Untitled Document
June 2, 2024 [GMT]
கொண்டு செல்ல பணம் இல்லாததால் யாழ். வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!
[Saturday 2016-01-23 08:00]

குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது 56) என்பவரின் சடலமே வீட்டின் வறுமைச் சூழ்நிலையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக் கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது 56) என்பவரின் சடலமே வீட்டின் வறுமைச் சூழ்நிலையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக் கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

  

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் கடந்த 20 ஆம் திகதி மரணமானார். மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். மரண விசாரணை முடிந்த பின்னரும் சடலத்தை உறவினர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களிடம் பணம் இல்லாததால் இரு நாட்கள் வைத்தியசாலையில் சடலம் காத்திருக்க வேண்டியிருந்தது. உறவினர்களிடம் கடன்பட்டே சடலத்தை அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சொந்த இடத்துக்குக் கொண்டு சென்றனர் என மேலும் தெரிய வந்தது.

  
   Bookmark and Share Seithy.com



தெற்கில் படுமோசமான மழை - 7 பேர் பலி!
[Sunday 2024-06-02 19:00]

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவாக 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.



கிழக்கில் இருந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி!
[Sunday 2024-06-02 19:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர்கள் தெரிவித்தனர். களமிறக்கப்படும் வேட்பாளர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
[Sunday 2024-06-02 19:00]

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள் மக்களை ஒன்றுபடுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கை!
[Sunday 2024-06-02 19:00]

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்றுபடுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.



வடக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
[Sunday 2024-06-02 19:00]

வடக்கில் அண்மையில் நியமனம் பெற்ற 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை கடமைகளைப்பொறுப்பேற்க முடியும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். நியமனம் பெற்றவர்கள் நாளை கடமையேற்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைகள் நாடு முழுவதும் நாளை மூடப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



புதனன்று ரணில் - மஹிந்த முக்கிய சந்திப்பு!- சூடு பிடிக்கிறது அரசியல் களம்.
[Sunday 2024-06-02 19:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.



குருக்கள்மடம் விபத்தில் இளைஞன் பலி!
[Sunday 2024-06-02 19:00]

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உள்ள குருக்கள் மடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



மோசமான வானிலை - பல மாவட்டங்கள் இருளில்!
[Sunday 2024-06-02 19:00]

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



பேருந்துகள் மோதி விபத்து - ஒருவர் பலி!
[Sunday 2024-06-02 19:00]

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் இன்று காலை மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சாவகச்சேரி இளைஞனிடம் பண மோசடி- மத போதகர் கைது!
[Sunday 2024-06-02 19:00]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில், கைதான நீர்கொழும்பைச் சேர்ந்த மத போதகரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஊர்காவற்றுறையில் நீர்நிலையில் இருந்து 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!
[Sunday 2024-06-02 05:00]

யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.



குருநகர் சேமக்காலையில் பெண் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை! - பட்டப்பகலில் சம்பவம். Top News
[Sunday 2024-06-02 05:00]

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் சவக்காலைக்கு அழைத்து வந்து தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிப் படுகொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



நான் தமிழ் பொது வேட்பாளருக்கு மாறானவன்! - மார் தட்டுகிறார் சிவிகே.
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கும். என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.



குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை!- வருகிறது புதுச்சட்டம்.
[Sunday 2024-06-02 05:00]

கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐதேகவின் யோசனைக்கு விக்கி ஆதரவு! - ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பு.
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் சகல விதமான முயற்சிகளையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்களிப்பதற்கான பொதுமக்களின் உரிமைக்கு மதிப்பளித்து, தேர்தல்களை உரிய காலப்பகுதியில் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மானுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
[Sunday 2024-06-02 05:00]

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனான தொடர்பு குறித்து இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.



பௌத்த மதத்திற்கு முன்னுரிமை - ரணில் உறுதி.
[Sunday 2024-06-02 05:00]

பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பின் படி முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.



தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு மேலும் மூன்று அமைப்புகள் ஆதரவு!
[Sunday 2024-06-02 05:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.



வடக்கு மாணவர்கள் அதிகளவில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி!
[Sunday 2024-06-02 05:00]

இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.



தேர்தல்களை பிற்போடக் கூடாது! -சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்.
[Sunday 2024-06-02 05:00]

நாட்டின் தேசிய தேர்தல்கள் பிற்போடப்படக்கூடாது எனவும், அவை உரியகாலத்தில் ஜனநாயகமுறைப்படி நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா