Untitled Document
September 28, 2024 [GMT]
 
முன்னணி கதாநாயகர்கள் யாருமே கண்டு கொள்ளவில்லையாம்? - பிரபல தயாரிப்பாளர் வருத்தம்
[Saturday 2016-03-19 16:00]

தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரையுமே தன் தயாரிப்பில் பல படங்களில் நடிக்க வைத்தவர் ஏ.எம்.ரத்னம்.இவரின் தந்தை சமீபத்தில் இறந்தது அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஆந்திரா செல்ல, ஒருவர் கூட தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறவில்லையாம்.அதிலும் கடைசியாக வெளிவந்த அஜித்தின் 3 படங்களையும் இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வடிவேலுவை மிரட்டிய பிரபல நகைச்சுவை நடிகர்!
[Saturday 2016-03-19 16:00]

சென்ற தேர்தலின் போது தீவிர அரசியல் பிரசாரத்தில் இறங்கிய காமெடி நடிகர் வடிவேலு, அவர் ஆதரவளித்த கட்சி தோற்றுப்போனதால் சினிமா துறையில் இருந்தும் ஒதுங்க வேண்டியாதாயிற்று. அதற்கு பின் அவர் ரீஎன்ட்ரி கொடுத்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை.மீண்டும், இந்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய பல தமிழ் நடிகர்கள் தயாராகிவருகின்றனர்.நடிகர் கஞ்சா கருப்பு, "ஆளும் கட்சி அழைத்தால் பிரசாரம் செய்ய தயார்' என அறிவித்துள்ளார். மேலும் வடிவேலுவை 'இந்த தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வீட்டை விட்டு வெளிய வந்துவிடவேண்டாம்' எனவும் எச்சரித்துள்ளார்.


ரஜினியை ஹீரோவாகவும் அஜித்தை வில்லனாகவும் வைத்து படம் எடுக்கவேண்டும்: - சாத்தியம் ஆகுமா..?
[Saturday 2016-03-19 16:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் இருவரின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்!!!.அவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும், அதில் ரஜினியை ஹீரோவாகவும், அஜித்தை வில்லனாகவும் காட்ட வேண்டும் இது தான் என் ஆசை என சவாரி படத்தின் இயக்குனர் கணேஷ் சென்னியப்பன் விருப்பம் தெரிவித்துள்ளார்.அஜித் ஏற்கனவே ஒரு பேட்டியில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும், அவர் கையில் அடிவாங்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இவ்வளவு பணம் கேட்டாரா நயன்தாரா!
[Friday 2016-03-18 19:00]

நயன்தாரா ஏற்கனவே பில்லா படத்தில் பிகினியில் நடித்தார். இதை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் இத்தனை கவர்ச்சியாக நடிக்க வில்லை.இந்நிலையில் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.இதுமட்டுமன்றி ஒரு காட்சியில் பிகினியில் நடிக்க ரூ 1 கோடி வாங்கியுள்ளாராம்.


தெறி படத்தின் புதிய சாதனை: - இதற்குமா இப்படி?
[Friday 2016-03-18 19:00]

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி முடிந்தும் விட்டது.இதை தொடர்ந்து நாளை மறு நாள் இப்படத்தின் பாடல்கள் வரவிருக்கின்றது. இந்த ஆடியோ சிடிக்கும் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.மேலும், தமிழகமெங்கும் தெறி ஆடியோ சிடி முன்பதிவு 90% மேல் விற்று சாதனை படைத்து விட்டதாம்.


ரசிகரை துள்ளிக்குதிக்க வைத்த விக்ரம்!
[Friday 2016-03-18 19:00]

விக்ரம் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.இந்நிலையில் சமீபத்தில் இவர் கேரளாவிற்கு செல்ல அங்கு ஒரு ரசிகர், இவர் காரில் இருப்பதை அறிந்து பின் தொடர்ந்து வந்துள்ளார், உடனே என்ன வேண்டும் என்று கேட்க


ஒரே காலில் நின்று கொண்டு நடனமாடினாரா சிம்பு: -அதிர்ந்த கோலிவுட்
[Friday 2016-03-18 19:00]

சிம்புவின் நடனத்திறமை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்திற்காக கடந்த இரண்டு நாட்களாக ஒரு பாடலை படமாக்கி வருகின்றனர்.இந்த பாடலில் சிம்பு கிட்டத்தட்ட 70 வினாடிகள் ஒரே காலில் நின்று கொண்டு நடனம் ஆடினாராம். மேலும், இதை ஒரே டேக்கில் அவர் முடித்து கொடுத்துள்ளார்.சிம்புவால் மட்டும் இப்படியெல்லாம் ஆட முடிகின்றது என கோலிவுட்டே வியந்தாலும், ரசிகர்களுக்கு இந்த பாடல் செம்ம விருந்து தான்.


சிம்பு நடிக்கவிருந்த படத்தில் விஷால்: - மறுபடியும் மோதலா...?
[Friday 2016-03-18 13:00]
தமிழ், தெலுங்கு படங்கள் வேறொரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒரு விஷயம். கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் டெம்பர். தற்போது இந்த வெற்றி படத்தின் ரீமேக்கில் விஷால் நடிப்பதாக உறுதியாகியுள்ளது. அனல் அரசு இயக்கயிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் தாகூர் மது தயாரிக்க இருக்கிறார்.இப்படத்தின் ரீமேக்கில் முதலில் சிம்புதான் நடிக்க இருப்பதாக இருந்தது. தற்போது அந்த பட வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் சிறந்த ரொமாண்டிக் காமெடி படம்: - இயக்குனர் அட்லி
[Friday 2016-03-18 13:00]

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் தெறி.இப்படத்தின் இயக்குனர் அட்லி கடந்த சில நாட்களாக இப்படத்தின் பாடல் வரி மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.இன்றும் வழக்கம்போல இப்படத்தின் Updates க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி படத்தை பற்றி கூறியுள்ளார்.விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காதலும் கடந்து போகும். சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமீபத்தில் வந்த படத்தில் இது தான் சிறந்த ரொமாண்டிக் காமெடி படம் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் நலனையும் பாராட்டியுள்ளார்.


கலாபவன் மணி மரணத்தில் தொடரும் மர்மங்கள்!
[Friday 2016-03-18 13:00]

கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடிகர் சாபு மீது போலீசாருக்கு சந்தேகம் எழ, அவரிடம் விசாரணை நடத்தினர். சாபுவும் நான் அவருடன் மது அருந்தவே இல்லை, இப்படி வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.தற்போது மணியின் அவுட் ஹவுஸில் வேலை பார்த்த மூவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.


நடிகர் ஜி.வி.பிரகாஷிற்காக சம்மதித்த நடிகை சமந்தா?
[Friday 2016-03-18 13:00]

சமந்தா எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி, 24 படம் வெளிவரவிருக்கின்றது.இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி, சமந்தாவிடம் தன் அடுத்த படமான


திரிஷாவிற்கு தொலை பேசியில் கொலை மிரட்டல்: - அதிர்ச்சியில் திரையுலகம்!
[Friday 2016-03-18 07:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.இதைக்கண்டித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் எதிர்ப்பை காட்டியிருந்தார். இதற்கு, இவருக்கு ஆதரவு குவிந்தது.ஆனால், அந்த அரசியல் பிரமுகர் கட்சி தொண்டர்கள் திரிஷாவிற்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


சிம்புவை அசர வைத்த கதாநாயகி!
[Friday 2016-03-18 06:00]

சிம்பு படத்தில் ஒரு ஹீரோயின் நடிக்கின்றார் என்றால் அவர் திரைத்துறையில் உச்சத்தை தொட்டுவிடுவார். ஆனால், அதற்கு அவர்கள் பல சர்ச்சைகளை தாண்டி வரவேண்டும், அது வேறுக்கதை.இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அடா ஷர்மா நடனமாடியுள்ளார். இதில் இவர் சிம்புவின் நடன வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஆடியுள்ளார்.ஒரு கட்டத்தில் இவரின் நடனத்தை கண்டு சிம்புவே ஒரு நிமிடம் அசந்து விட்டாராம்.


2.0 பட இசை வெளியீட்டு விழா லண்டனில்...!
[Friday 2016-03-18 06:00]

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் தான் உள்ளது என கூறப்பட்டது. இதுக்குறித்து தயாரிப்பு தரப்பு, ஏ.ஆர்.ரகுமான் போல் ஒரு இசையமைப்பாளரை வைத்துக்கொண்டு பாடல்கள் இல்லாமல் எப்படி.கண்டிப்பாக பாடல்கள் இருக்கும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்தவிருக்கின்றோம்


அதிரப்போகிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா! - நடிகைகள் நடிகா்கள் படையெடுப்பு!
[Thursday 2016-03-17 22:00]

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகிற 20


ரம்யா நம்பீசன்- விஜய்சேதுபதி நட்பில் நாலு இஞ்சுக்கு விரிசலாம்..!
[Thursday 2016-03-17 22:00]

பீட்சா படத்தில் தன்னுடன் நடித்தவர், பெஸ்ட் பிரண்ட் என்றெல்லாம் நினைத்துதான் ரம்யா நம்பீசனுக்கு


நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் : - மார்ச் 20-ம் தேதி படப்பிடிப்பு ரத்து
[Thursday 2016-03-17 20:00]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் அரங்கில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. எனவே நடிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுக்குழுவிற்காக படபிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது. புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


நடிகை ரோஜாவுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு...!
[Thursday 2016-03-17 13:00]

ஆந்திர சட்டப் பேரவையிலிருந்து நடிகை ரோஜாவை ஓராண்டு காலம் சல்பெண்ட் நடவடிக்கைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி, சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


சாய் பிரசாந்த் தற்கொலை -!! தொலைக்காட்சி நிறுவனங்களிடம் ராதிகா சரத்குமார் வேண்டுகோள்!
[Wednesday 2016-03-16 21:00]

நடிகர்கள் ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தால் மற்றொரு நிறுவனத்தின் தொலைக்காட்சி நாடகத்திலும் நடிக்க டிவி நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்


வெளிச்சத்தில் இருந்து ஏன் இருள் நோக்கி பயணம்? - சினிமாவில் தொடரும் தற்கொலைகள்
[Wednesday 2016-03-16 21:00]

சினிமா ஒரு கலர்புல்லான உலகம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும். ஆனால், சற்று உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும், மார்க்கெட் இருக்கும் வரை மட்டுமே இங்கு மனிதர்களாக நடத்தப்படுவார்கள். பீல்ட் அவுட் என்று சொல்லப்படும் வார்த்தை ஒருவரின் மீது வந்துவிட்டால் அவரின் நிழல் கூட அவரை விட்டு விலகிவிடும். நிறைய பணம், சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கலாம், ஆனால், மன அழுத்தம், குடும்ப பிரச்சனை பண பற்றாக்குறை என சமீப காலமாக நாம் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என நினைக்கும் பலர் தற்கொலை என்ற முடிவை தேடி வருகின்றனர்.


லோனுக்குப் பதில் பிகினி - பிகினி..!! - ட்விட்டர் உலகின்
[Wednesday 2016-03-16 21:00]

ட்விட்டர் உலகின்


மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை: - தொடரும் சோகம்!
[Wednesday 2016-03-16 18:00]

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 23 வயதான கே,நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர். பிரபல ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு , இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கடற்கரை பகுதியில் வீட்டிற்காக அலைந்து திரிந்த தீபிகா!
[Wednesday 2016-03-16 17:00]

நடிகை தீபிகா படுகோன்,


டண்டணக்கா வரிசையில் உருவாகும் டமால் டுமீல்! - பிரபுதேவா தயாரிக்கவுள்ளார்.
[Wednesday 2016-03-16 17:00]

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு


நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய புதுமுக நாயகி!
[Tuesday 2016-03-15 17:00]

தற்போது தமிழ் மட்டுமில்லாது மலையாள சினிமாவிலும் வெற்றிநடைபோட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அனைத்தும் ஹிட் தான். தற்போது இவருக்கு போட்டியாக காதலும் கடந்து போகும் படம் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வரும் மடோனா வருவார் என தற்போது விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் மடோனா தான் யாருக்கும் போட்டியில்லை, எனக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. நல்ல இயக்குனரும், கதாபாத்திரமும் எனக்கு முக்கியம் என்கிறார்.


தினமும் ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்க வேண்டும்: - சமந்தா
[Tuesday 2016-03-15 08:00]

ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்று சமந்தா கூறினார்.இதுகுறித்து நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-


முன்னணி கதாநாயகனுடன் நடிக்க மறுத்த சமந்தா?
[Tuesday 2016-03-15 08:00]

விஜய் சேதுபதி தற்போது ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார். நயன்தாரா, தமன்னா என முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.ஆனால், ஆரம்பத்தில் இப்படத்திற்கு ஹீரோயின் தேடுதலில் முதலில் படக்குழு அனுகியது சமந்தாவை தானாம்.அவர் இந்த படத்தில் நடிக்க மறுக்க, பிறகு தான் மடோனா கமிட் ஆகியுள்ளார்.


முன்னணி கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!
[Tuesday 2016-03-15 08:00]

ஸ்ருதிஹாசன் நடிப்பில் விரைவில் ராக்கி ஹாண்ட்சம் என்ற பாலிவுட் படம் வரவுள்ளது. இதுமட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து வருகின்றார்.இதில் சூர்யா நடிக்கும் S3 படமும் ஒன்று, இப்படத்தில் சூர்யா, அனுஷ்காவை ஒரு வழியாக திருமணம் செய்வது போல் தான் எடுக்கவுள்ளார்களாம்.திருமணமானவர் என தெரிந்தும் சூர்யாவை ஸ்ருதி ஒரு தலையாக காதலிப்பாராம்.


கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பாராம்: - ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு
[Tuesday 2016-03-15 08:00]

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படம் படுதோல்வியடைந்தது.இதை தொடர்ந்து அரண்மனை-2வில் விட்ட இடத்தை பிடித்தாலும், போக்கிரிராஜா படம் ஹன்சிகா திரைப்பயணத்தில் இதுவரை கண்டிராத தோல்வியை அடைந்தது.இதனால், இனி முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பாராம்.


பிரபல நடிகருடன் காமெடியில் கலக்கவிருக்கும் சூரி: - முதன் முறையாக இணையும் கூட்டணி
[Tuesday 2016-03-15 08:00]

தமிழ் சினிமாவில் தற்போது வரும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ, சூரி இருக்கிறார். ரஜினி முருகன், மாப்ள சிங்கம் என இந்த வருடம் தன் எண்ணிகையை தொடங்கிவிட்டார் சூரி.இவர் அடுத்து முதன் முறையாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடியில் கலக்கவிருக்கின்றாராம். இப்படித்திற்கு

Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா