாக கனடா பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கனேடிய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கான செலவுக்கு பணம் இல்லை என்று கூறி சுற்றுலாத் தளமான கன்குனில் (Cancun) கைவிட்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 3 வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் சுற்றுலாத் தலமான ஒரு தெரு மூலையில் தனியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.


கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா!
[Tuesday 2024-07-02 06:00]

வட கொரியாவின் திடீர் ஏவுகணை தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் நோக்கில் வட கொரியா திங்கட்கிழமை இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. முதல் ஏவுகணை, ஒரு குறுகிய தூர ஏவுகணை, அதிகாலை வேளையில் ஏவப்பட்டது.


ஸ்பெயினில் கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்!
[Tuesday 2024-07-02 06:00]

உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. 2019-இல் கல்லறை தோண்டியபோது, ​​நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா