Untitled Document
April 18, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!
[Friday 2025-04-18 16:00]

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணீஷ் என்ற நபருக்கு, சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி, சனிக்கிழமை அறுவை சிகிச்சைக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.



சளியை குணமாக்க 5 வயது சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்!
[Friday 2025-04-18 16:00]

சளிக்கு சிகிச்சை பெற வந்த 5 வயது சிறுவனை மருத்துவர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியில் இருந்துள்ளார்.



ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
[Friday 2025-04-18 16:00]

உலகின் மிக விலையுயர்ந்த நாயை நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர் ஒருவர் அரிய வகை ஓநாய் நாயை வாங்க 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அது உலகின் மிகவும் விலையுயர்ந்த இனமாக மாறியுள்ளது. இது ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்திற்கு இடையிலான கலப்பினமாகும். இந்த தனித்துவமான விடயத்தினால், செல்லப்பிராணி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.



நோயாளியின் படுக்கையில் படுத்தவாறு வேலைபார்க்கும் மருத்துவர்!
[Friday 2025-04-18 16:00]

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் மருத்துவர் ஒருவர், படுக்கையில் படுத்தபடி வேலைபார்க்கும் புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேசத்தின் மௌரானிபூர் சமூக சுகாதார மையத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளியின் படுக்கையில் படுத்தபடி மருந்துச் சீட்டை எழுகிறார். அவருக்கு பின்னாள் வயதான பெண்ணொருவர் அமர்ந்து தனது உடல்நலப் பிரச்சனைகளை விவரிக்கிறார்.



கோவை கார் வெடிப்பு சம்பவம்: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Friday 2025-04-18 04:00]

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி (23.10.2022) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.



கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
[Friday 2025-04-18 04:00]

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்டது ரெங்கபாளையம். இந்த ஊரில் உள்ள பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முருகேசன் ஆவர். இவர் தனது தந்தையான கணேசனை அதே கிராமத்தை சேர்ந்த தனது தங்கையின் கணவரான கார்த்திகைச்செல்வன் என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக கத்தியால் தாக்கி மிரட்டியுள்ளார். இதனைத் தட்டிக் கேட்டதால் கார்த்திகைச்செல்வன் முருகேசனைத் தாக்கி கொலை செய்தார்.



“உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி” - முதல்வர் ஸ்டாலின்!
[Friday 2025-04-18 04:00]

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்குகள் இன்று (17.04.2025) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.



சீமான் பேச்சுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்: நீதிபதி கருத்து!
[Wednesday 2025-04-16 18:00]

சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.



டோலோ 650 குறித்த மருத்துவரின் எச்சரிக்கை பதிவு!
[Wednesday 2025-04-16 18:00]

டோலோ-650 மாத்திரையை இந்தியர்கள் Gems மிட்டாய போல் சாப்பிடுவதாக மறுத்த்துவர் ஒருவர் வெளியிட்ட கருத்து வைரலாகிவருகிறது. இந்தியாவில் பராசிடமால் (Paracetamol) குறைந்த உடல் வெப்பத்திலும் எளிதில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மருந்தாக இருக்கிறது. அதில், Dolo-650 எனும் பிராண்ட் மிகவும் பிரபலமானதாக வளர்ந்துள்ளது.



கள்ளக்காதலனுக்காக கணவரை கொன்று சாக்கடையில் வீசிய பெண்!
[Wednesday 2025-04-16 18:00]

வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள் எடுப்பவரான ரவீனா, ஒரு கட்டத்தில் வேறு பலருடன் இணைந்து வீடியோக்கள் எடுக்கத் துவங்கியுள்ளார்.



கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவரின் குடும்பம்: புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2025-04-16 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் சரண பசவேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அமரேஷ் (30). இவருக்கும் பூஜா (27) என்ற பெண்ணும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பூஜா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



போதைப்பொருள் கடத்தல்: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2025-04-16 06:00]

இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரை மிகவும் நீண்ட பகுதி. இப்பகுதியில் தொடர்ந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சந்திஷ் பொறுப்பேற்றவுடன் சில மாதங்களில் கடத்தல்காரர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்நிலையில் பீடி மஞ்சள் புகையிலை மருந்து பொருட்களை கடத்திக் கொண்டிருந்தவர்கள் தற்சமயம் ஒரு படி மேலே சென்று கொகையின் போன்ற உயர்ரக போதை பொருளை கடத்தும் நிலைமைக்கு வந்துவிட்டனர்.



புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
[Wednesday 2025-04-16 06:00]

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “17/04/2025 (வியாழக்கிழமை), 18/04/2025 (புனித வெள்ளி), 19/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 20/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) என தொடர் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



ராகுல், சோனியா காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Wednesday 2025-04-16 06:00]

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.



"ஈழப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ஜாட் படத்தைத் தடை செய்ய வேண்டும்" - சீமான் எச்சரிக்கை!
[Tuesday 2025-04-15 19:00]

ஜாட் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என சீமான் எச்சரித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்த கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், சன்னி தியோல், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி ஜாட்(Jatt) என்ற ஹிந்தி மொழிப்படம் வெளியானது.



வெயிலை தணிக்க முயற்சி: வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய கல்லூரி முதல்வர்!
[Tuesday 2025-04-15 19:00]

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ், லட்சுமி பாய் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வரான பிரத்யுஷ் வத்சலா, வகுப்பறை சுவர் முழுவதும் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரியின் C ப்ளாக் கட்டத்தில் உள்ள வகுப்பறையில் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா மாட்டு சாணத்தை பூசியுள்ளார்.



15000 கோடி மதிப்புள்ள அம்பானி வீட்டில் ஒரு ஏசி கூட இல்லை: ஏன் தெரியுமா?
[Tuesday 2025-04-15 19:00]

உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன. இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் அல்டமவுட்ன் சாலையில் இருக்கும் ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த இந்த ஆன்டிலியா வீட்டில் மொத்தம் 27 கட்டடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



பென்சிலால் ஏற்பட்ட பிரச்சனை: 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவர்!
[Tuesday 2025-04-15 19:00]

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி 4 நாள் விடுமுறைக்கு பிறகு, இன்று வழக்கம் போல் இயங்க தொடங்கியது. அப்போது 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர், வகுப்பறையில் வைத்து தனது பள்ளிக்கூட பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சக மாணவரை வெட்டியுள்ளார்.



ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
[Tuesday 2025-04-15 06:00]

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (வயது 8). ஜாபர் சாதிக் மகன் முகமது அபில் (வயது 10). சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) உள்ளிட்ட 5 சிறுவர்கள் இன்று (14.04.2025) காலை வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமது அபில்,ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.



“சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில்....” - ஆளுநர் பரபரப்பு பேச்சு!
[Tuesday 2025-04-15 06:00]

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் (14.04.2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவ நாளாக அறிவித்து ஆண்டு தோறும் சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா