Untitled Document
February 3, 2025 [GMT]
அடிக்கடி முதுகு வலி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
[Tuesday 2017-06-06 19:00]
 
முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

  

தண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு இருப்பதால் முதுகு வலி ஏற்படலாம்.

அதிக உழைப்பு: இதுதான் முதுகு வலியின் முதல் காரணம். இயந்திரத்தனமான உழைப்பும், ஓட்டமும் கைகளையும், கால்களையும் மொத்தத்தில் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் நாம் முனைந்து கெடுக்கின்றோம். இதன் காரணமாக.

* அதிகம் உழைத்த தசை
* அதிகம் உழைத்த தசை கால்கள்
* தசை பிடிப்பு

இவைகள் வலிக்கு காரணமாகின்றன.

* முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது.
* முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது
* கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது

இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

* முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு.
* சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி.
* மூட்டு வலி
* எலும்பு தேய்மானம்
* முதுகு தண்டு வளைவு

இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

* தண்டு வட புற்று நோய்
* தண்டுவட கிருமி தாக்குதல்
* தூக்கம் சரிவர இன்மை
* முறையான படுக்கையின்மை

ஆகியவை காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம். கீழ்கண்ட காரணங்கள் உங்கள் முதுகு வலிக்கு காரணமாக இருக்கலாம் என்பதனை அறியுங்கள்.

* அதிக மன உளைச்சலையுடைய வேலை.
* கர்ப்ப காலம்
* அதிக உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
* முதுமை
* படபடப்பு
* மனக் கவலை
* பெண்களுக்கு ஆண்களை விட முதுகு வலி அதிகமாக இருக்கும்.
* அதிக எடை
* புகை பிடித்தல்
* அதிக உழைப்பு
* முறையற்ற அதிக நேர உடற்பயிற்சி
ஆகியவை ஆகும்.

முதுகு வலியுடன் கீழ்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக தாமதிக்காது மருத்துவரை அணுக வேண்டும்.

* எடை குறைதல்
* ஜுரம்
* வீக்கம்
* விடாத தொடர் வலி
* காலில் இறங்கும் வலி
* முட்டிக்கு கீழ் இறங்கும் வலி
* ஏதாவது அடி, காயம்
* சிறுநீர் செல்வதில் பிரச்சினை
* கழிவு வெளியேறுவதில் பிரச்சினை
* பிறப்புறுப்புகள் மரத்து போதல்
* எக்ஸ்ரே
* எம்.ஆர்.ஐ.
* சிடி ஸ்கேன்

போன்று பல வகை பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை அறிய முடியும்.

பாதிப்புக்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

சயாடிகா எனும் தடித்த நரம்பு முதுகின் கீழ் பகுதியிலிருந்து காலின் பின் வழி இறங்குவது. இதில் வலி வரும் பொழுது

* கீழ் முதுகு வலிக்கும்
* உட்காரும் பொழுது வலிக்கும்.
* இடுப்பு வலிக்கும்.
* காலில் எரிச்சல், வலி இருக்கும்.
* கால், பாதத்தில் மரத்து போதல், வலி இன்றி இருத்தல், காலை நகர்த்துவதில் கடினம் ஆகியவை இருக்கும்.
* எழுந்து நிற்க முயலும் பொழுது தாங் கொண்ணா வலி இருக்கும்.
இந்த வலிக்கான காரணங்கள் * தண்டு வட பிரச்சினை
* கர்ப்பம்
* இடுப்பில் சதை பிடிப்பு
ஆகியவை ஆகும்.

தொடர்ந்து வலி இருந்தால்

* பக்க வாட்டில் திரும்பி படுத்து உறங்குங்கள்.
* உங்கள் படுக்கை மெத்தென இருக்கக் கூடாது. கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை பெற்று தரையில் பாய் போட்டு படுக்கலாம்.
* உட்காரும் பொழுது நாற்காலியில் கூன் போட்டு, குறுகி வழிந்து உட்காராதீர்கள்.
* பாதம் பூமியில் முறையாய் படிந்து இருக்க வேண்டும்.
* மருத்துவ உதவியுடன் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
* மனஉளைச்சல் நிவாரணத்திற்கு மருந்து, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சியாளர் உதவியுடன் தகுந்த உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* வலி என்று அதிக ஓய்வு வேண்டாம். சிறிது சிறிதாக நடக்க ஆரம்பியுங்கள்.
* வலி இருக்கும் இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முதல் 2, 3 நாட்கள் நாள் ஒன்றுக்கு 3 முறையாவது ஐஸ் ஒத்தடமும் பின்னர் சூடு ஒத்தடமும் கொடுக்க வலி நிவாரணம் கிடைக்கும்.
* முறையான

  
   Bookmark and Share Seithy.com



தேயிலை கெட்டுப்போகும்னு உங்களுக்கு தெரியுமா?
[Monday 2025-02-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் தேநீர் போடுவதற்கு பயன்படுத்தும் தேயிலை காலாவதியாகி கெட்டுப் போய்விட்டதை நாம் எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் புதிய நாளின் முதல் தெரிவாக தேநீர் இருக்கின்றது. தேநீர் அருந்துவது புத்துணர்ச்சியாக காணப்படுவதாக கூறுகின்றனர்.



உச்சி முதல் பாதம் வரை ஆராக்கியம் தரும் பாகற்காய்!
[Sunday 2025-02-02 17:00]

பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவை காரணமாக அதனை பலரும் உணவில் இருந்து ஒதுக்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் சருமம் முதல் தலைமுடி வரையிலான ஒட்டு மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இது போன்று ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் பாகற்காயில் உள்ளது.



புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்!
[Saturday 2025-02-01 16:00]

ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகவும் பார்க்ப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் செறிந்து காணப்படுவதால், உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலம்,ஞாபக சக்தி, ஆகியவற்றையும் சீராக்க பெரிதும் துணைப்புரிகின்றது. ப்ராக்கோலியில் கால்சியம் அதிகமாக காணப்படுவதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதுடன், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.



மாலை நேரத்தில் பூக்களை பறிக்கக்கூடாது: ஏன்?
[Friday 2025-01-31 18:00]

மாலை நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிக்கக்கூடாது என்று கூறுவதற்காக காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாலை வேளையில் பூக்கள் மற்றும் இலைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் அவற்றைப் பறித்தால் பாவத்திற்கு சமம் ஆகும். மாலை வேலையில் தான் பறவைகள், பூச்சிகள் தங்களது கூட்டிற்குள் வரும். எனவே அந்த நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளைப் பறிப்பது அவற்றை தொந்தரவு செய்வதற்கு சமம்.



சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
[Thursday 2025-01-30 18:00]

உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள். “சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது. இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு தரும் எண்ணெய்!
[Monday 2025-01-27 18:00]

பொதுவாக பெண்கள் தற்போது அதிகமான கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைபடுகிறார்கள். இதனை உணவுகள் பயன்பாடு , சிகிச்சை முறைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் பாவணை மூலம் கட்டுபடுத்த முடியும். அந்த வகையில் தலைமுடி பிரச்சினைகளை எளிய முறையில் குறைக்ககூடிய ஒரு மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



நாவூரும் சுவையில் காரசாரமான முட்டை சுக்கா!
[Sunday 2025-01-26 16:00]

பொதுவாகவே முட்டை என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இது ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகவும் பார்க்கப்படுகின்றது. முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை மசாலா, முட்டை தொக்கு, முட்டை வறுவல் என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் எப்போதாவது முட்டை கொண்டு சுக்கா செய்து சாப்பிட்டுள்ளீர்களா? மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Saturday 2025-01-25 20:00]

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்ச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.



பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு!
[Friday 2025-01-24 19:00]

பொதுவாக சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம். பிரியாணி பிரியர்களுக்கு பெரும்பாலும் கத்த்ரிக்காய் கிரேவியும் பிடிக்கும். அப்படியும் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் உங்க வீட்டில் இருந்தால் ஒரு முறை பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள். அப்புறம் அவர்களின் விருப்பப்பட்டடியலில் கத்திக்காய் முக்கிய இடம் பிடித்துவிடும். ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்கா கிரேவியை அட்டகாசமான சுவையில் விரைவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வாரத்திற்கு எத்தனை முறை அசைவம் சாப்பிடலாம்?
[Thursday 2025-01-23 19:00]

வாரத்திற்கு எத்தனை முறை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிக சத்துக்களைக் கொண்ட இந்த அசைவ உணவை தினமும் சாப்பிடலாமா? என்பது பலருக்கும் தெரியாது.



காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் வரும் பாதிப்புக்கள்!
[Wednesday 2025-01-22 18:00]

தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகமாகி வருகின்றது. இதற்காக கண்ணாடி அணிவதற்கு பதில் காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவது வழக்கமாகவும் இருந்து வருகிறது. ஆனால், அதனை முறைப்படி சரியாக அணிவது முக்கியம்.



இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்!
[Tuesday 2025-01-21 19:00]

பொதுவாக மலிவான விலையில் அதிக ஊட்டச்த்துக்களை கொண்ட காய்கறிகளின் பட்டியலில் பீட்ரூட் முக்கிய இடம் வகிக்கின்றது. இது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் உணவு என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் செரிந்த காணப்படுவமதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.



அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
[Monday 2025-01-20 18:00]

பொதுவாக பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. அந்த வரிசையில் எமக்கு ஏற்படும் சாதாரண நோய்கள் முதல் தீவிரமாகும் நோய்கள் வரை அனைத்தையும் கட்டுக்குள் வைக்கும் வேலையை அத்திப்பழம் செய்கின்றது. அதன் பழங்கள் மட்டும் இல்லாமல் இலைகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா?
[Sunday 2025-01-19 19:00]

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் குறிப்பிட்ட விடயங்களை எச்சரிக்கின்ற தன்மை கொண்டவை என குறிப்பிடப்படுகின்றது.



குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள்!
[Saturday 2025-01-18 19:00]

குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள் குறித்தும், ஏன் சமைக்கக்கூடாது என்பதைக் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் பயங்கர பிஸியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வேலைகள், சமையல் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கவே நினைக்கின்றனர். அதிலும் சமையல் வேலை என்றால், எந்த காய்கறி, பருப்பு இவற்றினை வேக வைக்க வேண்டும் என்றால் உடனே குக்கரில் வைத்து விரைவில் சமைத்து விடுகின்றனர்.



முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா?
[Thursday 2025-01-16 19:00]

இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சருமத்தின் அழகை தக்க வைகடக அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும்.



தாங்க முடியாத பேன் தொல்லையா? தலையை விட்டு ஓட ஓட விரட்டும் மருத்துவம்!
[Wednesday 2025-01-15 17:00]

பொதுவாக பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று. முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களும், தலைமுடிகளில் அழுக்கு இருந்தாலும் கட்டாயம் பேன் பரவும். அப்படி பேன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இரு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்யலாம்.



கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் வேண்டுமா?
[Tuesday 2025-01-14 18:00]

பொங்கள் பண்டிகை என்றாலே பொங்கல் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. பொங்கல் விழா, மக்களால் தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஒரு நன்றி செலுத்தும் விழாவாக பார்க்கப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன் இனிப்பான பொங்கல் செய்து கொண்டாடி வருகின்றனர்.



நீரிழிவு நோயாளிகள் ருசித்து சாப்பிடும் சர்க்கரை பொங்கல்!
[Sunday 2025-01-12 18:00]

பொதுவாக சிறுதானியங்களை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் தண்ணீர் விடயத்தில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். தானியங்களின் வகைகளுக்கு ஏற்ப சரியான அளவில் தண்ணீர் சேர்த்து சமைக்காவிட்டால் அதன் சுவையில் பாரிய மாற்றம் ஏற்படும். அத்துடன் அளவு அதிகமாக வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்களும் மாற்றமடையும். தானியங்களை கொண்டு சமைக்கும் உணவுகள் உடலுக்கு உடனடியாக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.



உணவு விஷமாக மாறுவதற்கு காரணம் என்ன?
[Saturday 2025-01-11 16:00]

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடம்பிற்கு தேவையான சத்துக்களைக் கொண்ட உணவினை தெரிவு செய்து சாப்பிட்டாலே ஃபுட் பாய்சன் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகின்றது. நமது உடல் தேவை மற்றும் செரிக்கும் தன்மையை பொறுத்து உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் சராசரியான அளவில் தேவைப்படும் சத்துக்களுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா