Untitled Document
September 5, 2024 [GMT]
டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த விஜயதாரணி: - காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தும் செற்பட போவதாக அறிவிப்பு
[Thursday 2016-02-04 19:00]

டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, விஜயதாரணி சந்தித்து பேசினார்.இது குறித்து செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது:நான் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து செயல்படுவேன். வேறு கட்சியில் சேருவதற்காக யாரையும் நான் சந்திக்கவில்லை. மத்திய தலைமையின் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை விட்டு நான் விலக மாட்டேன்.இவ்வாறு விஜயதரணி கூறினார்.

-->

தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கண்டனம்!
[Thursday 2016-02-04 18:00]

உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணை செய்ய தலைமைச் செயலாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ஊழலுக்கு துணை போகிற நடவடிக்கையாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல், கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்கள் மீது எந்த லஞ்சப் புகார் வந்தாலும் அரசின் அனுமதி பெறாமல் வழக்கு தொடுக்க முடியாது என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள எந்த அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு தொடர அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது.


பிப்ரவரி 4 - ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள்:
[Thursday 2016-02-04 11:00]

ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டங்களை முன்னெடுக்கும் தொல்.திருமாவளவன் அறிக்கை

கடந்த 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கைக்கு விடுதலை வழங்கினார்கள். சுதந்திரத்தின் பெயரால் நடைபெற்ற அதிகாரக் கைமாற்றம் உண்மையில் சிங்களப் பேரினவாதிகளின் அரசையே நிறுவியது. இதன் மூலம் தமிழீழம் சிங்கள ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைத் தேசமாக்கப்பட்டதே இலங்கையின் சுதந்திர நாள்.


புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல்!
[Thursday 2016-02-04 11:00]

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்று பேர் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மன்சூர் என்பவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இரண்டு மீனவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உத்திரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டம்!
[Thursday 2016-02-04 07:00]

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியது.இந்த தேர்தலில், பரம எதிரிகளாக கருதப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலுக்காக திடீரென கூட்டணி அமைத்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க., பெற்ற அமோக வெற்றியை கருத்தில் கொண்டு நிதிஷ்குமார் இத்தகைய முடிவை எடுத்தார். இந்நிலையில், பீகார் மாநிலத்தை போல் உத்தரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


ஜிகா வைரஸ் பரப்பும் நோயை தடுக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் உள்ளது: - தமிழக அரசு
[Thursday 2016-02-04 07:00]

ஜிகா வைரஸ் பரப்பும் நோயை தடுக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஜிகா வைரஸ் நோய், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள், ஏடிஸ் வகை கொசுக்களால் பரப்பப்படுகிறது. ஜிகா வைரஸ் முதல் முதலில் 1947-ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. இந்த நோயின் தாக்கம் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் அதிகமாக உள்ளதால் உலக சுகாதார நிறுவனம்


கேரள அரசின் மீதான மக்களின் ஆதரவை நினைத்து எதிர்க்கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன: - உம்மன் சாண்டி
[Thursday 2016-02-04 07:00]

சோலார் பேனல் புகாரில் குற்றத்தை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, உண்மை நிச்சயம் வெளிவரும். கேரள மாநில மக்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள் என்று கூறினார். உம்மன் சாண்டி மீதான புகார்களை அடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனத்தை முன்வைப்பது குறித்து பேசிய உம்மன் சாண்டி, கேரள அரசின் மீதான மக்களின் ஆதரவை நினைத்து எதிர்க்கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன. அதனால்தான் இவ்வாறு விமரிசிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.


பிரபல நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மும்பையில் மனு தாக்கல்!
[Thursday 2016-02-04 07:00]

பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி நாட்டிய பள்ளி அமைக்க மும்பை புறநகர் ஒஷிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் ரூ.4 கோடி மதிப்பு கொண்டது. ஆனால் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.35 வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அவருக்கு எதிராகவும், மகாராஷ்டிர வருவாய்த் துறை அமைச்சருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் கேதான் திரிகோத்கர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் அமைச்சர் ஏக்நாத் கட்சே மீதும், ஹேமமாலினி மீதும் முறைகேடு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
[Wednesday 2016-02-03 22:00]

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.


காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் புதையுண்ட ராணுவ வீரர்கள்!
[Wednesday 2016-02-03 20:00]

காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கியவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் 22,000 அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ நிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலையாகும்.இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் இன்று காலை சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.


நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
[Wednesday 2016-02-03 14:00]

வாழும்கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹாலிவுட் நடிகர் சூசன், 85 வயதான கிரீஸ் பெண்மணி உள்ளிட்டவர்களோடு ரவி சங்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும்: - தி.வேல்முருகன்
[Wednesday 2016-02-03 12:00]

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில்,


சிசு பாலினத்தைக் கண்டறிய வேண்டும் என்று நான் கூறியது யோசனை மட்டுமே: - மேனகா காந்தி
[Wednesday 2016-02-03 08:00]

சிசு பாலினத்தைக் கண்டறிய வேண்டும் என்று நான் கூறியது யோசனை மட்டுமே; அமைச்சரவையின் பரிந்துரை அல்ல என்று மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி செவ்வாய்க்கிழமை கூறினார்.கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மேனகா காந்தி, ""பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கு, சிசுவின் பாலினத்தைப் பெற்றோர் கண்டறியும் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.


இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும்: - விஜயகாந்த்
[Wednesday 2016-02-03 07:00]

மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்ல பல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது: - பிரகாஷ் ஜாவடேகர்
[Wednesday 2016-02-03 07:00]

வரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தைத் தடுக்க முடியாது என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.கோவை கொடிசியா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், "தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இரு அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியான ஆட்சியையே வழங்கி வருகின்றன. இதனால், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது' என்றார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "நாட்டில் கடந்த 19 மாதங்களில் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4 கோடி வங்கிக் கணக்குகளே இருந்த நிலையில், மத்திய அரசின் முயற்சியால் இப்போது 20 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை மாற்றிய டாடா..!
[Wednesday 2016-02-03 07:00]

கொசு மூலம் பரவும் ஸீகா வைரஸ் தொற்றின் அபாயம் குறித்து சர்வதேச அளவிலான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், டாடா நிறுவனம், தனது புதிய காரின் பெயரை மாற்றியுள்ளது.பிரேஸிலில் ஸீகா வைரஸ் காரணமாக, கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழலில்,பாதிக்கப்பட்டவர்களுக்கான தமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை, டாடா மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.அதேசமயம் அந்த புதிய ரக காரின் பெயர் விவரங்களை டாடா வெளியிடவில்லை.


விவசாயிகளுடன் போராட்டக்களத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் இறங்கும்: - வைகோ எச்சரிக்கை
[Tuesday 2016-02-02 22:00]

மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் கெயில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொச்சியிலில் இந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க கெயில் நிறுவனம் சுமார் 1491ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை 5842 நில உரிமையாளர்களிடம் இருந்து பெற்றது.ஆனால், எரிவாயு குழாய்கள் பதிக்கும் போது விவசாய நிலங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தின் பெரும் பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினைப் பெற்றதால், விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. வேளாண் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுடன், அந்நிலங்களுக்கு வேளாண் கடன் அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.


பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்: - வெங்கையா நாயுடு
[Tuesday 2016-02-02 18:00]

மத்திய சுற்றுலா துறை மற்றும் புதுவை மாநில சுற்றுலா துறை சார்பில் முருங்கப்பாக்கம் கிராமத்தில் ரூ.5.32 கோடியில் 4.1 ஏக்கரில் கலை மற்றும் கைவினை கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முருங்கப்பாக்கத்தில் நடந்தது. சுற்றுலாத் துறை செயலர் மிகிர்வரதன் வரவேற்றார். கலை மற்றும் கைவினை கிராமத்தை திறந்து வைத்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:


தொழிலாளர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது: - பிரதமர் நரேந்திர மோடி
[Tuesday 2016-02-02 18:00]

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கல்நதுகொள்வதற்காக, இன்று மதியம் 02.40 மணிக்கு வந்தார். அவரை ஆளுநர் ரோசைய்யா, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து கோவையில் மத்திய அரசின் சார்பில் ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவுக்கு முன்னதாக ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடியை இந்திய தொழில் வர்த்தக சபையினர், சிறு துளி அமைப்பினர் , சி.ஐ.ஐ., டெக்ஸ்பிரனட் உள்ளிட்ட சங்கத்தினர் சந்தித்து பேசினர். மேலும் இந்த அமைப்பினர் , கோவையை ஸ்மார்ட் சிட்டி பட்டியில் சேர்த்தைமைக்கு நன்றி தெரிவித்தனர்.


ராமர், லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: - வழக்கறிஞரின் மனு கோர்ட்டில் தள்ளுபடி
[Tuesday 2016-02-02 17:00]

ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக புராணங்களில் காணப்படுகிறது. அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.இது, ஒருபுறமிருக்க, வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர், அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக


பேச்சுத்திறனை இழந்த இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது! - ஒடிசாவில் சம்பவம்!
[Tuesday 2016-02-02 14:00]

ஒடிசா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு அவரது தாயை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தின் ஜமாஜரி கிராமத்தை சேர்ந்த அந்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த அதே பகுதியை சேர்ந்த சுஜித் குமார் டெஹூரி(26) என்பவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


மக்கள் நல கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சி: - திருமாவளவன் அறிக்கை
[Tuesday 2016-02-02 13:00]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


உலகை உலுக்கும் ஜிகா இந்தியாவில் பரவும் அபாயம்! - சுகாதாரத் துறை விளக்கம்.
[Tuesday 2016-02-02 13:00]

ஜிகா வைரஸ் தொடர்பாக உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்கம் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது மத்திய அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் தாக்கி உள்ளது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ், பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்கினால் அதை கண்டறிவது கடினம் என்றும், அவ்வாறு வைரஸ் தாக்கப்பட்டு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும் பிறவிக் குறைபாடுடனும் பிறக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால், உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.


குழந்தையின் பாலின பரிசோதனை கட்டாயமாக்கப்படும்: - அமைச்சர் மேனகா காந்தி அறிவிப்பு
[Tuesday 2016-02-02 07:00]

கருவில் வளரும் குழந்தையின் பாலின பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்துகொண்டுப் பேசினார். அப்போது, கருவில் வளரும் குழந்தை ஆனா, பெண்ணா என்று அறியும் பாலின பரிசோதனையை கட்டாயமாக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், "இத்திட்டமானது மத்திய அமைச்சரவையின் முடிவின் கீழ் உள்ளது, இதன்மூலம் பெண்சிசு கொலை முயற்சியை எளிதான முறையில் கண்டுபிடிக்க முடியும்.


கடந்த 29 ஆண்டுகளாக தொல்லை தருகிறார் டோமின் தச்சங்கரி: - ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா குற்றஞ்சாட்டு
[Tuesday 2016-02-02 07:00]

கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி, கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார் என்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா குற்றஞ்சாட்டி உள்ளார். கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஸ்ரீலேகா (55), தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், போக்குவரத்து ஏ.டி.ஜி.பி. டோமின் தச்சங்கரி தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில், ''கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.


முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர்: - சரிதா நாயர் குற்றச்சாட்டு
[Tuesday 2016-02-02 07:00]

கேரளாவிலுள்ள பல முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர் என்று விசாரணை கமிஷன் முன் ஆஜரான சரிதா நாயர் கூறியுள்ளார். சரிதா நாயர் கடந்த வெள்ளியன்று, சூரிய ஒளி மின்தகடு மோசடி வழக்கில், சிவராஜன் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தபோது,


பிரியங்கா காந்தி சென்னைக்கு ரகசியமாக வந்து செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
[Tuesday 2016-02-02 07:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்னைக்கு திடீரென ரகசியமாக வந்து செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பின்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாக காந்தி பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது மகன் ராகுல்காந்தி துணை தலைவராக உள்ளார். மகள் பிரியங்கா காந்தி கட்சி பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறுவது வழக்கம். மேலும் தேர்தல் நேரத்தில் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக தமிழகத்துக்கு வர உள்ளனர். இந்நிலையில், இன்று திடீரென பிரியங்கா காந்தி கட்சியினருக்கு கூட தெரியாமல் சென்னைக்கு தனி விமானத்தில் இன்று ரகசியமாக வந்து செல்கிறார்.


மும்பை கடலில் மூழ்கி 14 மாணவ-மாணவிகள் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்
[Monday 2016-02-01 19:00]

மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ, மாணவிகள் 14 பேர் பலியானார்கள். கடலில் மூழ்கி மாணவர்களை மீட்க, கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். மாணவ, மாணவிகளுடன் 11 பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் கடலில் குளிக்க விரும்பினார்கள். ஆனால் அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. இதன் காரணமாக மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மாணவ, மாணவிகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா