Untitled Document
September 19, 2024 [GMT]
அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன்!
[Saturday 2016-01-30 15:00]

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நாடுதழுவிய அளவில் மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் அரசின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்சார்ந்த அனைத்து நோய்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் உள்ளிட்ட அனைத்துவகை சிகிச்சைகளையும் மக்கள் இலவசமாக பெறமுடியும். சிகிச்சைக்கு பின்னர் அந்தந்த மருத்துவமனைகள் அதற்கான கட்டணத்தை நோயாளிகளின் காப்பீட்டு கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளும்.இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சார்லேன் லாடர்டேல்(55) என்பவர் பிறவியிலேயே ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் கொண்டவராக பிறந்தார். விமானப்படையில் ஒரு ஆணாகவே பணியாற்றிய இவர், பணிஓய்வுக்குப் பின்னர் முழுப்பெண்ணாக மாற விரும்பினார்.


கைது செய்யப்பட்டிருந்த இஸ்ரேலியக் கழுகினை விடுவித்த லெபனான்!
[Saturday 2016-01-30 09:00]

லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது.அந்தக் கழுகின் உடல்பகுதியில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது.அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது.இருநாட்டு எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஐ நா அமைதிப் படை வீரர்கள் நடத்திய சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்தக் கழுகு விடுவிக்கப்பட்டது என இஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் அந்தக் கழுகு வேவுபார்க்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, அது தரையிறங்கிய கிராமத்து மக்களே அதை விடுவித்துவிட்டனர் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஸீகா நுளம்பை தேடி அழிக்கும் பணியில் பிரேஸில் இராணுவத்தினர்!
[Saturday 2016-01-30 08:00]

ஸீக வைரஸால் ஏற்பட்டுள்ள உலக கவலை அதிகரித்து வருவதன் இன்னுமொரு சமிக்ஞையாக சர்வதேச ஒலிம்பிக் குழு, ரியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வரும் விளையாட்டு வீரர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வழிகாட்டு விதிகளை அறிவிக்கவுள்ளது.இந்த வைரஸ் புதிதாக ஜெர்மனிக்கும் வந்திருப்பதை அந்நாடும் உறுதி செய்துள்ளது.அதேவேளை, வீடுவீடாக ஸீகா வைரஸை பரப்பும் கொசு(நுளம்பு) வளரக்கூடிய நீர் நிலைகளை தேடி அழிக்கும் பணியில் பிரேஸில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.ஸீகா வைரஸ் பரவியுள்ள இருபதுக்கும் அதிகமான நாடுகளில் பிரேசில்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடி தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் சாவு!
[Saturday 2016-01-30 07:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்டவற்றில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாலியில் வெளிநாட்டினர் தங்கக்கூடிய நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இது போன்ற தாக்குதல்களில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.இந்த நிலையில் நேற்று வடகிழக்கு பகுதியில் உள்ள காவோ நகரில் இருந்து கோஷி நகருக்கு மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்துக்கு காவலாக ராணுவ வாகனம் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் ராணுவ வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். முன்னதாக திம்புக்டு என்ற நகருக்கு அருகே உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகே நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ராணுவவீரர் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பாகிஸ்தானில் 230 கல்வி நிறுவனங்கள் மூடல்: - கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடு.
[Saturday 2016-01-30 07:00]

பாகிஸ்தானில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிறுவனங்களை குறி வைத்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 144 குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை கொன்று குவித்தது உலகையே அதிர வைத்தது.அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளால் கல்வி நிறுவனங்கள் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரிட்டனில் மிகக் குறைந்த பெண்களே தாய்ப்பால் கொடுக்கின்றனர்: - ஆய்வில் தகவல்
[Friday 2016-01-29 21:00]

பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிலேயே உலகளவில் அதிகமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டனிலேயே மிகக் குறைந்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதாக ஆய்வு கூறுகிறது ருவாண்டாவில் அதிகபட்சமாக 85% பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அதேவேளை பிரிட்டனிலேயே மிகக் குறைந்த அளவில் தாய்பால் புகட்டும் பழக்கம் உள்ளதாவும் அந்த ஆய்வு கூறுகிறது.


சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: - மூவர் பலி
[Friday 2016-01-29 19:00]

சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.


காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் சீன கப்பல்!
[Friday 2016-01-29 19:00]

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் இப்போது சீன கப்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.பன்னாட்டு படைகள் தொடர்ந்து காணாமல் போன விமானத்தை தேடுகின்றன.அந்தக் கப்பலில் அதிநவீன ஒலி உணர்வு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்தியப் பெருங்கடலின் கடற்படுகையின் கரடுமுரடான பகுதிகளில், ஆய்வாளர்கள் நெருங்கிச் சென்று நுணுக்கமாக ஆய்வு செய்ய உதவும்.கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எம்எச்-370 விமானம் திடீரெனக் காணாமல் போனது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. எனினும் இதுவரை, அந்த விமானத்தின் சிதிலங்களில் ஒரேயொரு பகுதி மட்டும் பிரெஞ்சுத் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.


சர்வதேச ஊடகவியலாளர்கள் இருவரை கைது செய்த புருண்டி அரசு!
[Friday 2016-01-29 19:00]

புருண்டியில் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்துவந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் செய்தியாளர் ஜீன் பிலிப் ரெமி, மற்றும் பிரிட்டனை சேர்ந்த நிழற்பட ஊடகவியலாளர் பில் மூர் ஆகியோர், ஆயுதக்குற்றக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக புருண்டி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இருவருடன் சேர்த்து, கடந்த வியாழக்கிழமை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்றாவது தடவையாகவும் தான் அதிபர் பதவி வகிக்கப்போவதாக, அதிபர் பீயர் குரன்ஸீஸா அறிவித்தது முதல், கடந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கி அங்கே கலவரம் இடம்பெற்றுவருகிறது.இதன் காரணமாக, 400 க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாகவும் 2,50,000 க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.


ஜப்பானில் வர்த்தக வங்கிகள் தம் இருப்பில் பணம் வைத்திருந்தால் கட்டணம் கட்டவேண்டும்!
[Friday 2016-01-29 19:00]

ஜப்பானில் வர்த்தக வங்கிகள் தம் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் கட்டணம் கட்டவேண்டும் ஜப்பானில் முதல் முறையாக எதிர் வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால், வர்த்தக வங்கிகள் தங்கள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் என்ற அளவில் ஜப்பானின் மத்திய வங்கி கட்டணம் வசூலிக்கும். இதனால், வங்கிகள் பணம் சேமிப்பதைக் கைவிட்டுவிட்டு, கடன் கொடுக்க ஆரம்பிக்கும் என மத்திய வங்கி கருதுகிறது. இதனால், வளர்ச்சியின்றி இருக்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ வலைய நாடுகளில் ஏற்கனவே எதிர் வட்டிவிகிதம் நடைமுறயில் இருக்கிறது. ஆனால், ஜப்பானில் இம்மாதிரி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பின்னடவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டுவந்தது.இந்த வட்டிக் குறைப்பு எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்ற சந்தேகமும் நிபுணர்களிடம் இருக்கிறது.


ஆஸ்திரேலியாவில் கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி!
[Friday 2016-01-29 15:00]

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி போலீசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவனான செவ்டெட் பெசிம் என்ற 19 வயது வாலிபனிடம் நடத்திய விசாரணையில் ஒரு புதிய தாக்குதல் முறையை அரங்கேற்ற அவன் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார் திடுக்கிட்டனர்.


பிரேஸிலில் ஸீகா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பை அனுமதிக்க கோரிக்கை!
[Friday 2016-01-29 06:00]

ஸீகா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பை அனுமதிக்குமாறு பிரேஸில் உச்சநீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. பிரேஸில் நீதிபதிகள், ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் கருக்கலைப்பை அனுமதிக்க உச்சநீதிமன்றத்தை கோரியுள்ளனர்.பிரேஸிலில் கருக்கலைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சுகாதார நெருக்கடிகள் மற்றும் துஷ்பிரயோக வழக்குகளின் போது மாத்திரமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.


கொசுக்கள் மூலம் ஸிக்கா நோய் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
[Friday 2016-01-29 06:00]

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் நோயான 'ஸிக்கா' கொசுக்களின் மூலம் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.


சிரிய நாட்டில் தலைத்தூக்கியுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே முக்கிய பிரச்சினை: - ரௌஹானி
[Friday 2016-01-29 06:00]

சிரிய நாட்டில் தலைத்தூக்கியுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே சிரியாவில் காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவிற்கான தனது இரண்டாம் கட்ட பயணமாக பிரான்ஸினை சென்றடைந்த ஈரான் ஜனாதிபதி அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்டுடன் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் பேரழிவுக்கு ஜனாதிபதி பஷர் அல் அசாட் காரணமில்லை. இந்த பேரழிவுப் பிரச்சினைக்கு இஸ்லாமிய சுன்னி போராளிக் குழுக்களும் அவர்களது ஆதரவாளர்களுமே காரணம்.


யேமன் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு தாக்குதல்: ஏழு பேர் பலி!
[Friday 2016-01-29 06:00]

யேமனின் தெற்கு துறைமுக நகரான ஏடனில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் சுமார் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள சோதனை சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது ஜனாதிபதி அப்த்


அமெரிக்கன் கிறீன் கார்ட் விசா! - நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
[Thursday 2016-01-28 23:00]

அமெரிக்காவினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம்


இங்கிலாந்து பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Thursday 2016-01-28 21:00]

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளி கூடங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உடனடியாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் கடந்த செவ்வாய் கிழமை இங்கிலாந்து நாட்டின் 14 பள்ளிக்கூடங்களுக்கு விடப்பட்டது. ஆனால் அது வெறும் புரளி என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் பள்ளி கூடங்களில் சோதனையிட்டனர்.இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.


கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி!
[Thursday 2016-01-28 18:00]

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.


கஜகஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி!
[Thursday 2016-01-28 18:00]

கஜகஸ்தான் நாட்டில் இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அந்நாட்டு இணைய ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேற்று மாயமான MD-600N இலகுரக ஹெலிகாப்டரின் பாகங்கள் இன்று அல்மாட்டி நகரின் தென்கிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த செய்தியை உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் டெங்க்ரிநியூச் என்ற அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்காவில் வரி மோசடியில் ஈடுபட்ட இந்திய தொழில் அதிபருக்கு 21 மாதம் சிறை!
[Thursday 2016-01-28 08:00]

அமெரிக்காவில் வசித்து வருபவர் சவன் சன்னி ஷா (வயது 43). இந்திய வம்சாவளி தொழில் அதிபர். இவர் அங்கு அட்லாண்டா பகுதியில் உரிய லைசென்ஸ் பெறாமல் காசோலை மாற்று நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். 1000 டாலருக்கு (சுமார் ரூ.67 ஆயிரம்) மேல் மதிப்புள்ள காசோலைகளை மாற்றி தந்துள்ளார். அவர் சட்டப்படி,


நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: - 10 பேர் பலி!
[Thursday 2016-01-28 08:00]

நைஜீரியாவில் நடைபெற்ற 3 தற்கொலைப் படை தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா நகரத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன. போகோஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி மாணவிகளை கடத்தி வைத்திருந்த பகுதி அது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தாக்குதல் நகருக்குள் நுழையும் வாயிலில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்டது. இரண்டாது தாக்குதல் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதியிலும், மூன்றாவது தாக்குதல் மார்க்கெட் பகுதிக்கு அருகிலும் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் இதுவரை குறைந்தபட்சமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் சிபோக் பகுதியில் பதற்றமும், குழப்பமும் நிறைந்து காணப்படுகிறது.


உலகின் வேகமான பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க இருக்கிறது: - சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவிப்பு
[Thursday 2016-01-28 08:00]

உலகின் வேகமான பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் பல்வேறு பொருளாதார முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி மேலும் வலுப்படும் என்றும் அவர் கூறினார்.சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் விஜய் தாக்குர் சிங் சார்பில் அந்நாட்டில் நடத்தப்பட்ட குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு ஈஸ்வரன் பேசியதாவது: இந்த ஆண்டில் உலகின் வேகமான பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க இருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் மிக அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. சர்வதேச அளவில் பொருளாதார நிலை மந்தமாக உள்ள போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. இந்தியா - சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்பின் காரணமாக இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பலமடைந்திருக்கிறது.ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியைக் கட்டமைக்க அந்த மாநில அரசுடன், சிங்கப்பூர் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.


கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவிற்கு நேபாளம் பகை நாடு அல்ல: - துணை பிரதமர் சிபி.மைனாலி
[Thursday 2016-01-28 07:00]

சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவிற்கு நேபாளம் பகை நாடு அல்ல என்று அந்நாட்டின் துணை பிரதமர் சிபி.மைனாலி கூறியுள்ளார். நேபாளத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியல் சாசனத்திற்கு எதிராக மாதேசி உள்ளிட்ட இந்திய வம்சாளியை சேர்ந்த சமுதாயத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தினார் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் நேபாள எல்லைக்குள் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும் இந்தியாவிற்கு நேபாளத்தில் இடையே சில முரண்பாடுகளும் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.


ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் டென்மார்க்: - 76-வது இடத்தில் இந்தியா
[Thursday 2016-01-28 00:00]

2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய ஊழல் போக்கு குறியீட்டின் தரவரிசைப் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது. 2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளில் பட்டியலில் மொத்தம் 168 நாடுகள் உள்ளன. இதில், 9 இடங்கள் முன்னேறி இந்தியா 76-வது இடத்தை அடைந்துள்ளது.சீனா 83-வது இடத்திலும், வங்கதேசம் 139-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


கொடிய ஸீகா வைரஸ் பரவலை தடுக்க தடுமாறும் பிரேசில்!
[Wednesday 2016-01-27 19:00]

பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஸீகா வைரஸுக்கு எதிராக போராட பிரேசில் அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.இந்த வைரஸ் அமெரிக்கா எங்கிலும் பரவிவிடலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை ஆகியவற்றுக்கான சோதனைகளை விரைவுபடுத்துமாறு அதிபர் ஒபாமா கேட்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை வந்திருக்கிறது.கொசுவின் (நுளம்பு) மூலம் பரவும் இந்த வைரஸ், கர்ப்பிணிகளுக்கு தொற்றினால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளைக் கோளாறுடன் பிறக்கலாம்.


பிரான்ஸில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு: - அந்நாட்டின் நீதி அமைச்சர் ராஜினாமா!
[Wednesday 2016-01-27 19:00]

பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்ற பிரஞ்சுப் பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலான கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ்டியான் தோய்பிரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


ஸீகா வைரஸை தடுக்கும் சிகிச்சைகள் குறித்து விரைவுச் சோதனைகள் அவசியம்: - ஒபாமா கோரிக்கை
[Wednesday 2016-01-27 19:00]

கொசுவினால் (நுளம்பு) பரவி, பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய, ஸீகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவுச் சோதனைகள் அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியுள்ளார்.சூடான காலப்பகுதிகளில் அமெரிக்காவில் எங்கிலும் பரவக்கூடிய இந்த வைரஸ் குறித்து ஒபாமா பேசியுள்ளார். இந்த நோயின் தாக்கல் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து அமெரிக்கர்களுக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்பட வேண்டும் என்று ஒபாமா எதிர்பார்க்கிறார். அந்த வைரஸ் பரவியிருக்கும் நாடு ஒன்றில் இருந்து அமெரிக்கா திரும்பிய வெர்ஜினியாவை சேர்ந்த ஒருவருக்கு அந்த வைரஸ் இருப்பது செவ்வாயன்று தெரியவந்துள்ளது.


ஈரானில் உற்பத்தி செய்யப்படுவனவற்றில் 30 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்: - ஈரான் அதிபர்
[Wednesday 2016-01-27 08:00]

மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே தீவிரவாதத்தை வெல்வதற்கான வழி என்று ஈரான் அதிபர் ஹாசன் ரோஹனி தெரிவித்துள்ளார். 4 நாட்கள் பயணமாக அதிபர் ரோஹனி இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கு உலக நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இத்தாலி 18.4 பில்லியன் டாலர் அளவில் ஈரானுடன் கடந்த திங்கட்கிழமை வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா