Untitled Document
September 28, 2024 [GMT]
 
அஜித்தின் பிறந்த நாளன்று புதிய படத்தை வெளியிடவுள்ள ஜி.வி.பிரகாஷ்!
[Thursday 2016-03-10 15:00]

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது விஜய்யின் தெறி படத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அது 50வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். மேலும் அவர் இசையமைப்பது மட்டுமின்றி நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.


சேரனின் சி2எச் நிறுவனத்தின் மீது செக் மோசடி வழக்கு!
[Thursday 2016-03-10 15:00]

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அதோடு இவர் நடித்த படங்கள் சிலவற்றையும் யாராலும் முடியாது. இந்நிலையில், சேரனின் சி2எச் நிறுவனத்தின் மீது இராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர் பழனியப்பன் செக் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.செக் மோசடி வழக்கில் சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பிச்சைக்காரன் படத்தை தடை செய்ய வேண்டும்: - அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் மனு!
[Thursday 2016-03-10 15:00]

விஜய் ஆன்டணி நடிப்பில் வெளியாகி பிச்சைக்காரன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர். இந்நிலையில் அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.அதில் புனிதமாக மதிக்கும் காயத்ரி மந்திரம் வன்முறை காட்சிகளுக்கு பின்னணி இசையாக பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, பிச்சைக்காரர்கள் போல இழிவாக பேசும் காட்சிகளும், பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ளது. அதனால் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆடியோ வெளியீடு!
[Thursday 2016-03-10 14:00]

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ரசிகர்களிடையே நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கௌதம் மேனன், சிம்பு இணைந்திருப்பதால் விண்ணைத்தாண்டி வருவாயா பட மேஜிக் இப்படத்திலும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். படத்தின் தள்ளிப் போகாதே பாடல் இப்போது பலரின் ரிங்டோன்.தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரே நாளில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார் கௌதம் மேனன். அதோடு ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


புதிய அவதாரம் எடுக்கும் இயக்குனர் அட்லீ!
[Thursday 2016-03-10 07:00]

சங்கிலி புங்கிலி கதவ தொர இது ஒரு குத்து பாடலின் வரிகள். தற்போது இந்த வரிகளின் பெயரில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது.புதுமுக இயக்குனர் இயக்க இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா ஜோடிகளாக நடிக்க இருக்கின்றனர். அதோடு A for Apple என்ற தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் அட்லீ.இப்படத்தில் இயக்குனர் அட்லீ ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. இதனை அட்லீயே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


யாரும் எதிர்ப்பார்க்காத பிரபல இயக்குனருடன் அதர்வா!
[Thursday 2016-03-10 07:00]

ஈட்டி, கணிதன் போன்ற தரமான படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளார் அதர்வா. இவர் அடுத்து பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.இந்நிலையில் இவர் இப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மணிரத்னம், கார்த்தி, சாய் பல்லவி படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இப்படம் பற்றி அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.மணிரத்னம் தமிழ் சினிமாவில் முரளி நடித்த பகல் நிலவு என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.


பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 ரெடி: - ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம்?
[Thursday 2016-03-10 07:00]

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தில் இவருடன் நடிகர் விமலும் இணைந்து நடித்திருந்தார்.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாண்டிராஜ் ரெடியாகிவிட்டார். மீண்டும் சிவகார்த்திகேயன் தான் கலக்குவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.ஏனெனில் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவது சிவகார்த்திகேயன் இல்லை, ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோ. மேலும், இதில் சத்யராஜ், ராஜ்கிரன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.


நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது!
[Wednesday 2016-03-09 19:00]

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கின்னஸ் சாதனை படைக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் நகத்திற்கு பாலிஷ் போடுவது தான் அந்த நிகழ்ச்சி. Buy Tickets நகத்திற்கு பாலிஷ் போடும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் கலந்து கொண்டு தனது நகத்திற்கு பாலிஷ் போட்டார். ஒரு இடத்தில் ஏராளமான பெண்கள் ஒரே சமயத்தில் நகத்திற்கு பாலிஷ் போட்டதற்கான கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.


மகளீர் தினத்தில் இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசனின் வீடியோ!
[Wednesday 2016-03-09 17:00]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்து விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் பாலிவுட் படமான ராக்கி ஹாண்ட்சம் வெளிவரவுள்ளது.இப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் ஒரு ஸ்பெஷல் ஆல்பம் ரெடி செய்துள்ளார்.இதன் முன்னோட்டம் தற்போது ஐ-டியூனில் மட்டும் வெளிவந்துள்ளது, இந்த டீசர் இணையத்தையே கலக்கி வருகின்றது. தற்போது எல்லோரின் ஆர்வமும் இதன் முழு ஆல்பம் எப்போது பார்ப்போம் என்பது தான்.


எல்லாம் அஜித்தின் மேஜிக் தான்: - விவேக் புகழாரம்
[Wednesday 2016-03-09 16:00]

அஜித், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் விரும்பும் நடிகர். அதிலும் அஜித்தின் ஆரம்ப காலத்திலிருந்து அவருடன் பயணிப்பவர் விவேக்.இவர் அஜித்துடன் கிட்டத்தட்ட 10 படங்கள் இணைந்து நடித்துள்ளார். மேலும், தற்போது இவர் சால்ட்&பெப்பர் லுக்கில் உள்ளார்.மேலும், அஜித் ஒரு ட்ரண்ட் செட்டர் எனவும் தெரிவித்துள்ளார்.


விஜய்க்காக சூப்பர் ஸ்டார் ரஜினி சம்மதிப்பாரா..?
[Wednesday 2016-03-09 16:00]

தமிழ் சினிமாவில் இன்று பலரும் விரும்பும் பட்டம் சூப்பர் ஸ்டார் தான். ஆனால், இன்றும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்காது சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த்.இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்டார் ரேஸில் முன்னணியில் இருக்கும் விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20 தேதி நடக்கவுள்ளது. இப்படம் மட்டுமின்றி கபாலி படத்தையும் கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரித்துள்ளார்.இதனால் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியை மரியாதை நிமித்தமாக அழைக்க, அவர் வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


சண்டைக் காட்சிகளில் நடிக்க மறுத்த தனுஷ்: - ஏன் தெரியுமா..?
[Wednesday 2016-03-09 16:00]

தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த தங்கமகன் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், தன் அடுத்த படமான கொடி அதிரடிப்படமாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.அதே நேரத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இருக்க கூடாது என கூறிவிட்டாராம்.ஏனெனில் தற்போதுள்ள ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை ஏமாற்ற முடியாது, அதனால், இனி ரோப் கட்டி பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என கூறியுள்ளார்.


மக்கள் இயக்கம் சார்பாக யாரும் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க கூடாது: - ரசிகர்களுக்கு விஜய் கடும் உத்தரவு
[Wednesday 2016-03-09 16:00]

விஜய் தற்போது தெறி படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார். கடந்த முறை புலி படத்திற்கு ஏற்பட்ட தடங்கல் போல் இந்த முறை ஏதும் ஆகக்கூடாது என கவனமாக உள்ளார்.இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் தன் மக்கள் இயக்கம் சார்பாக யாரும் எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார்.ஏனெனில், ஒரு சிலர் குழுக்களாக பிரிந்து விஜய் பேரை சொல்லி அரசியல் செய்வதாக அவருக்கு தெரியவந்துள்ளது, இதனால் தான் இந்த உத்தரவு என தெரிகின்றது.


நடிகர் தனுஷை மட்டும் நேரில் பார்த்தால் என்ன செய்வேன் தெரியுமா? - ஜாக்குலின் கலக்கல் பதில்
[Wednesday 2016-03-09 16:00]

சின்னத்திரையில் தற்போது தொகுப்பாளராக கலக்கி வருபவர் ஜாக்குலின். இவரை ஒரு ஷோவில் கலாய்க்காதவர்கள் யாரும் இல்லை, இருந்தாலும் அசராமல் இவர் செய்யும் கலாட்டாவை ரசிக்காதவரும் யாரும் இல்லை.இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க,


இளைஞர்களின் முயற்சிக்கு உதவிய சிம்பு!
[Wednesday 2016-03-09 16:00]

சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் வேறு ஒரு நடிகரின் படங்களின் ட்ரைலர், போஸ்டர் என வெளியிடுவார். இதில் எந்த ஈகோவும் அவருக்கு இல்லை.இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்து அனைவரையும் கவர்ந்த படம் ராஜதந்திரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது.இதன் 6 நிமிட காட்சிகள் மட்டும் முதலில் வெளியிடவிருக்கின்றார்களாம், இது தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி என பலராலும் பாராட்டப்படுகின்றது.இந்த 6 நிமிட காட்சியை சிம்பு சமீபத்தில் பார்த்து தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


கோலிவுட் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
[Wednesday 2016-03-09 07:00]

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள் தான் ரூ 20 கோடி வரை சம்பளம் பெறுவார்கள். ஹீரோயின்கள் கோடியை தொட பல வருடம் ஆகும்.அந்த வகையில் தற்போது கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். இவர் ஒரு படத்திற்கு ரூ 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.இதற்கு அடுத்த இடத்தில் அனுஷ்கா, ஸ்ருதி ரூ 1.5 கோடி, காஜல், ஹன்சிகா, தமன்னா ஆகியோர் ரூ 75 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர்.த்ரிஷா குறைந்தது ரூ 75 லட்சம் வரை பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


நான்கு ஹீரோக்களுடன் சடிக்க நயன்தாரா துணிந்து எடுத்த முடிவு! - ஆச்சரியத்தில் கோலிவுட்
[Wednesday 2016-03-09 07:00]

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்நிலையில் இவர் அடுத்து மாயா சாயலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மாயா படத்திலாவது ஆரியை சில பேருக்காவது தெரியும். ஆனால், தற்போது நடிக்கவிருக்கும் படத்தில் 4 இளைஞர்கள் ஹீரோவாக நடிக்க, அனைவருமே புதுமுகங்கள் தானாம். பெரிய நடிகர்கள் என்று பார்க்காமல் தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பேன் என நயன்தாரா துணிந்து முடிவு எடுத்துள்ளாராம்.


ஹீரோயின் வேட்டையில் முதல் டிக் அடிக்கப்பட்ட காஜல்! - சர்ச்சையில் சிக்குவாரா?
[Wednesday 2016-03-09 07:00]

சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹீரோயின்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால், அந்த சர்ச்சை தந்த தளும்புகளை வைத்தே திரைத்துறையில் உச்சத்தையும் தொட்டு விடுவார்கள். அந்த வகையில் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவை இயக்கும் படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடந்து வருகிறது. இதில் முதல் பெயராக காஜல் அகர்வால் பெயரைத் தான் டிக் அடித்து வைத்திருக்கிறார்களாம். உறுதியாக இந்தப்படத்தில் நடிப்பது அவர் தான் என்கிறது படக்குழு. என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறதோ?


நான் சிம்புவை காதலிக்கவே இல்லை: - வெறும் வதந்தி என்கிறார் ஹன்சிகா
[Wednesday 2016-03-09 00:00]

வாலு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கிளப்பில் சேர்ந்து இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளிவந்தது.எல்லோரும் எதிர்ப்பார்த்தது படி இந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால், ஹன்சிகா சமீபத்தில்


மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள அஜித்!
[Wednesday 2016-03-09 00:00]

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல வதந்திகள் சென்றது. இதில் பலரும் கூறியது மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று தான்.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவா இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பல தடைகளை தாண்டி திரைக்கு வரும் மாப்ள சிங்கம்!
[Tuesday 2016-03-08 19:00]

விமல் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாப்ள சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக 3வது முறையாக அஞ்சலி நடித்துள்ளார்.இப்படம் பல தடைகளை தாண்டி இந்த வாரம் வெளிவரவுள்ளது, நீண்ட நாட்களாக பலரும் இப்படத்தை எதிர்ப்பார்க்கையில், ரசிகர்களின் ஆவலை சற்றும் ஏமாற்றாதம் இந்த மாப்பிள்ளை சிங்கம்.விமலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் களவாணி அரிக்கையை எத்தனை பேருக்கு பிடிக்குமோ, அதை விட அதிகமானோருக்கு இந்த மாப்பிள்ளை சிங்கத்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.


புது முக கதாநாயகர்களுடன் நயன்தாரா: - ஆச்சரியத்தில் கோலிவுட்
[Tuesday 2016-03-08 19:00]

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.இந்நிலையில் இவர் அடுத்து மாயா சாயலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மாயா படத்திலாவது ஆரியை சில பேருக்காவது தெரியும்.ஆனால், தற்போது நடிக்கவிருக்கும் படத்தில் 4 இளைஞர்கள் ஹீரோவாக நடிக்க, அனைவருமே புதுமுகங்கள் தானாம். பெரிய நடிகர்கள் என்று பார்க்காமல் தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பேன் என நயன்தாரா துணிந்து முடிவு எடுத்துள்ளாராம்.


சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை!
[Tuesday 2016-03-08 19:00]

சிம்புவுடன் நடிக்கும் ஹீரோயின்கள் பலரும் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், அதையே வைத்து திரைத்துறையில் உச்சத்தையும் தொட்டு விடுவார்கள்.அந்த வகையில் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவை இயக்கும் படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடந்து வருகின்றது.இதில் முதல் ஆளாக காஜல் அகர்வால் பெயர் தான் அடிப்படுகின்றதாம். 90% இவர் தான் நடிப்பார் என கூறுப்படுகின்றது.


மீண்டும் மிருதன் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி!
[Tuesday 2016-03-08 19:00]

தொடர் வெற்றிகளால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் ஜெயம் ரவி. மிருதன் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை.இந்நிலையில் மிருதன் படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுடனே தான் ஜெயம் ரவி மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார்.சோம்பி என்ற புது ட்ரண்டை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்ததன் மூலம், மீண்டும் இந்த படத்திலும் ஒரு புதிய கதைக்களத்தை தொடவுள்ளார்களாம்.


ரஜினிக்கு வந்த சோதனை: - ரசிகர்கள் கோபம்
[Tuesday 2016-03-08 15:00]

சூப்பர் ஸ்டார் பார்வை முழுவதும் தற்போது கபாலி படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை எப்படியாவது விரைவில் ரிலிஸ் செய்யவேண்டும் என்பதே இவரின் நோக்கம்.இந்நிலையில் லிங்கா படத்தின் போது இது என் படத்தின் கதை என்று ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர்கள் அனைவரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இச்செய்தி ரஜினி ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளக்கியுள்ளது.


என்னை எல்லோரும் தல பொண்ணு என்று தான் கூப்பிடுகிறார்கள்: - பேபி அனிகா பேட்டி
[Tuesday 2016-03-08 15:00]

என்னை அறிந்தால், மாயா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. இவர் மலையாளத்தில் நயன்தாரவின் மகளாக பாஸ்கர் தி ராஸ்கர் படத்திலும் நடித்திருந்தார்.சமீபத்தில் வெளிவந்த மிருதன் படத்தில் கூட இவருடைய நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த சுட்டி ஒரு பேட்டியில்


சின்னத்திரை ஜோடி இனி வெள்ளித்திரையில்!
[Tuesday 2016-03-08 15:00]

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஆபிஸ் சீரியல் மிகவும் பேமஸ். இந்த சீரியலில் ஹீரோ-ஹீரோயினை விட அவர்கள் நண்பர்களாக வரும் விஷ்ணு-லட்சுமிக்கு தான் அதிக ரசிகர்கள்.இந்நிலையில் இவர்கள் இருவருமே தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து விட்டனர்.இந்த வாரம் வெளிவரவிருக்கும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் இவர்கள் இருவரும் நடித்துள்ளார்களாம். சின்னத்திரை ஜோடி தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கவுள்ளது.


மற்றவர்களை சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்: - கலாபவன் மணி மறைவு குறித்து நடிகை மஞ்சு வாரியார்
[Tuesday 2016-03-08 14:00]

இத்தனை காலமும் தன்னை சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருந்த மணி சேட்டன், முதன் முறையாக கண்ணீர் சிந்த வைத்ததாக மறைந்த நடிகர் கலாபவன் மணி குறித்து மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.கலாபவன் மணி குறித்து சோஷியல் மீடியாக்களில் மஞ்சு வாரியார் கூறியிருப்பதாவது:அப்போதெல்லாம் மணி சேட்டனை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 'சல்லாபம் ' படத்தின் போது எனதருகே வந்து உட்கார்ந்தார். என்னை பார்த்தார். நானும் பார்த்தேன். அவர் வாயில் இருந்து ''தங்கபஷ்ம் குறியிட்ட தம்பிராட்டி'' என்ற பாடல் முணுக்க முணுக்க ஆரம்பித்தது. அப்படித்தான் எனக்கும் அவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதற்கு முன், அவரது கிராமிய பாடல்களை கேட்டுள்ளேன். எனது அப்பாவும் அம்மாவும் அவரது பரம விசிறிகள். மணி சேட்டன் செட்டில் இருந்தால் நான் சிரித்துக் கொண்டேதான் இருப்பேன். என்னுடன் அவர் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.


கேரளாவில் அரசு மரியாதையுடன் நடந்த கலாபவன் மணி இறுதி யாத்திரை:
[Tuesday 2016-03-08 09:00]

கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருந்த மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டதால் நேற்று காலை அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் மதியம் 11.30 மணி அளவில் திருச்சூரில் உள்ள கேரளா சங்கீத நாடக அகாடமிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடிகர்கள் ஜெயராம், முகேஷ், சீனியர் நடிகை கே.பி.ஏ.சி லலிதா உள்ளிட்ட பலர் தங்களது இறுதி மரியாதையை கலாபவன் மணிக்கு செலுத்தினார்கள். அதன்பின் 1.30 மணி அளவில் அவரது உடல் சாலக்குடி முனிசிபல் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரளாவில் பல பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வரிசையில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் சாலக்குடி அருகில் உள்ள கலாபவன் மணியின் சொந்த ஊரான மணிக்கூடாரம் பகுதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.


நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம்! 5 பேரிடம் கேரள போலீசார் விசாரணை!
[Monday 2016-03-07 18:00]

நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சக நடிகர் ஜாஃபர் உள்ளிட்ட 5 பேரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாபவன் மணி, நேற்றிரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கலாபவன் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள அரசு, திருச்சூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுகேசன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா