தமிழன்னையின் புனித நாளாம் மாவீரர் நாளில் உலகத் தமிழராய் எழுச்சி கொள்வோம்: | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

தமிழன்னையின் புனித நாளாம் மாவீரர் நாளில் உலகத் தமிழராய் எழுச்சி கொள்வோம்:
[Friday 2018-11-23 17:00]

உங்கள் அழைப்பாக இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வைக்கும் சிறு நெருப்பு உலகளாவிய பெருநெருப்பாகட்டும்.

இந்தப் பூமிப்பந்தில் ஒரு பண்டைய இனம், மூத்த மொழியின் சொந்தக்காரர், பண்பாட்டு விழுமியங்களின் அடித்தளம், நாகரீகத்தின் பிறப்பிடம், வாழ்வியலின் கல்விக்கூடம், இயற்கை வைத்தியத்தின் இதயநாதம் எனப் பழங்கதைகள் பேசியே எம் காலம் கரைந்த வேளை தான், உலகலாவி வீழ்ந்துகிடந்த, இன்றும் வீழ்ந்து கிடக்கும், தமிழினத்தின் உந்து சக்தியாக, ஊக்க மருந்தாக, 1000 வருடங்களின் பின், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய ஒழுக்க மரபுகளின் நெறிப்படுத்தலில் - நாட்டுப்பற்று, வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய உயரிய பண்புகளைத் தாங்கி, தமிழன்னையிம் மூத்த மைந்தன் எங்கள் கரிகாலனின் தலைமையில், வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தூக்கி நிறுத்த, பிறப்பெடுத்தவர்கள் தான், தமிழ் அன்னையின் தவப்புதல்வர்கள், எங்கள் மாவீரர்கள்.


  

அவர்கள் யாசித்தது எல்லாம், தமிழினம் உரிமை பெற்ற மக்களாக, தங்கள் பாதுகாப்பை என்றும் தாங்களே உறுதிசெய்து கொள்கின்ற மக்களாக, மொழி, இன மற்றும் நாட்டுப்பற்றுக் கொண்ட மக்களாக, வாழ்வியலில் சிறந்த மக்களாக, பூமிப்பந்தில் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாக, அனைத்துத் துறைகளிலும் சாதிக்கின்ற மக்களாக, ஒற்றுமையான, ஒத்தாசையான, சமத்துவமான சமூகமாக, மனிதத்தை நேசித்து, மானிடத்திற்கு சேவை செய்கின்ற மக்கள் குழுமமாக, இந்தப் பூமிப்பந்தில் தலைநிமிர்ந்து தமிழினம் நிற்க வேண்டும், வாழ வேண்டும் என விரும்பி, அதை நோக்கிய பயணத்தில் தம் இனிய இளைய உயிர்களை, எம்மாக அர்ப்பணித்து தம் வரலாற்றுப்பணியை, எம்கைகளில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர், எம் இனத்தின் மைந்தர்கள்.

தமிழர்கள் உலகப்பரப்பில் எங்கு வாழ்ந்தாலும், அங்கெல்லாம் எம் தமிழன்னையின் இந்தத் தவப்புதல்வர்களை, ஆழ்மனதில் நிறுத்தி, அவர்கள் பணியை இனம் சார்ந்து முன்னகர்த்த, நாம் ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாளே நவம்பர் 27ஆம் நாள். இன்று தமிழர்களின் வாழ்வு, தாய்த் தமிழகமாக இருந்தாலும் சரி, ஈழமாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி, அல்லது தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எதுவாக இருந்தாலும் சரி, எதிர்கொள்ளும் சவால் நிலையை நாங்கள் ஒவ்வொருவரும் அறிவோம். அதை மாற்றியமைக்கும் வரலாற்றுப் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

இந்தப் பொறுப்பை உறுதிசெய்து கொள்ளும் வகையிலும், அதை ஓர்மத்துடன் முன்னகர்த்த திடசங்கர்ப்பம் பூண்டு கொள்ளும் வகையிலும், ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை, இந்தப் பூமிப்பந்தில் முரசறைந்து சொல்லும் நாளாகிய நவம்பர் 27ஆம் நாள், இந்தப் பூமிப்பந்தில் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், இந்த பத்து நிமிடங்கள் உலகளாவிய தமிழராய் ஒன்றிணைவோம். அந்த நிமிடங்களில் கைக்கொள்ள வேண்டி விடயங்கள் வருமாறு

நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

1) நினைவொலி எழுப்புதல் (இலங்கை இந்திய நேரப்படி மாலை 6.05 மணி) இதற்கான ஏனைய நாடுகளிலான நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

நீங்கள் வேலையிடங்களில் இருந்தால் அமைதியாக எழுந்து நின்று கொள்ளுங்கள்.

அவசர உயிர்காப்பு ஊர்திகள் தவிர, ஏனைய அனைத்துத் தனிப்பட்ட ஊர்திகளிலும் நீங்கள் பயணித்துக் கொண்டிருந்தால் சாலை விதிமுறைகளுக்கு அமைய சாலை ஓரமாக முன்கூட்டியே நிறுத்தி அமைதி பேணுங்கள்.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளாது வீடுகளில் உள்ள அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து இதனை ஒன்றாக முன்னெடுங்கள்.

வழிபாட்டுத்தலங்களில் இந்நேரத்தில் ஒரு மணித்துளி மணியெழுப்பும் ஒழுங்கமைப்பை முன்னெடுங்கள்

2) அடுத்து அகவணக்கம் (இலங்கை இந்திய நேரப்படி மாலை 6.06 மணி) சிலர் இதனை அஞ்சலி என்பர். அது தமிழ்ச்சொல் அல்ல என்பதால் தமிழன்னையின் தூய தமிழில் அகவணக்கம் என அழைக்கப்படுகிறது.

இந்நேரத்தில் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழ் மக்கள் எழுந்து நின்று தமிழுக்காய் தமிழினத்திற்காய் உயரிய அர்ப்பணிப்பைச் செய்த மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துங்கள். வேலைத்தளங்களில் மற்றும் வானங்களைத் தரித்து நிற்ப்போரும் இந்த அகவணக்கத்தை செலுத்துவோம்.

3) ஈகைச் சுடறேற்றல் (இலங்கை இந்திய நேரப்படி 6.07 மணி) இதற்கேற்ப சுடர் ஏற்றும் வகையில் முன்கூட்டியே சுட்டி ஒன்றையோ மெழுவர்த்தி ஒன்றையோ தயாராக வைத்துக் கொள்ளுங்கள். மங்கள விளக்குகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இதன்போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லப்பாட்டை ஒலிக்க விடுங்கள். அந்த வசதியில்லாதோர் இத்துடன் கீழே தரப்பட்டுள்ள அப்பாடல் வரிகளை பிரதியாக்கம் செய்து நீங்களாகவே எம் தமிழன்னையின் தவப்புதல்வர்களை மனதில் நிறுத்திப் படித்துக் கொள்ளுங்கள்.

இப்பாடலை கணணி அப் முலம் தரவிறக்கின்ற மற்றும் ஏனைய தொழில்நுட்ப வழிகளில் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறைமையை விரைவில் அடையாளப்படுத்தி வேலைத்தலங்களில் வாகனங்களில் உள்ளோரும் அதனை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் அறியத்தரப்படும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தொழில் நுட்பத்தில் வல்ல தமிழ்ச் சொந்தங்கள் இதற்கான வழியை ஏற்படுத்தி உங்கள் நாடுகளில் உள்ள தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

பாடல் முடிவில் உங்கள் மனதில் என் இனம் சார்ந்து அதன் வாழ்விற்கும் வளத்திற்கும் என்னால் முடிந்த பணிகளைச் செய்வேன் என உங்கள் மனத்திரையில் உங்கள் ஆழுமைக்குட்பட்டு விரியும் பணியை நினைத்து உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வீதிகளின் ஒரத்தில் வாகனங்களை தரித்து நிற்கும் போதும், வேலைத்தளங்களில் இதைக் கடைப்பிடுக்கின்ற போதும், அதன் பின்னரும் யாரும் என்னவென்று வினாவினால், எம் இனத்திற்காக எம் மண்ணிற்காக தம்மை அர்ப்பணித்த எமது வீரர்களின் நினைவு நாள் என்பதை பெருமையுடன் கூறுங்கள். இவ்வாறு தான் உலகளாவி ஒவ்வொரு இனக்குழுமமும் செய்கிறது.

இது எங்கள் அனைவரின் கூட்டுப் பொறுப்பு, இந்தச் செய்தியை உங்கள் முகநூலில் உங்கள் ருவிற்றறில் மட்டுமல்ல, இன்ஸ்ரகிராம் யூரியூப்பில் நேரடியாக தோன்றி உங்கள் செய்தியாகப் பகிருங்கள். உலகளாவிய தமிழர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்த மூன்று நாட்களில் வைக்கும் சிறு நெருப்பு வரும் செவ்வாய் உலகளாவிய பெருநெருப்பாகட்டும். உலகலாவிய தமிழ்ச் சொந்தங்கள், எல்லைகளைக் கடந்து தேசங்களைக் கடந்து, ஒன்றுபட்டார்கள். வீழ்ந்து கிடக்கும் தமிழினம் ஒன்றுபட்டு, செயல்வடிவம் பெற்று, மாவீரர்களின் கனவை நினைவாக்கும் வகையில், ஓர்மத்துடன் எழுந்து நிற்கிறது என்ற நல்ல செய்தியை, எங்கள் மாவீரர்களுக்கு உறுதியாகவும், சர்வஉலகிற்கும் காத்திரமான செய்தியாகவும், முரசரைந்து சொல்லுவோம்.

எம் மாவீரர்களின் நினைவுகள், எம்மை வழிநடாத்தும் உந்துசக்தியாக, என்றும் இருக்கும். மாவீரர்களினது இத்தகைய நினைவுகூரல் என்பது ஒரு நிகழ்வாக இருந்து விடாது, உலகலாவிய தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்த்து வரவேண்டும். இந்த எமக்குரிய உலகளாவிய நிகழ்வை தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும், நிலை நாட்டுவதற்காக எமது உலகலாவிய தமிழ்ச் சொந்தங்கள், அனைவரினதும் குறிப்பாக தாய்த்தமிழக உறவுகளின், மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்.

நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இதனை உலகளாவி நாடுகளில் கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்ற, அந்நாடுகளிலான நேரங்கள் வருமாறு. ஆரம்பித்த ஒரு நிமிடத்தின் பின், அகவணக்கம் செலுத்தி, அதன் பின் ஒரு நிமிடத்தின் பின் ஈகைச்சுடரை ஏற்றவும்.

தாயகம் - இலங்கை - மாலை 6.05 மணி
தமிழகம் - இந்தியா - மாலை 6.05 மணி

இங்கிலாந்து - பிற்பகல் - 12.35 மணி

ஏனைய ஜரேதாப்பிய நாடுகள் (பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிர்சலாந்து - பின்லாந்து - நோர்வே - சுவீடன் -டென்மார்க் - பெல்ஜியம் - இத்தாலி - நெதர்லாந்து - ஸ்பெயின்) - பிற்பகல் 1.35 மணி
கனடா
ஒன்ராரியோ - கியூபெக் - காலை 7.35 மணி
மணிட்டோபா - காலை 6.35 மணி
அல்பேட்டா - காலை 5.35 மணி
பிறிட்டிஸ் கொலம்பியா - அதிகாலை 4.35 மணி
அமெரிக்கா
நியூயோர்க் - நியூஜேசி - மசாசூசெட் - புளோரிடா - காலை - 7.35 மணி கலிபோனியா - வோசிங்டன் - அதிகாலை 4.35 மணி
சிங்கப்பூர் - இரவு 8.35 மணி
மலேசியா - இரவு 8.35 மணி

அவுஸ்திரேலியா
சிட்னி, மெல்பேர்ன், கன்பரா - இரவு 11.35 மணி அடிலேட் - இரவு 11.05 மணி
பிரிஸ்பென் - இரவு 10.35 மணி
டார்வின் - இரவு 10.05 மணி
பேர்த் - இரவு 8.35 மணி

நியூசிலாந்து - நவம்பர் 28 அதிகாலை 2.35 மணி (இங்கு மட்டும் மறுநாள் அதிகாலை என்பதை கவனத்தில் கொள்ளவும்)
தென்னாபிரிக்கா - பிற்பகல் - 2.35 மணி
மத்திய கிழக்கு
லெபனான், யோடன் - பிற்பகல் 2.35 மணி
ஈராக், சௌதி அரேபியா, பகரீன், கட்டார் - பிற்பகல் 3.35 மணி ஈரான், யேமன் - பிற்பகல் 4.05 மணி
ஓமான், யூனைட்டெட் அரெப் எமரேட் - பிற்பகல் 4.35 மணி

இது குறித்த ஆங்கிலவடிவத்தை விரைவில் எடுத்து வருகின்றோம். இதை ஆங்கில மயப்படுத்தி பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள், அதைச் நீங்களாகவே செய்யலாம். அதேவேளை காணொளிகள் மூலமாக இச்செய்தியை உங்கள் வேண்டுகோளாக வெளியிடுபவர்கள், விரும்பின் ஏனைய மொழிகளிலும் அதனைப் பகிர்ந்து கொள்வது வரவேற்கத்தக்கது. சிறந்ததும் கூட. ஒருவகையில் அம்மொழி மட்டும் தெரிந்த எமது இளைய உறவுகளுக்கு, புரிதலுக்கு உதவியாக இருப்பது மட்டுமன்றி, அம்மொழி சார்ந்த ஏனைய இன உறவுகளுக்கும் எம் செய்தி சென்றடைய பேருதவியாக இருக்கும்.

நேரு குணரட்ணம் (கனடா)

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா