Untitled Document
May 29, 2024 [GMT]
இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
[Saturday 2018-07-21 09:00]

சுவசரிய  இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
சுவசரிய சேவையை வட மாகாணத்திற்கு விஸ்தரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாண மாநகர சபை திடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுவசரிய சேவையை வட மாகாணத்திற்கு விஸ்தரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாண மாநகர சபை திடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

  

இந்த நிகழ்வின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொள்வார். அவசர நிலைமைகளில் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வழிவகுக்கும் இலவச சுவசரிய அம்புலன்ஸ் சேவை இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை மேற்கு, தெற்கு மாகாணங்களில் அமுலில் உள்ளது. இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்க இந்திய அரசாங்கம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான தொகையை வழங்கியது.

இதனை அடுத்தடுத்து ஊவா, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணங்களில் தொடங்கி அடுத்தாண்டுக்குள் நாடு முழுவதும் விஸ்தரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் சுவசரிய அம்புலன்ஸ் சேவையை இலவசமா பெற முடியும். இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் 83 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தேர்தல் ஆணைக்குழுவுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு!
[Wednesday 2024-05-29 04:00]

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.



தமிழர்களைஅவமதித்த பாதணி நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை! Top News
[Wednesday 2024-05-29 04:00]

ஈழத்தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகளை, உற்பத்தி செய்த டிஎஸ்ஐ நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர்,க.சுகாஷ், அழைப்பு விடுத்துள்ளார்.



தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது!
[Wednesday 2024-05-29 04:00]

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியை சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார்.



தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமல்ல!
[Wednesday 2024-05-29 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாராளுமன்றத்தின் ஆணையை நீடித்துக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் முன்மொழிவு அடிப்படைக் கொள்கைகளைக் கேள்விக்குட்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.



தேர்தலைப் பிற்போட முடியாது! - ஐக்கிய மக்கள் சக்தி.
[Wednesday 2024-05-29 04:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கீன்ஸ் நெல்சன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!
[Wednesday 2024-05-29 04:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும். அதனை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :



வடக்கு கிழக்கிற்கு அடுத்த வாரம் மீண்டும் தொடர் மழை!
[Wednesday 2024-05-29 04:00]

எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



திருநெல்வேலி உணவகத்தின் சோற்றுப் பொதியில் மட்டத்தேள்!
[Wednesday 2024-05-29 04:00]

திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.



வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!
[Wednesday 2024-05-29 04:00]

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.



தீவகப் பாடசாலை விடுதியில் கொடுமை- 11 மாணவிகள் தப்பிச் சென்று பொலிசில் சரண்!
[Wednesday 2024-05-29 04:00]

யாழ்ப்பாணம், தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.



ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு!
[Tuesday 2024-05-28 16:00]

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.



பாதணியில் கார்த்திகைப் பூ -தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!
[Tuesday 2024-05-28 16:00]

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரியில் விபத்து - 4பேர் காயம்!
[Tuesday 2024-05-28 16:00]

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!
[Tuesday 2024-05-28 16:00]

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சிலாபத்துக்குச் சென்ற விசேட படையினர் இவ்விருவரையும் கைது செய்தனர்.



நிலந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரும் மனு- ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்க உத்தரவு!
[Tuesday 2024-05-28 16:00]

ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும்!
[Tuesday 2024-05-28 16:00]

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும். அதுவரையில், பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் கொலை? - கணவன், இரு பெண்கள் கைது!
[Tuesday 2024-05-28 16:00]

முல்லைத்தீவு பகுதியில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



யாழ். வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் உள்நுழைந்தவர் - பாதுகாப்பு ஊழியரை தாக்கினார்!
[Tuesday 2024-05-28 16:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சொந்தக் கட்சிக்கு சூனியம் வைக்கிறார் லால்காந்த!
[Tuesday 2024-05-28 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவால் அரசாங்கத்தை திறம்பட நடாத்த முடியாததென்பது தெரியுமென்பதால் தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அநுர தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.



மீன் வியாபாரி கொலை- கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
[Tuesday 2024-05-28 16:00]

மட்டக்களப்பு - மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா