|
|
மதுவிலக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வரும் குமரி அனந்தன் மயங்கி விழுந்தார்!
[Tuesday 2016-02-09 18:00]
|
மதுவிலக்கை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று திருநெல்வேலி அருகே மயங்கி விழுந்தார்மதுவிலக்கை வலியுறுத்தி காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் தலைமையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த யாத்திரையை பிப்ரவரி 12 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் வந்த குமரி அனந்தன் குழுவினர் இன்று காலை பானாங்குளம் அருகே பாத யாத்திரையை தொடங்கினர். சிறிது தூரம் சென்ற நிலையில், குமரி அனந்தனுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.இதையடுத்து அவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
|
|
|
மோப்ப நாய்களின் உதவியுடன் பனிச்சரிவிலிருந்து ராணுவ வீரர் உயிருடன் மீட்பு !
[Tuesday 2016-02-09 07:00]
|
காஷ்மீர் மாநிலத்தில் சியாச்சின் மலைப் பகுதியில் பனிச்சரிவில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு சிக்கிய 10 வீரர்களில் ஒருவர் நேற்று இரவு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும், அப்பகுதியிலிருந்து 5 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஓர் இளநிலை அதிகாரியும், 9 வீரர்களும் காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையையொட்டி இருந்த சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 19,000 அடி உயரத்தில் இருந்த அந்தச் சாவடி, அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, புதையுண்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்பதற்காக அதிநவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பல்வேறு ராணுவக் குழுவினர் இரு தினங்களாக தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
|
|
|
அவசரகால முதலுதவிக்கான இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் துவக்கி வைத்தார்:
[Tuesday 2016-02-09 07:00]
|
சென்னை தலைமைச் செயலகத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.இன்று துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது.
|
|
|
சுமார் 345 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மணிக்கூண்டு அமைக்கப்படவுள்ளது!
[Tuesday 2016-02-09 07:00]
|
உலகிலேயே மிகப்பெரிய மணிக்கூண்டாக பிரிட்டனின் பர்மிங்ஹாமில் உள்ள ஓல்ட் ஜோ (100 மீ) மற்றும் லண்டனில் 96 மீட்டர் உயர பிக்பென் மணிக்கூண்டு கருதப்படுகிறது. இவற்றை மிஞ்சும் வகையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்போசிஸ் நிறுவனம் தரப்பில் 135 மீட்டர் உயரத்தில் மிக உயரமான மணிக்கூண்டு அமைக்கப்பட உள்ளது. சுமார் 345 ஏக்கர் பரப்பளவில், 22-22 மீட்டர் அடித்தளத்தில் கோதிக் ஸ்டைல் முறையில், ரூ. 60 கோடி மதிப்பீட்டில் சுமார் 20 மாதங்களில் மணிக்கூண்டு அமைக்க திட்டமிடப்பட உள்ளது.
|
|
|
முன்று மாணவிகள் மரண பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
[Monday 2016-02-08 20:00]
|
விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து குரல் கொடுத்துவந்த அதே கல்லூரியில் 2
|
|
|
வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது: - சிவசேனா குற்றசாட்டு
[Monday 2016-02-08 17:00]
|
இஸ்லாமிய மாநிலமாக உத்தரபிரதேசம் மாறி வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 'லக்னோ மஹோற்சவம்
|
|
|
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நடிகர் சிரஞ்சீவியை கைது செய்த போலீசார்!
[Monday 2016-02-08 17:00]
|
ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் சிரஞ்சீவியை கைது செய்த போலீசாருக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரசாரும், சிரஞ்சீவியின் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காபு சமூக தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் காபு சமூக மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த போராட்டம் மெல்லமெல்ல பல மாவட்டங்களுக்கு பரவி வருகிறது. இட ஒதுக்கீடுக்காக ஏற்கனவே 2 பேர் பலியாகி உள்ளனர். சில இடங்களில் இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
|
|
|
மணமக்களின் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டுவதா...? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
[Monday 2016-02-08 17:00]
|
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
|
|
|
தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலி! - உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்
[Monday 2016-02-08 17:00]
|
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் நடத்திய தேர்தல் வெற்றிவிழா ஊர்வலத்தில் உற்சாகமிகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்வந்தர்களின் திருமண விழாவில் சிலர் உற்சாகமிகுதியில் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் தேர்தல் முடிவுகள் வெளியாகி தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக தெரியவரும் வேளையிலும் உற்சாகமிகுதியில் துப்பாக்கியால் சுடுவது இங்கு வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், இங்குள்ள ஷாம்லி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நபீசா என்ற சமாஜ்வாதி கட்சி வேட்பாளரின் வெற்றியை கொண்டாடும் வகையில் கைரானா நகரின் வழியாக அக்கட்சியினர் ஆரவாரத்துடன் நேற்று ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
|
|
|
கடலூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: - அலறியடித்து ஓடி வந்த மாணவிகளின் பெற்றோர்கள்
[Monday 2016-02-08 16:00]
|
கடலூர் கடற்கரை சாலையில் சி.கே. மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதே நிர்வாகத்துக்கு சொந்தமான கல்லூரி செல்லாங்குப்பத்தல் செயல்படுகிறது.இன்று காலை 7.45 மணிக்கு சி.கே. மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு போன் வந்தது. பள்ளி காவலாளி ராஜேந்திரன் அதை எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசியவர் உங்கள் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறினார்.10 நிமிடம் கழித்து மீண்டும் போன் வந்தது. அதில் பேசியவர் இன்னும் சில நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
|
|
|
ஒன்லைனில் மருந்து பொருட்களை வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் எப்.டி.ஏ.
[Monday 2016-02-08 09:00]
|
ஒன்லைனில் சட்டவிரோதமாக மருந்து பொருட்கள் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் விதிமுறைப்படி டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஒன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து உணவு மற்றும் மருந்து கழக (எப்.டி.ஏ.) அதிகாரி பி.ஆர். மாசல் கூறியதாவது:- ஒன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. எனவே பொது மக்கள் ஒன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்
|
|
|
பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்தை இணைக்க முயற்சி!
[Monday 2016-02-08 09:00]
|
தமிழக சட்டசபைக்கு மே மாதம் இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வருகிற 11, 12
|
|
|
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்!
[Monday 2016-02-08 09:00]
|
ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் மூன்று நதிகளும் சங்கமிக்கும் புகழ்மிக்க இடமாக உள்ளது. காவிரி ஆறு, பவானி ஆறு, அமுத நதி ஆகிய 3 நதிகளும் இங்கே ஒருங்கே சங்கமித்து பிறகு ஒன்றுபட்ட காவிரி ஆறாக பாய்ந்து செல்கிறது.
ஒவ்வொரு அமாவாசை யன்றும் பவானி கூடுதுறையில் மக்கள் குவிவது வழக்கம். பொதுவாக ஆடி மற்றும் தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.இதேபோல் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறையில் குவிந்தனர். அவர்கள் கூடுதுறையில் புனித நீராடினர்.
|
|
|
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி குருக்கள் உட்பட 4 பேர் பலி!
[Monday 2016-02-08 09:00]
|
இன்று தை அமாவாசை, திருவோண நட்சத்திரம், சோமவரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வருவது சிறப்பு அம்சமாகும்
இந்த விசேஷம் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன்னுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் தீர்த்தவாரி விழாவுக்காக சாமிகள் திட்டி வாயில் வழியாக கோவில் அருகே உள்ள அய்யங்குளத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தி மற்றும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து அங்காளம்மன், ரெட்டைக்காளியம்மன், காமாட்சியம்மன், பட்டையம்மன், வடவீதி முருகன் ஆகிய சாமிகள் தீர்த்தவாரிக்காக அய்யங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
|
|
|
புதிய அரசியலமைப்புச் சட்டம் - ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி: - வீரமணி
[Sunday 2016-02-07 22:00]
|
இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் ஈழத் தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெப்ரவரி 2-ல், இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் 1948 ஆம் ஆண்டு, இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை இலங்கையின் ஆளுனராக இருந்த ஜெனரல் சோல்பரி தலைமையில் அமைந்த ஆணையம் உருவாக்கியது. இதில் சிங்களவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் சட்டம் வலுப்படுத்தப்பட்டது. இதே சோல்பரியே, தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்து விட்டேன் என்று பிற்காலத்தில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
ஒரே மாதத்தில் 95.27 லட்சம் பக்தர்களுக்கு லட்டு - அன்னபிரசாதம்: - திருப்பதி ஏழுமலையான் சாதனை
[Sunday 2016-02-07 19:00]
|
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் 95.27 லட்சம் பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 லட்சத்து, 53 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு 76.86 லட்சம் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், 16.6 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது. 7.6 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். 7 ஆயிரம் தங்கும் அறைகளில் 95 சதவீதம் அறைகள் பயன்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 லட்சத்து, 61 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
|
|
|
படிக்க விரும்பி திருமணத்துக்கு மறுத்த மகளை எரித்து கொன்றார் தந்தை!
[Sunday 2016-02-07 19:00]
|
படிக்க விரும்பி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த 16 வயது மகளை, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொண்டு எரித்துக் கொன்றுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பெண்கள் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்புக்கும் மத்திய அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனாலும், பல மாநிலங்களில் பெண் குழந்தைகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக பீகார் மாநிலத்தில் ஒரு சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கோர முடிவு அமைந்துள்ளது.
|
|
|
இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்: - குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் இவை
[Sunday 2016-02-07 08:00]
|
டெல்லியை சேர்ந்த வேத் பால் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தகவல்கள் பின்வருமாறு - 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மேப்பிங் ஆய்வின்படி இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில், 19 சதவீதம் பேர் பதிவு செய்யப்படாத பாலியல் தொழிலாளர்கள். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தகவலின் படி 6.96 லட்சம் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எனினும், இந்த தகவல் லைன் லிஸ்டிங் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்களாகும். புதிய பதிவுகளுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவை.
|
|
|
தன்னுடன் பலாத்காரமாக பாலியல் உறவு கொண்டவர்களின் தகவல்களை வெளியிட்டார் சரிதா நாயர்!
[Saturday 2016-02-06 19:00]
|
சோலார் விசாரணை கமிஷனில் ஆஜராகி வரும் சரிதா நாயர் தினமும் பல்வேறு அதிரடி விவரங்களை வௌியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆரியாடன் முகமதிற்கு ரூ.40 லட்சமும் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியலை சோலார் விசாரணை கமிஷனிடம் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
இதன்படி நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரான அவர், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது சனிக்கிழமை (இன்று) மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார்.
|
|
|
ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்!
தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! -
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
[Saturday 2016-02-06 19:00]
|
தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது. இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் தலித்துகள் சந்தேகமான முறையில் மரணமடைவதாகவும், அதில் 45 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை வழக்குகள் சிலவற்றைப் புலனாய்வு செய்தபோது அவை தூண்டுதலின்பேரில் செய்துகொள்ளப்பட்ட தற்கொலைகள் என்பதும், சில வழக்குகளில் கொலைகள் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, சந்தேக மரண வழக்குகள் அனைத்தையும் தீவிரமாகப் புலனாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது: - சரத்பவார் பரபரப்பு செய்தி
[Saturday 2016-02-06 14:00]
|
பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார் கூறியதாவது - பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது தீங்கு விளைவிப்பதால், இது மிகவும் ஆபத்து நிறைந்தது. சமுதாயத்தில் நஞ்சை பரப்புவதற்காக, இது இளைஞர்களின் மனதில் கெடுதியை விதைக்கும் செயல் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால், எழுத்தாளர்கள் இது தொடர்பாக கட்டுரை எழுத வேண்டும். விவாதங்களும் அரங்கேற வேண்டும்.சிவாஜி மகாராஜா முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. தன்னுடைய படையில் அவர் முஸ்லிம்களை முக்கியமான இடத்தில் வைத்திருந்தார். ஆகையால், இதுபோல் வரலாற்றை திரித்து கூறுவது மதச்சார்பற்ற நாட்டுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லது அல்ல
|
|
|
100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருதினை வழங்கிய அருண் ஜெட்லி!
[Saturday 2016-02-06 13:00]
|
100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருதினை மத்திய மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகவும், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முறையில், உடல் உழைப்பினைத் தரவல்ல ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் சராசரியாக 100 நாட்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2006-ம் ஆண்டு முதல், இத்திட்டத்தினை செயலாக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. தொழிலாளர் மதிப்பீடு, பெண்கள் பங்கேற்பு, ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் போன்றவற்றில், தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 37.29 கோடி மனித சக்தி நாட்கள் என்ற இலக்கீடு இந்தியாவிலேயே அதிகம் ஆகும்.
|
|
|
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
[Saturday 2016-02-06 07:00]
|
கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் அரசுப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தலைமை ஆசிரியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சீதப்பாலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 16 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு ஆசாரிப்பள்ளம் பள்ளவிளையைச் சேர்ந்த சுப்பையன் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவர் இங்கு 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
|
|
|
வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்! - நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி யோசனை
[Saturday 2016-02-06 07:00]
|
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்,
|
|
|
ராகுலை தமிழக முதல்வராக்க வேண்டும் என கூறுவது மிகப்பெரிய தமாஷ்: - கிண்டலடித்த பொன். ராதாகிருஷ்ணன்
[Saturday 2016-02-06 07:00]
|
ராகுலை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ பதவி கூட கிடைக்காது. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
|
|
|
கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள கைகடிகாரம் 10 லட்சம் ரூபாய் பெறுமதி!
[Saturday 2016-02-06 07:00]
|
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு சுத்துார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிருபர்கள் அவரிடம், 'முன்னாள் முதல்வர் குமாரசாமி, நீங்கள் அணிந்துள்ள கைக்கடிகாரம், 10 லட்சம் ரூபாய், கண்ணாடி, 50 ஆயிரம் ரூபாய் என்று கூறியுள்ளாரே' என, கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான முதல்வர் சித்தராமையா, தன் கையில் கட்டியிருந்த வாட்சையும், கண்ணாடியையும் உடனடியாக கழற்றி வைத்து விட்டு,
|
|
|
பிரபல பாடகி ஷான் - வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்!
[Saturday 2016-02-06 07:00]
|
சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற பிரபல பின்னணி பாடகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜோன்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். இவரது மகளான ஷான் (வயது 31) திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் ஷான் பாடியுள்ளார்.
|
|
|
ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில் சென்னை முதலிடம் வகிக்கிறது.
[Saturday 2016-02-06 07:00]
|
காய், கனிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில், இந்திய பெருநகரங்களில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சர்வதேச பொருளாதார உறவுகள் மீதான, இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூரை சேர்ந்த, இந்திய மேலாண்மை கல்வி மையம் நடத்திய ஆய்வு அறிக்கை விவரம் கீழ்வருமாறு:
|
|
|
|