Untitled Document
April 15, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
[Tuesday 2025-04-15 06:00]

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (வயது 8). ஜாபர் சாதிக் மகன் முகமது அபில் (வயது 10). சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) உள்ளிட்ட 5 சிறுவர்கள் இன்று (14.04.2025) காலை வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமது அபில்,ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.



“சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில்....” - ஆளுநர் பரபரப்பு பேச்சு!
[Tuesday 2025-04-15 06:00]

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் (14.04.2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவ நாளாக அறிவித்து ஆண்டு தோறும் சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.



“எனது நண்பர் விஜயகாந்த் அற்புதமானவர்” - பிரதமர் மோடி புகழாரம்!
[Tuesday 2025-04-15 06:00]

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் நிறுவனரும், நடிகரும், அவரது கணவருமான மறைந்த விஜயகாந்த்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான நட்பு குறித்து ஆங்கில வடிவிலான வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.



பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி பரபரப்பு கடிதம்!
[Monday 2025-04-14 18:00]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



'ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்' - திக்குமுக்காடிய திருவண்ணாமலை!
[Monday 2025-04-14 18:00]

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.



திடீரென மோடியை புகழ்ந்த பிரேமலதா!
[Monday 2025-04-14 18:00]

விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதனிடையே தான் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணிக்குள் தேமுதிகவையும் கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்!
[Monday 2025-04-14 18:00]

டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 13 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துள்ளான்.



“காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது” - வரிச்சூர் செல்வம் பேட்டி!
[Monday 2025-04-14 06:00]

மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகளையும், கைகளில் தங்க நகைகளையும் அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்தும் வருபவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவரும், இவரது ஆதரவாளர்களும் கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்!
[Monday 2025-04-14 06:00]

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.



பட்டாசு உற்பத்தி ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு!
[Monday 2025-04-14 06:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் கோட்டவுரட்லா குருவட்டத்திற்கு உட்பட்டது கைலாசப்பட்டினம். இங்கு பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் (13.04.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



“ஆளுநர் ஆர்.என். ரவியை பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்” - கி.வீரமணி வலியுறுத்தல்!
[Sunday 2025-04-13 18:00]

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவாக பரிசு வழங்கும் விழா நேற்று (12.04.2025) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “கம்பராமாயணத்தில் பெண்களை போற்றி இருக்கிறார்கள். ஆனால், இப்போது கம்பன் காட்டிய பாதையை அழிக்கிறார்கள். சனாதன தர்மத்தை மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பேசுவது என்பது கலாச்சார இனப்படுகொலை தான். ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார்.



“வெப்ப அலை வீச வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
[Sunday 2025-04-13 18:00]

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (13.04.2025) நண்பகல் 01.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.



“மக்கள் அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது” - நயினார் நாகேந்திரன்!
[Sunday 2025-04-13 18:00]

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரின் பதவி காலம் முடிந்ததை ஒட்டி, புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் (11.04.2025) நடைபெற்றது. இதில்அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (12.04.2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார்.



காசியில் இந்த 5 பேரின் சடலங்களை எரிக்க அனுமதி இல்லை!
[Sunday 2025-04-13 18:00]

புனித தலங்களில் முதன்மையாக கருதப்படும் காசி முக்திக்கு பெயர் பெற்றது. காசிக்கு சென்றால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் வயதானவர்கள் காசிக்கு செல்வதை அதிகம் பார்த்திருப்போம். மேலும் இறந்தவர்களை காசியில் எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட 5 பேர்களின் சடலங்களை காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.



பொம்மை துப்பாக்கியைக் காட்டி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற வாடிக்கையாளர்!
[Sunday 2025-04-13 06:00]

பொம்மைத் துப்பாக்கியை வைத்து வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் 31 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தலிம் பாசு (31). அஞ்சல் துறையில் பணிபுரியும் இவர், நேற்று சர்வே பார்க் பகுதியில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியாளர்களிடம் தங்களிடம் உள்ள அனைத்து பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். தலிம் பாசு பொம்மை துப்பாக்கியை வைத்திருப்பதை உணர்ந்த வங்கி மேலாளரும், வாடிக்கையாளர்களும் அவரை பின்னால் இருந்து அடித்துள்ளனர். இதில் கீழே விழுந்த அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்!
[Sunday 2025-04-13 06:00]

சிதம்பரத்தில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி 44 பேரை கைது செய்துள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மத்திய அரசின் புதிய வக்ஃபு சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறையை நிறுத்து வலியுறுத்தியும் சிதம்பரத்தில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.



“இரட்டை இலையோடு இருந்தாலும் தாமரை மலரும்” - தமிழிசை அதிரடி பேச்சு!
[Sunday 2025-04-13 06:00]

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, (12-04-25) சென்னை வானகரம் சென்னை வானகரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனுக்கு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார். அதன் பின்னர், கோப்புகளில் கையெழுத்திட்டு பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.



பூனையை காப்பாற்ற முயன்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!
[Saturday 2025-04-12 18:00]

கேரள மாநிலம் திருச்சூர் ஒல்லுக்கார பகுதியை சேர்ந்தவர் 44 வயதான சிஜோ திமோதி (Sijo Timothy). சிஜோ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9;41 மணியளவில், மன்னுத்தி கலத்தோடு சந்திப்பின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ஒரு பூனை ஒன்று சாலையின் நடுவே இருந்த தனது குட்டியை மீட்க போராடி கொண்டிருந்தது.



சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட அமைச்சர் பொன்முடி!
[Saturday 2025-04-12 18:00]

கூட்டம் ஒன்றில் சர்ச்சையாக பேசியது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான பொன்முடி கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அதிமுக - பாஜக கூட்டணி அறிவித்த நிலையில் திமுகவையும் சேர்த்து விமர்சித்த விஜய்!
[Saturday 2025-04-12 18:00]

அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், "குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா