மனித மலத்தை முகர ஆள்தேடும் நிறுவனம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 16, 2025 [GMT]

மனித மலத்தை முகர ஆள்தேடும் நிறுவனம்!
[Tuesday 2023-03-14 18:00]

மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலைக்கு ஆள் தேடி வருகிறது லண்டனை சேர்ந்த சுகாதார நிறுவனம். மலத்தை முகர்ந்து பார்க்கும் ஒரு எக்ஸ்பர்ட்டை தேடி வருகிறது யூ.கே.வை சேர்ந்த ஃபீல் கம்ப்லீட் என்ற நிறுவனம். குடல் ஆரோக்கிய ஆலோசனை சேவை நிறுவனமான ஃபீல் கம்ப்லீட், இந்த பணியில் சேருபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் மாதச் சம்பளமாக (1500 யூரோ) வழங்கவுள்ளது.


  

இந்நிலையில் "பூம்மெலியர்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பதவிக்கான ஆள் தேடல் நடைப்பெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும்.

மார்ச் 2023 இல் தொடங்கும் முதல் பூம்மேலியர் பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது குடல் ஆரோக்கியம், மனிதர்கள் தங்கள் உணவு பழக்கத்தில் மேற்கொண்டுள்ள மாற்றத்தால் உடலளவில் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடலிலுள்ள பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை சமபாடு அடையச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் உட்கொள்ளும் உணவு சரியாக செரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவேண்டும். தேவையற்ற ஊட்டச்சத்து கழிவுகளாக முறையாக உடலில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த சீரான செயல்முறைய பாதிக்கும்பொழுது உடல்நலக் குறைவு வரலாம். மனித மலத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், மலத்தின் நிறம், வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.

முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் ஹான்னா மெக்கே கூறுகையில், "யாருடைய மலமும் வாசனையோடு இருக்காது. எனினும், துர்நாற்றம் அதிகாமாக வெளியாகும் மலம் மொசமான குடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது" என்றார்.

டிஸ்பயாசிஸ் எனப்படும் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு, நம் உடலில் அதிக அளவில் மீத்தேன் வாயு உருவாக வழிவகுத்து, இந்த துர்நாற்றத்தை தூண்டலாம். இதற்கு அழற்சிகளும் முக்கிய காரணமாகும். அந்த சமயங்களில் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மேலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com


சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
[Saturday 2025-03-29 18:00]

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்!
[Monday 2025-03-24 18:00]

இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.


கனமழையால் செந்நிறமாக மாறிய தீவு!
[Saturday 2025-03-15 16:00]

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மரணத்தில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்!
[Thursday 2025-03-13 19:00]

அவுஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் மருத்துவர்கள் மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.


ரூ.65 கோடிக்கு கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற பிரித்தானிய மாணவி!
[Thursday 2025-03-13 06:00]

பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ.65 கோடிக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி லாரா (Laura), தனது கன்னித்தன்மையை £1.7 மில்லியனுக்கு ( இலங்கை பணமதிப்பில் ரூ.65 கோடி) விற்ற சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் இவ்விபரீதமான ஏலத்தில் மிக உயர்ந்த தொகையை வழங்கி அதைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆறு கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Tuesday 2025-03-11 19:00]

அமெரிக்காவின் அலபாமாவில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் எடையைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த குழந்தையின் எடை 6 கிலோவை விட சற்று அதிகம் இருந்ததுதான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்ணின் பெயர் பமீலா மெய்ன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், பர்மிங்காம் (Birmingham) பகுதியில் வசித்து வருகிறார்.


20 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்!
[Wednesday 2025-03-05 18:00]

20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தான்சானியாவில் தான் அந்த அதிசய மனிதர் வாழ்ந்துவருகின்றார். அதிலும் தனது 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறாராம் இந்த மனிதர். எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர்.


18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்!
[Wednesday 2025-02-26 06:00]

பிரித்தானியாவின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் தங்க கழிப்பறை திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்க கழிப்பறை துணிகரமாக திருடப்பட்ட அதிர்ச்சிகரமான தருணத்தை சமீபத்தில் வெளியான பாதுகாப்பு கேமரா காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.


100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் மீண்டும் வந்த அதிசயம்!
[Tuesday 2025-02-18 16:00]

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் தற்போது மீண்டும் வந்துள்ள அதிசயம் பிரேசிலில் நடந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து வரும் நிலையில், மனிதர்களாலும் பல உயிரினங்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றது.


உலகிலேயே விலை உயர்ந்த ரோஜா இதுதான்!
[Thursday 2025-02-13 19:00]

பொதுவாகவே காதலர் தினம் என்று வந்துவிட்டால் ரோஜா தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் மலர் என்ற பெருமையையும் இது பெருகின்றது. உண்மையில் ரோஜா மலரின் வாசனைக்கு ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ஒரு ரோஜாவைின் விலைக்கு ஒரு பெரிய ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?


Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா