புற்றுநோய் எதிர்ப்பு நிதிக்காக கனடியத் தமிழ் சமூகம் பாரிய அளவில் கூடி ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி உள்ளது. செம்படம்பர் மாதம் 5ம் திகதி நடாத்தப்பட இருக்கும் இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்குபற்றுவார்கள் என்றும் நூற்றுக்கணக்கான தமிழ் சமூகத்தினர் சமூகம் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுக் குழு கூடுதல் எதிர்பார்ப்போடு அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் 2ஆவது ஆண்டுத் தமிழீழக் கிண்ணத்தினை ஞாயிற்றுக்கிழமை 5ஆம் நாள் L'Amoreaux விளையாட்டு அரங்கில் நடாத்த உள்ளது. போட்டிகள் காலை 8:00 மணிக்கு தொடக்க நிகழ்ச்சிகளோடு தொடங்கி மாலை முடிவு நிகழ்ச்சிகளோடு நிறைவுபெறும்.
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.