Untitled Document
February 22, 2025 [GMT]
மீண்டும் எம்.பி ஆகிறார் ரணில்?
[Thursday 2025-02-20 16:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை!
[Saturday 2025-02-22 06:00]

கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.


இப்போது விவாதிப்பது பொருத்தமல்ல - கஜேந்திரகுமாருக்கு கைவிரித்தார் சிவிகே!
[Saturday 2025-02-22 06:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இதுபற்றிக் கலந்துரையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.


விலகிச் சென்றால் வரலாறு எம்மை மன்னிக்காது!
[Saturday 2025-02-22 06:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.


கடந்தகால மோசடிகளுக்கு ஜேவிபியும் பொறுப்புக்கூற வேண்டும்!
[Saturday 2025-02-22 06:00]

அரசாங்கம் நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் கடந்த கால அரசாங்கத்தை குறைகூறி தப்பிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் கடந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து வந்திருக்கிறது. அதனால் அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.


மாலைதீவு வெளியுறவு அமைச்சருடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு!
[Saturday 2025-02-22 06:00]

பொருளாதார நெருக்கடியிலிருந்து மாலைதீவை மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார்.


கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரா கொலையாளி?
[Saturday 2025-02-22 06:00]

கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபரும் கணேமுல்லே சஞ்சீவவும் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராகத் தான் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.


துப்பாக்கிதாரியின் காதலி கைது!
[Saturday 2025-02-22 06:00]

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.


துப்பாக்கி இயங்காததால் தப்பினார் வர்த்தகர்!
[Saturday 2025-02-22 06:00]

நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் மற்றொரு கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிரிஸ் அந்தோணி என்கிற சமிந்தவின் மூத்த மகனை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படவிருந்தது.


மித்தெனிய முக்கொலைகள்- தேடப்படும் இரண்டு இராணுவத்தினர்!
[Saturday 2025-02-22 06:00]

மித்தெனியவில் சுட்டுக் கொல்லப்பட்ட அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனின் கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரியாலை புதைகுழி - அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!
[Friday 2025-02-21 16:00]

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை!
[Friday 2025-02-21 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


தையிட்டி விகாரை விவகாரம் - 2 ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!
[Friday 2025-02-21 16:00]

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.


அக்கரைப்பற்று விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
[Friday 2025-02-21 16:00]

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


கனிய மணல் அகழ்வை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும்!
[Friday 2025-02-21 16:00]

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குற்றவாளியை ஹீரோவாக்கிய அரசாங்கம்!
[Friday 2025-02-21 16:00]

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கண்டனம் வெளியிட்டார்.


ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு மட்டுமே 24 மணிநேர சேவை!
[Friday 2025-02-21 16:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


யானை தாக்கி 2 பேர் பலி!
[Friday 2025-02-21 16:00]

காட்டு யானை தாக்கியதில் அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த அந்த நபர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.
[Friday 2025-02-21 16:00]

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்


வவுனியாவில் டிப்பர் மோதி பெண் படுகாயம்!
[Friday 2025-02-21 16:00]

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்றுமதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வித்தியா கொலை குற்றவாளியை விடுவித்த லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!
[Friday 2025-02-21 06:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.


கஜன், வாசுகி, வேலன் சுவாமியிடம் விசாரணை!
[Friday 2025-02-21 06:00]

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்று வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.


பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டு வர விரைவில் நடவடிக்கை!
[Friday 2025-02-21 05:00]

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


அதானியுடன் பேசும் திட்டம் இல்லை!
[Friday 2025-02-21 05:00]

அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. பொருளாதார நிலைமைக்கமைய எவ்வாறு குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவது என்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


சஜித்தை சந்தித்தார் ஜூலி!
[Friday 2025-02-21 05:00]

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையிலான இந்த பிரத்தியேக சந்திப்பு சுமார் ஒரு மணித்தியலாமளவில் இடம்பெற்றது.


வடக்கு பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை!
[Friday 2025-02-21 05:00]

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அவரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.


இயக்கச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Friday 2025-02-21 05:00]

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.


மைத்திரி, மகிந்தவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அதிக செலவு!
[Friday 2025-02-21 05:00]

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயண மொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய்களை செலவளித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.


நீதிமன்றக் கொலையாளிக்கு உதவிய பொலிஸ் கைது!
[Friday 2025-02-21 05:00]

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பிலிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.


இருவருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்!
[Friday 2025-02-21 05:00]

குற்ற கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ கொமாண்டோ மற்றும் அவர் தப்பிச் செல்ல உதவிய ஓட்டுநரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக கொழும்பு குற்றப் பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை!
[Thursday 2025-02-20 16:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா