Untitled Document
September 28, 2024 [GMT]
 
ரொறன்ரோவுக்கு சென்றிருந்த பிரபல நடிகை லக்ஷ்மி மேனன் தலைமறைவு ஆனாரா...? Top News
[Monday 2016-03-14 15:00]

கடந்தவாரம் ரொறன்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்காக சென்றிருந்த பிரபல நடிகை லக்ஷ்மிமேனன் ரொறன்ரோவுக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென காணாமற்போனதாக திரையுலகவட்டாரங்களிலும் ரொறன்ரோவிலும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ரொறன்ரோவுக்கு நிகழ்வு ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்த இசைக்கலைஞர்களுடன் புறப்பட்டுச்சென்ற நடிகை லட்சுமிமேனனை கனடாவிலுள்ள விமான நிலையமொன்றில் வரவேற்ப்பதற்காக ரொறன்ரோ தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்ததாகவும் சரியான நேரத்திற்கு தரையிறங்கிய விமானத்தில் சென்றிறங்கியவாகளுள் நடிகை லஷ்மிமேனன் காணப்படவில்லை எனவும் இதனால் ஏனைய கலைஞர்கள் கதிகலங்கிப்போனதால் விமானநிலையத்தில் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


செல்பி என்கிற வியாதியின் கருப்புப் பக்கங்களை திரைக்கதை மூலம் உணர்த்தும்
[Monday 2016-03-14 13:00]

இன்று மனிதர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை செல்பி எடுத்து அடுத்தவர்களுக்கு அனுப்பி துன்புறுத்துவதை தங்களது முக்கிய கடமையாகக்கொண்டுள்ளார்கள். காலையில் எழுந்து பல் துலக்குவதில் துவங்கி தூங்கப்போகும் வரை இந்த செல்பி அட்ராசிட்டி தொடர்கிறது. இதையே மையமாக வைத்து


வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படம்!
[Monday 2016-03-14 13:00]

கடந்த வாரம் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் காதலும் கடந்து போகும் பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் 3 நாட்களில் ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது.மாப்ள சிங்கம் 3 நாட்களில் ரூ 15 லட்சம் வசூல் செய்துள்ளது. இதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் சேதுபதி ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் உள்ளது.


என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பிற்கு முன்பு ரசிகர்களுக்கு கௌதம்-தனுஷின் சர்ப்ரைஸ் விருந்து!
[Monday 2016-03-14 13:00]

தனுஷ் கொடி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இரண்டே மாதத்தில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.இதற்கிடையில் கௌதம் திரைப்பிரபலங்களை பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்ச்சியை தன் யு-டியூப் சேனலில் தொடங்கவுள்ளார்.இதில் முதல் விருந்தினராக தனுஷ் கலந்துக்கொண்டதாக நாம் முன்பே கூறியிருந்தோம். இதில் இப்படத்தை பற்றி நிறைய பேசியுள்ளார்களாம். இந்த வீடியோ விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.


எனது மரணத்திற்குப் பிறகாவது உனது கோபத்தை விட்டு விடு: - மனைவிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த நடிகர் சாய் பிரசாந்த்
[Monday 2016-03-14 10:00]

தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், 'எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு' என்று தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய் பிரசாந்த். நேரம், வடகறி உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பிரபல சீரியல் நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: - அதிர்ச்சியில் திரையுலகினர்
[Monday 2016-03-14 09:00]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நான் எப்போது இப்படியெல்லாம் கூறினேன்: - மனம் திறந்த மடோனா
[Monday 2016-03-14 08:00]

ப்ரேமம் படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மடோனா. இவருக்கு கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிக ரசிகர்கள்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் படம் காதலும் கடந்து போகும். இந்நிலையில் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிப்பார் என கூறப்பட்டது.இதுக்குறித்து இவரிடம் கேட்கையில்


வழுக்கி வெண்டைக்காய் ஆகிப்போன த்ரிஷா.!
[Monday 2016-03-14 07:00]

விஜயகாந்தாவது ஒரு கூட்டணிக்கு முடிவு சொல்லிவிடுவார் போலிருக்கிறது - இந்த த்ரிஷா மாதிரி வெண்ணை வழுக்கி வெண்டைக்காய் ஒன்று இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு நொந்தகுமாரன் ஆகிவிட்டார் விக்னேஷ்சிவன்.


சாதனை படைத்த விஜய் சேதுபதி: - உற்சாகத்தில் ரசிகர்கள்
[Monday 2016-03-14 07:00]

விஜய் சேதுபதி தற்போது தன் திரைப்பயணத்தில் சரியான பாதையில் செல்கிறார். இவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட் வரிசை பிடித்து வருகின்றது.இந்நிலையில் இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மட்டுமே ஹிட் ஆனது, பின் வரிசையாக 5 படங்கள் தோல்வியை சந்தித்தது.தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார். இதனால், இவருடைய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.


பிரபல நடிகைகள் நடிக்கும் குறும்படம்!
[Monday 2016-03-14 07:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா. இவர்கள் மூவரும் ஒரே குறும்படத்தில் நடிக்கவுள்ளனர்.ஆனால், நீங்கள் நினைப்பது போல் சினிமா சார்ந்த குறும்படங்கள் இல்லை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி ஒரு குறும்படத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா, சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள கமல்!
[Monday 2016-03-14 07:00]

கமல்ஹாசன் தன் குருநாதர் பாலசந்தர் இயக்கத்தில் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தில் நட்பிற்காக நடிக்கவுள்ளார்.சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்க, பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


நான் எப்போதும் போலவே தான் இருக்கிறேன்: - சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த அஞ்சலி!
[Saturday 2016-03-12 15:00]

முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வளர்ந்து வரும் நேரத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினார் அஞ்சலி. இதை தொடர்ந்து மீண்டும் அப்பாடக்கர், மாப்ள சிங்கம், இறைவி என பிஸியாகிவிட்டார்.தற்போது இவர் முன்பு போல் இல்லை குண்டாகிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகின்றது. இதற்கு விளக்கம் அளித்த இவர்


கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலட்சுமியை பாராட்டிய குஷ்பு!
[Saturday 2016-03-12 15:00]

கலாபவன் மணியின் மரணம் சமீபத்தில் தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் தன் மகள் ஸ்ரீலட்சுமி மீது மிகுந்த அன்பு கொண்டவராம்.ஸ்ரீலட்சுமி தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். தன் தந்தை இறந்தும், சமீபத்தில் பொது தேர்விற்கு சென்று வந்துள்ளார்.இதை அறிந்த குஷ்பு ஸ்ரீலட்சுமிக்கு தன் பாராட்டையும், ஆறுதலையும் கூறியுள்ளார்.


வசூலை வாரி குவித்த விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும்!
[Saturday 2016-03-12 15:00]

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று காதலும் கடந்து போகும் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.இந்நிலையில் இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இது தான் முதல் நாளில் அதிக வசூலாம்.இப்படம் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்து விட்டதாம்.விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் இதற்கு முன் நானும் ரவுடி தான் படம் தான் இத்தனை பெரிய ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.


வங்கி கடன் கட்ட முடியாத விவசாயிக்கு ரூ 1 லட்சத்தை கொடுத்த கருணாகரன்!
[Saturday 2016-03-12 14:00]

பீட்சா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கருணாகரன். இவர் சமீபத்தில்


சிவகார்த்திகேயன் வேண்டாம் என ரஜினி கூறியது ஏன் தெரியுமா?
[Saturday 2016-03-12 14:00]

சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே ரஜினிமுருகன் என்று தன் படத்திற்கே தலைப்பு வைத்தார்.இந்நிலையில் கபாலி படத்தில் இளம் வயது ரஜினிக்கு அவரின் இளமை குரல் தேவைப்பட்டுள்ளது, சிவகார்த்திகேயன் அப்படியே ரஜினி மாதிரியே பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.சிவகார்த்திகேயனிடம் இதுப்பற்றி கூற, அவரும் சந்தோஷத்துடன் ஓகே சொல்ல, ஆனால், ரஞ்சித், ரஜினி இருவருக்குமே இவருடைய குரலில் ஒரு திருப்தி இல்லையாம். இதனால், மீண்டும் ரஜினி குரலுக்கு தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.


பொங்கலுக்கு மோத தயாராகும் அஜித் விஜய்!
[Saturday 2016-03-12 14:00]

ரஜினி, கமலை தவிர்த்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கு திருவிழா ஆகிவிடும்.இந்நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்திலும், அஜித் சிவா இயக்கத்திலும் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.இந்த இரண்டு படங்களுமே அடுத்த வருடம் பொங்கலுக்கு மோதவுள்ளதாக கூறப்படுகின்றது. கடைசியாக வீரம், ஜில்லா ஒரே நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


நோர்வே விருது விழா: - மிகப்பெரும் கௌரவம் பெறும் உலகநாயகன் கமல்ஹாசன்!
[Saturday 2016-03-12 14:00]

கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நோர்வே விருது விழா நடந்து வருகின்றது. 7வது ஆண்டான இந்த வருடம் மிகப்பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.இவ்விருது விழாவில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.விழாவில் மிகப்பெரும் கௌரவமாக உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் - தமிழர் விருதினையும், தலைசிறந்த "கலைச்சிகரம்- தமிழர் " விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.


நண்பர்களின் உணர்ச்சி போராட்டத்தை பிரதிபலிக்கும் தோழா...!
[Saturday 2016-03-12 13:00]

கார்த்தி-நாகர்ஜுன் முதன்முறையாக இணைந்து தமிழ்+தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளிவரவிருக்கும் படம் தோழா. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தியுடன் தமன்னா இணைவது கூடுதல் பலம். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்துள்ளது.பணத்திற்காக எதையும் செய்யும் கார்த்தி, (கிட்டத்தட்ட சிறுத்தை கார்த்தி) இவருக்கு தலை மட்டுமே அசையும் உடல் முழுவதும் செயல் இழந்து இருக்கும் நாகர்ஜுனாவை கவனிக்கும் பொறுப்பு வருகின்றது.ட்ரைலரை பார்க்கையில் முதலில் பணத்திற்காகவும், தமன்னாவிற்காகவும் இதற்கு சம்மதிக்கும் கார்த்தி, பிறகு எப்படி இவர்கள் நண்பர்கள் ஆனார்கள், தமன்னாவுடன் காதல் கலாட்டா என ஒரு Feel Good Movieயாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த தோழா ஒரு கலர்புல் விருந்து மட்டுமில்லாமல், நண்பர்களுக்குள் இருக்கும் அன்பையும் வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


பழைய தோற்றத்திற்கு மாறவுள்ள அஜித்!
[Friday 2016-03-11 18:00]

அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் இவர் சிவா இயக்கத்தில் தான் நடிக்கின்றார் என்பது 95% உறுதியாகிவிட்டது.இதை தொடர்ந்து இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கவுள்ளது.மேலும், இப்படத்திற்காக அஜித், பில்லா படத்தில் இருந்த தோற்றத்திற்கு மாறவுள்ளாராம். இதன் காரணமாக தற்போது ஜிம்மில் தான் முழு நேரமும் இருக்கின்றாராம்.


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரிலிஸ் தள்ளிப்போனாதா?
[Friday 2016-03-11 18:00]

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என கூறப்படுகின்றது.மேலும், இப்படம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளிவரவிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த வாரத்திலேயே சட்ட மன்ற தேர்தல் வருவது அனைவரும் அறிந்ததே.இதனால், படத்தை தேர்தல் முடிந்து ரிலிஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.


தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்!
[Friday 2016-03-11 18:00]

சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரணமான விஷயமாகி விட்டது.அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.அவ்வப்போது டுவிட்டர் பக்கம் தொடங்கியது முதலில் இருந்து தன் கருத்துக்களை பகிர்ந்து வந்த கமல்ஹாசன் இனி அடிக்கடி டுவிட்டர் பக்கம் வரமாட்டாராம்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்


பிரபல நடிகர் ரியாஸ் கான் மீது மர்ம நபர்கள் முட்டை வீச்சு!
[Friday 2016-03-11 18:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படுபவர் ரியாஸ் கான். ராஜு சம்பாகரா இயக்க இரண்டு மொழிகளில் தயாராகும் சின்ன தாதா என்ற இந்த படத்தில் ரியாஸ் கான் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ( மார்ச் 10 ) யாரோ ஒரு மர்ம நபர் படப்பிடிப்பில் இருந்த ரியாஸ் கான் மீது முட்டையை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.


முதன் முறையாக மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன்!
[Friday 2016-03-11 12:00]

சிவகார்த்திகேயன் தற்போது டாப்-5 ஹீரோ என்ற வட்டத்திற்கு வந்து விட்டார். இதுநாள் வரை பெரும்பாலும் அறிமுக இயக்குனர் படத்திலேயே தான் நடித்து வந்தார்.தற்போது முதன் முறையாக மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் முன்னணி இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்துள்ளார்.இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடக்க, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


தெறி படம் வரும் அதே நாளில் இது நம்ம ஆளு படமும் வரவிருக்கின்றதாம்!
[Friday 2016-03-11 09:00]

சிம்பு படம் எப்போது வரும் என அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவரின் அடுத்த படமான இது நம்ம ஆளு மார்ச் 25ம் தேதி வருவதாக இருந்தது.ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. மேலும், இதில் ஒரு பாடலுக்கு அடா ஷர்மாவை நடனமாட சிம்பு அழைத்தது குறிப்பிடத்தக்கது.தற்போது வந்த தகவலின்படி இது நம்ம ஆளு, தெறி படம் வரும் அதே தேதியில் தான் வரவிருக்கின்றதாம். ஏற்கனவே துப்பாக்கியுடன் போடா போடி வந்தது குறிப்பிடத்தக்கது.


நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம்!
[Friday 2016-03-11 09:00]

வெள்ளித்திரையில் பல படங்களிலும், சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்திருப்பவர் நடிகர் செல்வகுமார். இவர் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவரின் இந்த திடீர் மரணத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.


ராஜமௌலியின் கனவு படமான 'கருடா' படத்தின் ஹீரோ இவர்தானா?
[Friday 2016-03-11 09:00]

பாகுபலி படம் வெளியான பிறகு இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார் ராஜமௌலி. இப்போது பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திவரும் அவர், அதை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ராஜமௌலியின் கனவு படமான 'கருடா' பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன. சுமார் ரூ.1000 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதனால் அவர் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.ஆனால் இப்போது, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை கருடாவில் நடிக்க கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எது எப்படியோ, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.


விஜய் சேதுபதிக்கு பிடித்த நாயகி யார் தெரியுமா?
[Friday 2016-03-11 08:00]

மலையாள சினிமாவில் இளைஞர்களின் மனம் கவர்ந்த படம் பிரேமம். இப்படத்தில் நடித்த அனுபமா, சாய் பல்லவி, மடோனா என மூன்று நாயகிகளுக்கும் பலகோடி ரசிகர்கள்.இந்நிலையில் இந்த மூன்று நாயகிகளில் தனக்கு மலர் டீச்சரை ( சாய் பல்லவி ) பிடிக்கும் என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் விஜய் சேதுபதி. அவர்களுடைய பிம்பிள்சும், அவர்களது முடியும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


திருமண பந்தத்தில் இணைந்த சந்திரன் - விஜே அஞ்சனா!
[Thursday 2016-03-10 17:00]

கயல் பட நடிகர் சந்திரன் மற்றும் பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருக்கும் அஞ்சனா ஆகியோருக்கு சென்ற வருடம் நவம்பர் 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 10) காலை இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.Sales executiveவாக பணியாற்றி வந்த சந்திரன், அதே தொலைகாட்சியில் விஜேவாக இருந்த அஞ்சனாவுக்கும் நட்பாகி பின்னர் அது காதலாக மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் இருவர் வீட்டின் சம்மதத்துடன் இன்று திருமணம் நடந்துள்ளது.


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
[Thursday 2016-03-10 17:00]

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அனேகன். தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்த இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.இப்படத்திற்கு பிறகு கே.வி. ஆனந்த் யாரை அடுத்து இயக்குவார் என பல கேள்விகள் எழும்பின.இந்நிலையில் கே.வி.ஆனந்த் சொன்ன ஒரு கதை பிடித்துபோக அக்கதையில் நடிக்க ஒப்புக கொண்டுள்ளாராம் விஜய் சேதுபதி.ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா