2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை: உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நிகழ்வுகள்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை: உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நிகழ்வுகள்! Top News
[Wednesday 2018-11-28 19:00]

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை சுயநிர்ணய உரிமை தன்னாட்சி போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தான்டி திட்டதிட்டபடி மாவீரர் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர்


  

அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழந்த மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தாமல் இந்து பசுபிக் சமுத்திரத்தை மையமாகக் கொண்ட பூகோள அரசியலில் நிம்மதியாக ஈடுபட முடியாதென்பதை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டியதே தமிழ்த் தரப்பின் பிரதான கடமை.

ஆனாலும் நீதிமன்றத் தடையையும் தாண்டி மக்கள் புலிகளின் போர்க்காலப் பாடல்களை இசைத்தனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீ்திமன்றத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் கொழும்பில் உள்ள சிங்கள அரசியல் தலைவர்களே மீறி்ச் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பில் இருந்து விடுதலையாகி சுயாட்சி அதிகாரத்தோடு செயற்பட வேண்டுமென 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டமை குறித்து ஆச்சரியப்பட வேண்டிய அவசியமேயில்லை.

வடக்குக் கிழக்கில் சுயாட்சிக் கட்டமைப்பு வந்துவிடக் கூடாது என்பதிலேதான் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும் இலங்கை அரசும் இலங்கைப் படைத்தரப்பும் கவனமாகச் செயற்படுகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே மாவீரர் நாளை கொண்டாடக் கூடாது என வலியுறுத்தி திருகோணமலை கந்தாளாய் பிரதேசத்தில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களின் இயல்பான எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் சிங்கள இளைஞர்களில் சிலரை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்யத் துாண்டியிருக்கலாம் என அங்குள்ள செய்தியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

அதேவேளை, சிங்கள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் கண்டித்துள்ளார்.

இலங்கையில் இனஅழிப்பு போருக்குப் பின்னர், தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இலங்கை அரச படையினரால் அழித்தொழிக்கப்பட்டிருந்தன.

எனினும் தாயக மக்களால் துயிலுமில்லங்களில் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட கல்லறைகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றினர். தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிமுதல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவுத் தூபி முன்றலில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொழும்பு அரச இயந்திரத்தை மையமாகக் கொண்ட இலங்கைத் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மைத்திரி- மகிந்த ஜனநாயகத்துக்கு மாறாக செயற்படுகின்றனர் என்றோ இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படுகின்றது என்றோ சர்தேச நாடுகளுக்கு எடுத்துக் கூற வேண்ய தேவை தமிழத் தரப்புக்கு இல்லை.

அடுத்து இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இராசாபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி முற்பகல் 11.30க்கு இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.

இவற்றைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் இடம்பெற்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. தேராவில் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் ஆகியனவற்றில் வீரமறவர்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுதவிர தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்திலும் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வாறு தாயகம் உட்பட அனைத்து இடங்களிலும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

அதேவேளை, இந்த நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றவில்லை. அவர்கள் இருவரும் கொழும்பு அரசியல் நெருக்கடி விவகாரத்தில் தங்களை முழுமையாக ஈடுத்தியதால் இந்த நிகழ்வுகளில் பங்குபற்ற முடியவில்லை என தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்கள் இயல்பாகவே ஒன்று திரண்டு தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதையை வெளிப்படுத்திய இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பதை சம்பந்தன். சுமந்திரன் ஆகியோர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தாமல் இந்து பசுபிக் சமுத்திரத்தை மையமாகக் கொண்ட பூகோள அரசியலில் நிம்மதியாக ஈடுபட முடியாதென்பதை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டியதே தமிழ்த் தரப்பின் பிரதான கடமை.

மாறாக கொழும்பு அரச இயந்திரத்தை மையமாகக் கொண்ட இலங்கைத் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மைத்திரி- மகிந்த ஜனநாயகத்துக்கு மாறாக செயற்படுகின்றனர் என்றோ இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படுகின்றது என்றோ சர்தேச நாடுகளுக்கு எடுத்துக் கூற வேண்ய தேவை தமிழத் தரப்புக்கு இல்லை.

அத்துடன் அந்த அரசியல் நெருக்கடியில் ஒரு தரப்பை மாத்திரம் நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் ஜனநாயக மீறல். அரசியல் யாப்பு மீறல் என்பதை இருதரப்புமே ஈழத் தமிழர் விடயத்தில் 1948 இல் இருந்து மீறியுள்ளன.

* சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

* முள்ளியவளையில் கண்ணீர் மல்ல பொதுச்சுடர் ஏற்றிய மாவீரரின் தாயார்!

* சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!

* வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்!

* கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு அஞ்சலி!

* கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பெருமளவானோர் திரண்டனர்!

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா