Untitled Document
April 2, 2025 [GMT]
"பணியாளர்கள் பா.ஜ.க.வினரிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகும்” - அமைச்சர்!
[Tuesday 2025-04-01 06:00]

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்திக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், இவ்வளவு தொகை என்று ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு மனித சக்தி நாட்கள் என்றுதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தொழிலாளர் மதிப்பீடு எனப்படுகிறது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்திக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், இவ்வளவு தொகை என்று ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு மனித சக்தி நாட்கள் என்றுதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தொழிலாளர் மதிப்பீடு எனப்படுகிறது.

  

அது போலவே, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளொன்றிற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் எவ்வளவு என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-25- ஆம் ஆண்டிற்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு முழுமையாக வேலை செய்யும் பட்சத்தில் ரூ.319 வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணா மலை கூறியது போல இதர மாநிலங்களை விடத் தமிழ்நாடு இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக நிதி பெற்றுள்ளது என்பது உண்மையான தகவலே ஆகும். அவ்வாறு அதிக நிதி பெற்றதற்கான காரணம் தமிழ்நாடு இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தியதே காரணமாகும் தமிழ் நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பாடு குறித்த முக்கியமான மூன்று அம்சங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஒரு தேவை சார்ந்த திட்டமாகும் மேலும் தமிழகத்தில் எப்போதும் அதிக மான தேவை உள்ளது. முதல் காரணம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தவிர மற்ற காலங்களில் பெரும்பாலும் வறண்ட காலநிலை நிலவுகிறது. இதனால், ஊரக மக்கள் வேலைக்குப் பெரிதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை சார்ந்திருக்கின்றனர்.

இரண்டாவது காரணம்: தமிழக அரசின் திறமையான செயல் பாட்டு முறைகள். அரசு முன்கூட்டியே செயல் திட்டங்களைத் தயாரித்து, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணிகள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. உதாரண மாக, 2025–26 ஆம் ஆண்டிற்கான வேலைத் திட்டங்களை ஏற்கனவே 2025 மார்ச் மாதத்திலேயே தயார் செய்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது காரணம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெரும் பாலும் பெண்கள் மற்றும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்குப் பயனளிக்கிறது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளர்களில் 86சதவீதம் பெண்கள், 30சதவீதம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினராவர். எனவே, இத்திட்டத்தின் கீழ் நிதியைக் குறைப்பது அல்லது நிறுத்துவது, நேரடியாகப் பெண்கள் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தினரைப் பாதிக்கும் என்றதோடு இந்த முன்கூட்டிய திட்டமிடும் நடைமுறை பெரும்பாலான மாநிலங்களில் இல்லை என்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழ்நாட்டில் மிகுந்த திறனுடன் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட த்தை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தியதற்காக பிரதமர் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சரிடமிருந்து விருதுகளைப் பெற்றுள்ளது. இது தமிழகத்தின் திறமையான செயல்பாட்டிற்கான உறுதியான ஆதாரமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் படி மாநிலங்களின் மக்கள் தொகை, ஊராட்சிகளின் எண்ணிக்கை என்ற எந்த வேறுபாடும் குறிப்பிடப்படாமல் ஊரகப்பகுதிகளில் வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்கப்படவேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 2006 முதல் 2016-17 வரை ஒரு ஆண்டிற்கு பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு வேலை வழங்க போதுமான தொழிலாளர் மதீப்பீடு ஒன்றிய அரசால் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலேயே முழுமையாக வழங்கப்பட்டு வந்தது.

2017-18 முதல் 2024-25 (2018-19 தவிர்த்து) வரை நிதியாண்டின் தொடக்கத்தில் இலக்கீடு குறைத்து வழங்கப்பட்டு, வழங்கப்பட்ட மனித சக்தி நாட்கள் முழுவதும் எய்தியபிறகே பல்வேறு கட்டங்களாக கூடுதல் மனித சக்தி நாட்கள் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு அதிக மனித சக்தி நாட்களை எய்தி வருவதை அறிந்த நிலையிலும் 2024-25 ஆம் ஆண்டிற்கு தொடக்கத்தில் 20 கோடி மனித சக்தி நாட்களை மட்டுமே ஒதுக்கியது. இருப்பினும், தற்போது வரை 30.52 கோடி மனித சக்தி நாட்கள் எய்தப்பட்டுள்ளது. மனித சக்தி நாட்களை உயர்த்தி திருத்திய தொழிலாளர் மதிப்பீடு தருமாறு கோரிய கருத்துரு இன்று வரை ஒன்றிய அரசில் நிலுவையி லேயே உள்ளது மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்ப டும் நாளொன்றிற்கான ஊதியம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படை யில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசால் உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் செலவினம் கூடுவது இயல்பான ஒன்றுதான். அதற் கேற்ப நிதியினை ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒதுக்காமல் குறைவான மனித சக்தி நாட்கள் ஒதுக்கி வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒன்றிய அரசால் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்க ளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு நாள் ஊதிய விவரம் பின்வருமாறு : இவ்வாறு, ஒன்றிய அரசால் அரசிதழ் அறிவிப்பு மூலம் ஒப்பளிக்கப்டும் ஒரு நாள் ஊதியம் தமிழ்நாட்டிற்கு அதிகமாக உள்ளதால், செலவினம் அதிகமாக ஏற்படுகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளிற்கான ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் அதே வேளையில், இத்திட் டத்திற்கான ஆண்டு வாரியான ஒதுக்கீடு குறைக்கப்பட்டே வருகிறது. அவ்வாறு ஒன்றிய அரசால் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி விவரம் பின்வருமாறு, 2020-21 - 1,11,500 கோடி, 2021-22 - 98,000 கோடி, 2022-23 - 89,400 கோடி, 2023-24 - 86,000 கோடி, 2024-25 - 86,000 கோடி. மேற்குறிப்பிட்டுள்ளவாறு 2024-25 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 86,000 கோடி ருபாய் அளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் ஊதியம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுபோல, 2025-26 ஆம் ஆண்டிற்கும் அதே 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 2025-26 ஆண்டிலும் மீண்டும் ஊதிய நிலுவை ஏற்படும் சூழலே உருவாகும்.

இத்திட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதால் இத்திட்டத்தை நிறுத்த இயலாது என்பதை தெரிந்து கொண்டு, இத்திட்டத்திற்கான நிதியை குறைப்பது, மனித சக்தி நாட்கள் இலக்கீட்டினை குறைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இத்திட்டத்தினை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது நிரூபணமாகிறது. தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 109 லட்சம் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இதில் 77 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 92 லட்சம் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் செயல்திறன் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். 2021-22 முதல் 2024-25 வரையிலான 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 67 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 77 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சராசரியாக 64 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 88 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் சராசரியாக 70 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 83 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதிகமான குடும்பங்கள் பணிசெய்வது, நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் ஊதியம் மற்ற மாநிலங்களை விட அதிகளவில் இருப்பது. ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு இணையான செலவினம் ஏற்படுவது பொதுவான ஒன்றே ஆகும். 2021-22 முதல் 2024-25 வரையிலான 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 52 மனித சக்தி நாட்கள் வேலை ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலமான ராஜஸ்தானில் - 57 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திர பிரதேசம் - 52 நாட்கள், உத்திரபிரதேசம் - 47 நாட்கள், பீகார் - 45 நாட்கள், கர்நாடகா - 45 நாட்கள், மகாராஷ்டிரா - 45 நாட்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியக்கூறு 100 முழுமையாக ஒன்றிய அரசு வழங்குகிறது. கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் ஒன்றிய அரசு மற்றும் 25 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு மாநில அரசுக்கான நிதி விகிதம் 60:40 என பாஜக மாநிலத் தலைவர் கூறியது தவறான தகவல் ஆகும். தமிழ்நாட்டில் கடினமாக வேலை செய்துள்ள தொழிளாளர்களுக்கு, அவர்கள் செய்த உழைப்புக்கான ஊதியத்தை மட்டுமே உடன் விடுவிக்கக்கோரி ஒன்றிய அரசு வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை தணிக்கை செய்ய தமிழகத்தில் மிக வலுவான சமூக தணிக்கை அமைப்பு உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் ஒரு முழு வார காலத்திற்கு பணிகளை ஆய்வு செய்து கிராம சபையுடன் கலந்தாலோசித்து, குறைகள், முறைகேடுகள், மற்றும் நிவர்த்தி செய்ய வேண்டிய அம்சங்களை தணிக்கையில் குறிப்பிடும் அத்தகைய குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது, தேவையான குறைபாடுகளுக்கு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, செலவின தொகை மீட்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டு வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை முடிக்கப்பெற்று, தேசிய அளவில் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு சமூக தணிக்கை கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் குறைகளை தீர்ப்பதில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் திறமையை வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி இணை செயலர், இயக்குநர், திட்ட அலுவலர்கள் என தொடர்ச்சியாக தமிழ் நாட்டிற்கு வந்து கள ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் ஆய்வுக்குறிப்புகளுக்கு பதில்கள் மற்றும் நடவடிக்கை விவரங்கள் உடனடியாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டு வருகின்றது. உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற பரப்பளவில் மற்றும் மக்கள் தொகையில் அதிகம் உள்ள மாநிலங்கள் தமிழ் நாட்டைப் போன்று, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஒன்றிய அரசிடமிருந்து அதிக நிதி பெறுவது எப்படி என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சிறப்பாக செயல்படும் தமிழ் நாடு அரசின் நிர்வாகத்தினை பாஜக மாநில தலைவர் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?.

மேலும், இதர சில மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் கல்வி, மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு திட்டங்கள் தொடர்பான புரிதல் ஆகியவை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளதால் இத்திட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு பயனளிக்கிறது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளர்களில் 86சதவீதம் பெண்கள், 30சதவீதம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினராவர். எனவே, இத்திட்டத்தின் கீழ் நிதியை குறைப்பது அல்லது நிறுத்துவது, நேரடியாக பெண்கள் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தினரை பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005இன் மூலம் மற்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பான முறையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே பெரிய மாநிலங்களுக்கு நிகரான நிதியினை பெற்று வருகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் திறமையான செயல்பாட்டை குறைத்து மதிப்பீடு செய்வதை தவிர்த்துவிட்டு, ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சிறந்த நடைமுறைகளை உதாரணமாக கொண்டு செல்ல வழி வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிதியை குறைப்பது, மனித சக்தி நாட்களை குறைப்பது போன்று இத்திட்டத்தினை நீர்த்து போகும் நடவடிக்கைளை தவிர்த்து தமிழ் நாடு போன்று அனைத்து மாநிலங்களையும் சிறப்பான செயல்பாட்டை மேற்கொள்ள ஊக்குவித்து கூடுதல் நிதியினை வழங்க, ஒன்றிய அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அவர் கூறுகையில், “தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்கும் நிலையில் மத்திய அரசு செயல்பட்டாலோ அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை நிறுத்தி வைத்தாலோ தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் பா.ஜகவினரை நேரடியாக கேள்வி கேட்கும் நிலை உருவாகிவிடும்” என்று எனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!
[Wednesday 2025-04-02 18:00]

கச்சதீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்திய பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி அரசு முறை பயணமாக இலங்கை செல்கிறார். இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேச உள்ள மோடி, அங்கு இந்தியா உதவியுடன் செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக சட்டபேரவையில் தீரமானம் கொண்டு வரப்பட்டது.



பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் ரயில் ஓட்டுனருக்கு நேர்ந்த துயர சம்பவம்!
[Wednesday 2025-04-02 18:00]

பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் வேலையை முடித்துவிட்டு குடும்பத்தினரை சந்திக்க காத்திருந்த ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய மாநிலமான ஜார்கண்ட், சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர்.ரயில்வே லைனில் நேற்று இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 ரயில் ஓட்டுனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் உயிரிழந்தார். இவர் நேற்றைய தினம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.



சில மாதங்களில் திருமணம்: மாணவி எடுத்த தவறான முடிவு!
[Wednesday 2025-04-02 18:00]

இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி ஒருவருக்கு சில மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட துயர சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவாங்கி மிஷ்ரா (25) என்னும் இளம்பெண், பயோடெக்னாலஜி இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவந்துள்ளார்.



140 கிமீ பாதயாத்திரையாக செல்லும் ஆனந்த் அம்பானி!
[Wednesday 2025-04-02 18:00]

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 140 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக செல்ல உள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் உலகளவிலும் பெரும் பணக்காரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.



‘நித்தியானந்தா நலமாக உள்ளார்’ - கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்!
[Wednesday 2025-04-02 06:00]

நித்தியானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் என்பவர் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் இந்த தகவலைத் தெரிவித்த‌தாக கூறப்பட்டது. அதே சமயம் நித்தியானந்தாவிற்குச் சொந்தமான சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க இந்த முயற்சி நடைபெறுகிறதா? எனவும், அவர் மீதான வழகுகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு தகவல் பரப்பப்படுகிறதா எனவும் குழப்பம் எழுந்திருந்தது.



‘விடிய விடிய கடை இருக்கும்’ - மதுபான பார் ஊழியர்!
[Wednesday 2025-04-02 06:00]

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குத் திறந்து இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. அதே போல டாஸ்மாக் அருகில் உள்ள பார்களுக்கும் திறந்து மூட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த பார்கள் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதும் இல்லை டாஸ்மாக், மதுவிலக்கு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அதற்கு ஈடாக மாதாந்திர கட்டணமும் தேதி மாறாமல் மாமூலாக வசூலித்துக் கொள்கின்றனர். மற்றொரு பக்கம் கிளப் என்ற பெயரில் ஏராளமான தனியார் மதுக்கள் நகரங்களை ஆக்கிரமித்து வருகிறது.



கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று தீர்மானம்!
[Wednesday 2025-04-02 06:00]

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.



காதல் தோல்வியால் ஆட்டை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Tuesday 2025-04-01 19:00]

காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள், பெரும்பாலும் அதில் இருந்து மீண்டும் வேறு திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவெடுப்பது உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காக காதல் தோல்விக்கு பின்னர், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்துவார்கள்.



பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2025-04-01 19:00]

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத், பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.



CSK தோல்வியை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்ட இளைஞர் மரணம்!
[Tuesday 2025-04-01 19:00]

சென்னையில் இளைஞர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 28ஆம் திகதி, ஜீவரத்தினம் என்ற இளைஞரை சிலர் கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதை, ஜீவரத்தினம் கிண்டல் செய்ததால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என செய்தி வெளியானது.



2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய் பயணம் - கடலுக்கடியில் ஓடவிருக்கும் ரயில்!
[Tuesday 2025-04-01 19:00]

தொழில்நுட்பம் வளர வளர மக்களின் பயண தூரம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது. தரைக்கு மேல் புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடலுக்கு அடியில் 600 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை வரை கடலுக்கு அடியில் செல்லும் ரயிலை இயக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசகர் பணியகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.



“அனைத்தும் நன்மைக்கே” - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
[Tuesday 2025-04-01 06:00]

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடச் செல்வதாகக் கூறியிருந்த நிலையில் அன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.



வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை!
[Tuesday 2025-04-01 06:00]

சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் பிரபல வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த முதல் ஒரு மணி நேரத்திற்கு வாகன நிறுத்தத்திற்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



ஓய்வை அறிவிக்க உள்ளாரா பிரதமர் மோடி?
[Monday 2025-03-31 18:00]

பிரதமர் மோடி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் விளக்கமளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.



ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வந்துள்ளார்: விஜயை விமர்சித்த அண்ணாமலை!
[Monday 2025-03-31 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவை விமர்சித்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "களத்தில் நின்று தினமும் போராடுவதே அரசியல். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல்.



கும்பமேளா மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது!
[Monday 2025-03-31 18:00]

மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடுள்ளார். இயக்குனர் சனோஜ் மிஸ்ராவால் மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். டெல்லி நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து அவர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்டு குப்பை தொட்டியில் வீசிய மாணவி!
[Monday 2025-03-31 18:00]

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் இருந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்த துப்புரவு தொழிலாளி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் 4 நாட்களுக்கு முன்பாக நடந்தது.



“வரலாறு காணாத வெற்றியை காண்போம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
[Monday 2025-03-31 06:00]

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டது.



15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டுபிடிப்பு!
[Monday 2025-03-31 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ்வூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலாவது, இச்சிலை ஆவாண்டு என்னுமிடத்தில் இருந்ததாகவும், தற்பொழுது சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் கூறினார்.



எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
[Monday 2025-03-31 06:00]

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.


Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா