Untitled Document
September 19, 2024 [GMT]
அமெரிக்காவில் உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறிய ஸிகா நோய்!
[Wednesday 2016-02-03 13:00]

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும்


பாகிஸ்தானில் இந்துக்கோவில் மீது தாக்குதல்: - சிறுபான்மை மக்களிடையே பதற்றம்
[Wednesday 2016-02-03 08:00]

பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.அவர்களை நோக்கி அந்த நபர்கள்,


கென்யத் தலைநகர் நைரோபியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது தாக்குதல்!
[Wednesday 2016-02-03 07:00]

கென்யத் தலைநகர் நைரோபியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளைத் துவங்கியுள்ளனர். ஊபர் நிறுவனத்தால் அறவிடப்படும் கட்டணத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மற்றைய நிறுவனங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் இவ்வாறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.மற்றைய நிறுவனங்களைவிட ஊபர் நிறுவனத்தில் அரைவாசிக் கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது.இதனால் இணைய சேவையை நடத்திவரும் ஊபர் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டுவரும் நிலையில் அவர்களது வாகனங்களும் சேதமாக்கப்படுகின்றன.


சிரியாவின் வடக்கு அலப்போ நகரில் நடந்துவரும் சண்டையில் அரச சார்பு படையினர் முன்னேற்றம்!
[Wednesday 2016-02-03 07:00]

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சிரியா தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைசிரியாவின் வடக்கு அலப்போ நகரில் நடந்துவரும் சண்டையில் அரச சார்புப் படையினர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்யாவின் வான் தாக்குதல் உதவியுடன், இந்த தாக்குதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், இதனால் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோக கட்டமைப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.சிரியா தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இரண்டாவது நாளாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.சிரியாவின் அரச தரப்பினரையும், எதிர்தரப்பு குழுவினரையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியான ஸ்டபான் டி மிஸ்டுரா சந்திக்கவிருக்கிறார்.


இலட்சக்கணக்கான சிரிய அகதிகளின் வருகையால்,ஜோர்தான் மக்கள் கொதித்துப் போயுள்ளனர்: - ஜோர்தான் மன்னர்
[Wednesday 2016-02-03 07:00]

இலட்சக்கணக்கான சிரிய அகதிகளின் வருகையால், ஜோர்தான் மக்கள் கொதித்துப் போயுள்ளதாக, ஜோர்தான் மன்னர் அப்துல்லா தெரிவித்தார்.சிரியாவிற்கு உதவி வழங்குவது தொடர்பில், வியாழக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க, ஜோர்தான் மன்னர் இலண்டன் வந்துள்ளார். சமுகநல சேவைகள், உட்கட்டுமானம், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வழங்குவதில், ஜோர்தான் அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளதாக, பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.மேலும், இதன் காரணமாக, தமது நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார். ஜோர்தான், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என சர்வதேச சமுகம் எண்ணினால், அவர்கள் ஜோர்தானுக்கு மேலும் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது: - பிரஸில்
[Wednesday 2016-02-03 07:00]

ஸீகா வைரஸ் பரவலை உலகமட்ட சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், ரியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்று பிரஸில் கூறியுள்ளது. கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஏற்பட்ட பிறவிக்குறைபாட்டுக்கு காரணமாகியுள்ளது.முன்னர் நம்பப்பட்டதைதை விட இது மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.


ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கும் ஜப்பான் நிறுவனம்!
[Tuesday 2016-02-02 19:00]

விதைப்பதை தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் இந்த பண்ணை செயல்பாட்டுக்கு வருகிறது. தொடர்ந்து ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடுமையான தொழிலாளர் தட்டுப்பாட்டால் தவித்து வருவதை அடுத்து ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த ஜப்பான் களமிறங்கியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் 2035-ம் ஆண்டுக்குள் ஜப்பானில் செய்யப்படும் வேலைகளில் பாதி வேலைகள் ரோபோகள் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளை கண்டுபிடிக்க விசா என்ற புதிய மென்பொருள் உருவாக்கம்!
[Tuesday 2016-02-02 19:00]

தற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம் அணு ஆயுதங்கள் குவிந்து கிடப்பது அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில் தீவிரவாத அமைப்புகளிடம் அணு ஆயுதங்கள் சிக்கும் நிலை உருவாகிவருகிறது.இந்நிலையில் சமீபத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை முதலில் கண்டறிந்து ஒரு சமூக நல அமைப்பு. சி.டி.பி.டி.ஒ.(CTBTO) என்ற அந்த அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த எரிக் சுத்தேர்த் என்ற பேராசிரியரால் உருவாக்கப்பட்டது.


வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் நூறு கோடியாக உயர்ந்துள்ளது!
[Tuesday 2016-02-02 18:00]

குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை மின்னல் வேகத்தில் பரிமாற உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதனமாக கருதப்படும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் நூறு கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் பத்து கோடி புதிய பயனாளர்கள் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப்பை பேஸ்புக் குழுமம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியது. தற்போது சுமார் நூறு கோடி குழுக்கள் (குரூப்) வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு 42 பில்லியன் குறுந்தகவல்களும், 1.6 பில்லியன் புகைப்படங்களும், 250 மில்லியன் வீடியோக்களும் வாட்ஸ்அப் மூலமாக பரிமாறப்பட்டு வருவதாக இந்த வாட்ஸ்அப் 'அப்'பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜன் கவோம் குறிப்பிட்டுள்ளார்.


ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது: - தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
[Tuesday 2016-02-02 18:00]

100 கோடி பயனாளர்களை தாண்டி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் வரிசையில் இணைந்திருக்கிறது ஜி மெயில்.தினந்தோறும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது ஜி மெயில். மின்னஞ்சல் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கூகுளின் ஜி மெயிலுக்கு அருகில் கூட வர முடியாத அளவிற்கு முன்னணியில் உள்ளது ஜி மெயில். இந்நிலையில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன பங்குதாரர்களிடமும், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள செய்தியில் ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிகை கடந்த மே மாதம் 900 மில்லியனாக இருந்தது. கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


மலேசியாவில் தமிழர் உருவாக்கிய மலேயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுகிறது!
[Tuesday 2016-02-02 12:00]

மலேயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகத்திற்குள் இனி அந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்கிற புதிய விதி அங்கே சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த புதிய விதி இந்த நூலகத்தின் பயன்பாட்டை பல்கலைக்கழகத்தில் படிக்காத மற்றைய தமிழ் மாணவர்கள் மத்தியில் வெகுவாக குறைக்கும் என்றும் படிப்படியாக இந்த நூலகம் மூடப்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும் என்றும் மலாயா தமிழ் உயர்கல்வி ஆய்வு மாணவர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. மலாயா தமிழ் மாணவர்களுக்காகவென, அந்நாட்டுத் தமிழர்களிடம் நிதி வசூலித்து உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு நூலகம் படிப்படியாக பொதுப்பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் போக்கு கவலையளிப்பதாக கூறுகிறார் மலேசியாவின் வல்லினம் இதழ் ஆசிரியர் நவீன் மனோகரன்.


குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 86 பேரே எரித்தும், சுட்டும் கொலை செய்த போகோ ஹரம் தீவிரவாதிகள்:
[Tuesday 2016-02-02 07:00]

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஏராளமான குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 86 பேரே எரித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் கும்பலாக நுழைந்து, அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.


மரபணு முறையில் கரு உருவாக்குதலுக்கு இங்கிலாந்து மனித கருவூட்டம் மற்றும் முளையியல் ஆணையம் ஒப்புதல்:
[Tuesday 2016-02-02 07:00]

கரு சிதைவு குறித்து மரபணு முறையில் கரு உருவாக்குதலுக்கு இங்கிலாந்து மனித கருவூட்டம் மற்றும் முளையியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றான ஆல்கஹால் குடித்தால் கண்டிப்பாக கரு சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், கர்ப்பத்தின் போது ஆல்கஹால் பருகாமல் இருக்க வேண்டும்.இந்நிலையில் லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் செயற்கை கருவூட்டம் மூலம் மரபணு முறையில் கரு உருவாக்குதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மரபணு மாற்றம், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


கையில் மரம் போல் வளர்ந்த மருவை அகற்ற அறுவை சிகிச்சை: - பங்களாதேஷில் 26 வயது இளைஞர் அவஸ்தை
[Tuesday 2016-02-02 07:00]

பங்களாதேஷத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கு கையில் மரம் போல் வளர்ந்த மருவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. அபுல் பஜண்டர் என்ற 26 வயது இளைஞர் வித்தியாசமான தோல் வியாதியில் பாதிக்கப்பட்டார். பத்து வருடங்களுக்கு முன்பு அவரின் கைகள் மற்றும் விரல்களில் மரு வரத்தொடங்கியது. அதை அப்போது அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது 5 கிலோ எடையுடையதாக மாறி விட்டது. பார்ப்பதர்கு அவர் கையில் மரம் முளைத்தது போல் காணப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். கையிலிருந்து கிளைகள் முளைத்தது போல் இருக்கிறது. இப்படி ஒரு நோயா என்று இவரை பலரும் வித்தியாசமாக பாக்கிறார்கள். தினமும் நூறு பேருக்கும் மேல் இவரை வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.


[Tuesday 2016-02-02 07:00]


சீனாவில் இணையம் மூலம் நிதி மோசடி: - போலீசார் தனிப்படை அமைத்து 21 பேர் கைது
[Monday 2016-02-01 19:00]

சீனாவில் இணையம் மூலமாக செயல்படும் நிதிநிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீன போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இசூபாவ் என்ற நிதிநிறுவனம் இணையம் வழியாக சுமார் 9 லட்சம் முதலீட்டாளர்களிடம் பல்வேறு திட்டங்களுக்கென முதலீட்டினை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் வெளியிட்ட திட்டங்களில் 95 சதவீதம் போலியானவை எனவும் தெரிகிறது. இதுபோன்ற மோசடிகள் மூலம் அந்த நிறுவனம் இதுவரை 760 கோடி டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 600 கோடி) வரை கையாடல் செய்து உள்ளது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் உள்பட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிறுவனத்துக்கான இணைய முகவரி முடக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களுக்கு சீல் வைத்ததோடு அவற்றின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


மியான்மரில் ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி பதவி ஏற்றுக் கொண்டது.
[Monday 2016-02-01 19:00]

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். மியான்மர் நாட்டு சட்டத்தின்படி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் ஜனாதிபதி (ஆட்சித் தலைவர்) பொறுப்பை ஏற்க முடியாது. ஆங்சான் சூகி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் என்பதால் அவரால் ஜனாதிபதி ஆக முடியவில்லை.


தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளமை ஆபத்தானது: - சீனா எச்சரிக்கை
[Sunday 2016-01-31 22:00]

சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு செயற்கை தீவையும் சீனா உருவாக்கி வருகிறது.அதேபோல சில தீவுகளுக்கு தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது. இதில் தைவான், ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஏவுகணை அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்காவின் கர்டிஸ் வில்பர் போர் கப்பல், சர்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் சென்றது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.


ஜெனிவாவில் ஐநா தூதுவரை சிரியாவின் எதிர்க்கட்சிக்குழு சந்தித்தது!
[Sunday 2016-01-31 22:00]

ஜெனிவாவில் அமைதி பேச்சுக்களில் கலந்துகொள்ளும் சிரியாவின் முக்கிய எதிர்க்கட்சி குழு ஒன்று முதல் தடவையாக ஐநாவின் சிறப்புத்தூதுவர் ஸ்டாஃபன் த மிஸ்ட்ருவாவை சந்தித்துள்ளது.சிரியாவின் மனித நேய நெருக்கடிக்கு தீர்வு தரக்கூடிய முன்னேற்றத்துக்கான முக்கிய உறுதிப்பாடுகளை எட்டாதவரை தாம் அரசியல் சமரச பேச்சுக்களை ஆரம்பிக்க மாட்டோம் என்று அந்தக் குழு திரும்பத்திரும்ப வலியுறுத்தியுள்ளது.அதிபர் பஷர் அல் அஸ்ஸத்தின் பிரதிநிதிகளை ஸ்டாஃபன் த மிஸ்ட்ருவா அவர்கள் சந்தித்ததுடன், ஐநா அனுசரணையுடனான பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பித்தன.


சிரியா இரட்டைக்குண்டு குண்டுத்தாக்குதலில் 45 பேர் பலி!
[Sunday 2016-01-31 22:00]

தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 45 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.அங்கிருந்த கட்டிடங்களும் கார்களும் எரிந்து கருகிப்போனதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.எரிந்துபோன ஒரு கட்டிடத்தில் ஒரு இராணுவ தலைமை அலுவலகமும், குடும்பங்கள் தங்கும் இருப்பிடங்களும் இருந்ததாகவும் அவர் கூறினார். ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம். முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பது, லெபனானின் ஷியா அமைப்பான ஹெஸ்புல்லா மற்றும் இரான் ஆகியன அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.


ரஷிய விமானம் தங்கள் வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக துருக்கி குற்றச்சாட்டு!
[Sunday 2016-01-31 20:00]

ரஷிய நாட்டின் போர் விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் தங்களது வான் எல்லையில் அத்து மீறி பறந்ததாக கூறி, அதை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இந்த சம்பவத்தால் ரஷியா-துருக்கி இடையே மோதல் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், ரஷியாவின் எஸ்.யு.-34 ரக விமானம் ஒன்று, நேற்று தங்களது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக துருக்கி குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் இதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனா-ஷெங்கெவ் கூறும்போது, எந்தவொரு ரஷிய விமானமும், துருக்கி எல்லையில் நுழைந்து பறக்கவில்லை. துருக்கியின் குற்றச்சாட்டு விஷமப்பிரசாரம் மட்டுமே. துருக்கியின் ரேடார்கள், எந்தவொரு விமானத்தையோ, அது எந்த நாட்டை அல்லது வகையை சேர்ந்தது என்பதையோ கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாதவை. எந்தவொரு எச்சரிக்கையும் ஆங்கிலத்திலோ, ரஷிய மொழியிலோ விடுக்கப்படவில்லை என்று கூறினார்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ்!
[Sunday 2016-01-31 08:00]

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய


செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் ரோபோ!
[Sunday 2016-01-31 08:00]

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைத்துள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.கடந்த 5 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வரும் இந்த ரோபோ வாகனம், அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து நாசா ஆய்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


கணிப்பொறிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: - ஒபாமா வலியுறுத்தல்
[Sunday 2016-01-31 08:00]

அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும் வகையில் கணிணி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக 4 பில்லியன் டாலர் நிதி உதவியை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய பொருளாதாரத்தில் கணிணி அறிவியல் என்பது ஒரு துணை திறனாக கருதப்பட்டுவிடக் கூடாது. அது அடிப்படை திறனாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட்ட ஐநா!
[Saturday 2016-01-30 18:00]

சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களின் விவரங்களை ஐநா வெளியிட்டுள்ளது சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை ஐநா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் என தெரிவிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஐநா ஒப்புக்கொண்டுள்ளது.ஐநாவின் அமைதி காக்கும் படையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் அறுபத்து ஒன்பது சம்பவங்கள் கடந்த ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளதாக ஐநாவின் மூத்த அதிகாரி அந்தோனி பன்பரி தெரிவித்துள்ளார்.2014ஆம் ஆண்டில் ஐம்பத்து ஓரு சம்பவங்கள் பதிவாயின.இந்த ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருபத்து இரண்டு சம்பவங்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசி இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வங்கதேசம், காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா மற்றும் செனகலை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து: - பத்து குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!
[Saturday 2016-01-30 18:00]

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக அவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.


சிரியாவில் பட்டினியால் 16 பேர் உயிரிழப்பு: - எம்.எஸ்.எஃப் தெரிவிப்பு
[Saturday 2016-01-30 18:00]

சிரியாவில் கடந்த மாதத்திலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.சிரியாவில் முற்றுகையிடப்பட்டுள்ள மதாயா நகருக்கு உதவித் தொடரணி நுழைய கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. அந்நகரில் போஷாக்கின்மையால் முன்னூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது முப்பது பேராவது உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜெனிவாவில் பேச்சுக்கள் நடக்கும் சமயத்தில் எம்.எஸ்.எஃபின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.வெள்ளியன்று தொடங்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களை புறக்கணித்த சிரியாவின் முக்கிய எதிரணி குழுக்கள், சனிக்கிழமை பிற்பகுதியில் ஜெனிவாவுக்கு வந்திறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்ப்பகாலத்தின் போது பெண்கள் பாரசிடமால் மாத்திரைகளை பாவித்தால் குழந்தையின் உடல் நலத்துக்கு கேடு:ஆய்வில் புதிய தகவல்
[Saturday 2016-01-30 15:00]

வலி நிவாரண மருந்தாக

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா